Tuesday, 14 August 2018

வள்ளலார் இராமலிங்கப் பெருமான்

இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார் . பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் . அடுத்து நிகழ்ந்தது என்ன ?

ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் அமரச் சொன்னார் . இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் . அதைக் கவனித்த ஆசிரியர் கண்டு கொள்ளாதது போல் பாடம் நடத்த ஆரம்பித்தார் . அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள்..... முதல் பாடமாகும் . ஆசிரியர் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும் . ஆசிரியர் சொல்லிக் கொடுத்தப் பாடல் .....

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல, இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள். இராமலிங்கம் சொல்லாததைக் கவனித்த ஆசிரியர் "ஏன் நீ சொல்ல வில்லை " என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்டார். அதற்குத் தயங்கி பதில் சொல்லாமல் இருந்தார் இராமலிங்கம் . "மீண்டும் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறாய் வாய் திறந்து பேசுடா "என்று மிரட்டுவது போல் ஆசிரியர் கேட்டார் .

இராமலிங்கம் பதில் சொல்ல ஆரம்பித்தார் !

ஐயா நீங்கள் நடத்திய பாடத்தில் நல்ல கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது.

மேலும்..."வேண்டும் " என்று நல்லபடியாக கேட்காமல்.... "வேண்டாம்.... வேண்டாம்..." என்று ஏன் கேட்க வேண்டும்...

ஆதலால் .... நான் அப்படி சொல்ல விரும்ப வில்லை என்று இராமலிங்கம் பதில் அளித்தார் . ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது . "என்ன... அருமையான கருத்து கலந்த வரிகள் உள்ள பாடலாகும் அதைப்போய் அமங்கலம் என்று சொல்கிறாய் , அப்படியானால் நீ பெரிய அறிவாளியா ? உங்கள் அண்ணன் சபாபதி என்னிடம் பயின்று இன்று பெரிய புராண சொற்பொழிவாளராகி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார் . அவருடைய தம்பியாகிய நீ இப்படி குதற்கமாகப் பேசுகிறாயே..!" என்று வினவியதுடன் "அப்படியானால்...  நீயே ஒரு பாடலை சொல் பார்ப்போம்" என்று கிண்டலாக அதட்டலாகக் கேட்டார் .

[இவை யாவும் மற்றவர்கள் எழுதி வைத்தவையாகும் . அருட்பாவில் ஆதாரம் இல்லை ]

இராமலிங்கம் மிகவும் மிகுந்த மரியாதையுடன் பாடலைப் பாட ஆரம்பித்தார் .

வள்ளல் பெருமனார் பாடிய பாடல் வருமாறு ....

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும்

பொய்மை பேசா திருக்க வேண்டும்

பெரு நெறி பிடித் தொழுக வேண்டும்

மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்

மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும்.

உனை மறவாது இருக்க வேண்டும்

மதி வேண்டும்

நின் கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்.....

என ...

வேண்டும் வேண்டும் .... என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .

அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர். அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதியானார்கள் .

இராமலிங்கம் "உனக்குப் பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி திட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு" என்று குரல் கம்மிடவும் குறு நா உளறவும் படபடத்து பதில் உரைத்தார் .

இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும் , பக்குவ நிலையையும் , கந்தக் கோட்டஞ் சென்று கவி பாடும் திறமையையும் கண்ட மகாவித்துவான், இராமலிங்கம் கல்லாது உணரவும், சொல்லாது உணரவும், உணர்த்தவும், அறிவில் வல்லவர் என்று உணர்ந்து கல்விக் கற்பிப்பதை கைவிட்டு விட்டார்..
 
அன்றிலிருந்து பள்ளிக்குச் செல்லாமல் சென்னையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச சென்று கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார் இளம் வயதிலேயே இறைவன் மீது பல பாடல்களை இயற்றிப் பாடினார்...

இராமலிங்கப் பெருமான் எந்த பள்ளியிலும் பயின்றது இல்லை!,

ஓதாது உணர்ந்த உத்தமர் அவர்...

எந்த ஆசிரியரிடத்தும் படித்தது இல்லை! எவரிடத்தும் உபதேசம் பெற்றது இல்லை ! எவரிடத்தும் தீட்சை பெற்றது இல்லை!

சரியை,கிரியை,யோகம்,ஞானம், போன்ற ஆன்மீக பயிற்சிகள் எதுவும் பெறவில்லை.

கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார் கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்...!

கல்வியும் கேள்வியும்,பதிலும், கருத்தும் இறைவனிடமே பெற்றதே தவிர வேறு யாரிடமும் கேட்கவில்லை கற்கவில்லை..!

வேறு எந்த நூல்களில்  இருந்தும் படித்து தெரிந்து கொள்ள வில்லை.... அனைத்தும் தானாக தயவால் உணர்ந்தது..... என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்....

அனைத்தையும் உள்ளொளியால் தானாக உணர்ந்தார்கள்..

வேண்டாம்... என்று முடியும் பாடலைப் பாடாது ....

வேண்டும் வேண்டும்... என்று வள்ளல் பெருமனார் இளம் பருவத்தில் பாடியதிலிருந்து....நாம் புரிந்துகொள்வது என்ன..... ?

நாம் Negative thinking-யை விட்டொழித்து Positive thinking - யை வளர்த்துக்கொள்ள வேண்டும்....

ஆம்....ஆம்..

"எதிர்மறை சிந்தனையை நீக்கி நேர் சிந்தனையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்"

எனும் வாழ்வியல் நெறி முறையை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது...

அதுமட்டுமா....

★ "பெரு நெறி பிடித்து ஒழுக வேண்டும்"

என்று பள்ளி பருவத்திலேயே இராமலிங்கம் வேண்டிய வேண்டுதல்தான்.... பின்னாளில் சன்மார்க்கம் எனும் வழியை வகுத்து... உண்மைகளை மூடி மறைக்கும் நிறுவன மயமாக்கப்பட்ட சமயங்களிலிருந்து மாறுபட்ட வேறுபட்ட புதிய பாதையை உருவாக்கியது.
ஆன்மிக இரகசிங்களை வெளிப்படையாய் அறிவிக்கச் செய்து புரட்சியை ஏற்படுத்தியது.

★"நின் கருணை நிதி வேண்டும்..."

எனும் வேண்டுதல் தான்..... இராமலிங்கத்தை அருட்பிரகாச வள்ளலாராக்கியது.....

ஆம்.. இறைநிலையை உணர்ந்து தன்னை இறைநிலைக்கு உயர்த்தியது..

★சன்மார்க்க சங்கத்தீரே... இப்பாடலின் தொடக்கத்தை நன்றாக ஒன்றி கவனியுங்கள்...

"ஒருமையுடன்...... உத்தமர்தம் உறவு வேண்டும்"

ஆம்... வள்ளலார் வகுத்த சன்மார்கத்தின் ஆணிவேர் ...

"ஒருமை.... ஒருமை...ஒருமை.."

எவ்வித பேதம் - வேறுபாடு பார்க்காது ஒருமைப்பாட்டுடன்...

மனம் ஒன்றி...

ஒவ்வொரு மனிதனும் தன்னுள் இறை ஆற்றலை உணர்ந்து அனுபவித்து இறைநிலையை அடைய வேண்டும்....

சன்மார்க்கத்தில் உள்ளும் புறமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

Negative thinking - யை ஒவ்வொருவரும் நீக்கி positive Thinking -யை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே வள்ளலார் வழியில் பயணிக்க நினைப்பவர்களின் முதல் தகுதி....

(கருத்துப் பதிவு : அருள் பாவலர் சக்திவேல்)

No comments:

Post a Comment