Monday, 6 August 2018

பதினெட்டு தத்துவம் :

: பதினெட்டு தத்துவம் :
====================
ஆடிப்பெருக்கு காவிரியிலே பதினெட்டு
அய்யப்பன் ஆலய படிக்கட்டுகள் பதினெட்டு
அகிலம் அறிந்த சித்தர்கள் பதினெட்டு
தமிழ் இலக்கியங்கள் மேலும் கீழும் பதினெட்டு
அப்பா!டீன்ஏஜ் பருவமா பதினெட்டு
அப்படி என்ன தத்துவம் பதினெட்டு
ஏகாஷரத்தையும் அக்ஷ்டிஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் வருமே பதினெட்டு
"ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம்
அக்ஷ்டாஷகம் என்பது விஷ்ணுவினுடையது
சிவசக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே பதினெட்டு
புராணங்கள் பதினெட்டு
பகவத்கீதையின் அத்தியாயங்கள்
பதினெட்டு
காவல் தெய்வங்கள் இருக்கும் இடங்களிலோ படிக்கட்டுகள் பதினெட்டு
ஐந்து பஞ்சேந்திரியங்கள்
எட்டு ராகங்கள்,மூன்று குணங்கள்(தாமஸம்,சாத்வீகம்,ராஜஸம்)ஞானம் ஒன்று அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருபவர்க்கே இறையருள் சித்திக்கும் என்பதால் முக்கியத்துவம் பெறுவது பதினெட்டு
வாழ்க வளமுடன்
V.பாலு,துணை ஆட்சியர்(ஓய்வு)

No comments:

Post a Comment