Wednesday, 22 August 2018

ஆன்மிக கேள்வி பதில்கள்

. கே: ஒருவர் தன் இதயம் சொல்வதை கவனித்துக் கேட்க வேண்டும் என்பது ஏன்?

ப: நம் இதயத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதயம் நமக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். (பிறர் உணர்வுகளுக்கு ஏற்ப இசைந்து செயல்பட வேண்டும்) இரவு 11 மணிக்கு தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை எழுப்பி, “நீங்கள் சாப்பிடவில்லை,” என்று பாபுஜி கூறியது எனக்குத் தெரியும். “உங்களுக்கு அது எப்படித் தெரியும்?” என்று நான் கேட்டபோது, “அதை நான் உணர்கிறேன்,” என்றார்.

1706. கே: செய்த பாவத்தை விட அது பற்றிய குற்ற உணர்வு இன்னும் மோசமானது என்பது ஏன்?

ப: “குற்ற உணர்வை நீங்கள் சுமந்து கொண்டிருந்தால் உங்களை குற்ற உணர்வு அடையச் செய்தது எதுவோ, அதை விட இன்னும் அதிக பாவம் செய்கிறீர்கள்,” என்று பாபுஜி கூறினார். தவறுக்காக வருந்துதல் என்றால் அந்தத் தவறை மறந்து விட்டு, மீண்டும் அதைச் செய்வதில்லை என்று தீர்மானிப்பது என்று பொருள். எந்த ஒரு சடங்கும் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடியாது.

1695. கே: பிராணாஹூதியின் சக்தியை மாஸ்டர் எவ்வாறு விளக்குகிறார்?
ப: இந்தப் பிரணாஹூதி சக்தியை தன் ஆளுமையில் பெற்றிருக்கும் ஒருவர், ஒரு கணநேரப் பார்வையில், ஒரு அப்யாசியின் மனத்தில் அச்சமயத்தில் இருக்கும் உள்நிலையை விட மிகவும் முன்னோக்கியுள்ள ஒரு உள்நிலையை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ உண்டாக்கமுடியும். இந்த பிரானாஹூதி சக்தியின் உதவி இல்லாவிட்டால் அதை அடைவதற்கு ஒரு ஆயுட்காலமே தேவைப்படும். இந்த பிராணஹூதி சக்தியின் மூலமாக மகான்கள் எத்தனையோ முறை, ஒரு வெறும் கண நேரப் பார்வையில் ஒரு மனிதனின் இயல்பு முழுவதையும் மாற்றியிருக்கிறார்கள்.

1696. கே: அப்யாசியின் மீது மாஸ்டரின் அருள் எவ்வாறு படிப்படியாக வந்திறங்குகிறது?
ப: ஆரம்ப நிலைகளில் தெய்வீக அருள் அப்யாசிக்குள் மாஸ்டர் என்ற ஊடகத்தின் மூலமாக மட்டுமே பாய்கிறது. இதனால் அது மாஸ்டரின் அருள் என்றே பெரும்பாலும் பொருள் கொள்ளப்படுகிறது. மாஸ்டரின் மூலமாக வந்தாலும், நேரடியாக வந்தாலும், இரண்டு வகையிலும் வருவது அதே தெய்வீக அருள்தான். அப்யாசி அதை நேரடியாகப் பெறுவதற்குத் தகுதி உடையவராக ஆகும் வரையில், அதை அவருக்கு ஆசீர்வதிப்பது மாஸ்டரின் மீது சார்ந்திருக்கிறது. அப்யாசி அதை நேரடியாக ஈர்த்துக் கொள்ளும் தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கும் போது, மாஸ்டரின் வேலை நடைமுறைப்படி முடிந்து விடுகிறது. எனினும் அப்யாசியை பாதுகாக்கும் பொருட்டு அவர் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. உண்மையில் ஒரு உண்மையான மாஸ்டரின் உண்மையான செயல்பாடு இதுவே.

கே: ஆசைகளில் இருந்து எவ்வாறு விலகிச் செல்வது?
ப: ஆசைகள் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ நம் துன்பங்களும் அவ்வளவு குறைவாக இருக்கும். ஆனால் ஆசையில்லாதவர்களாக மாறுவது வேறொரு பிரச்னை. ஆசைகள் அதில் நாம் அகப்பட்டுக் கொள்கிற ஒரு சிக்கலான வலைப்பின்னலை உருவாக்குகின்றன. நாம் அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவு அதிகமாக முயற்சி செய்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த வலையின் கயிறுகள் இறுக்குகின்றன. இந்த சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு ஒரே வழி அவற்றிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்பி மிகவும் சத்தியமான விஷயத்தின் மீது நம் கண்களை நிலைநிறுத்துவது தான். இப்படி அவற்றை கவனிக்காமலே இருந்து விடுவதை ஒரு பழக்கமாக நாம் உருவாக்கிக் கொண்டால், விரைவில் அவை மறைந்து விடத் துவங்கும்; அதையடுத்து நம் துன்பங்களும் குறையும்.

1670. கே: துன்பங்களை ஒருவர் எப்படிப் பார்க்க வேண்டும்?
ப: வாழ்க்கையில் கஷ்டங்களும், துயரங்களும் முற்றிலும் இல்லாமல் போவது சாத்தியமில்லை; அது இயற்கையாதல்ல. உண்மையில் அவை நம்மை மேம்படுத்துவதற்காகவே அமைந்தவை. ஒரு நோயாளி உடன் நலத்தை திரும்பப் பெறுவதற்காக அவருக்குத் தரும் கசப்பு மருந்துகளைப் போன்றவை அவை. மிகச் சிறப்பான விஷயத்தைக் கூட தவறாகப் பயன்படுத்துவது பிரச்னையை உண்டாக்குகிறது. துன்பங்களின் விஷயமும் அதே மாதிரிதான். ஒவ்வொரு விஷயத்தையும் சரியான நேரத்தில், சரியான வழியில் சரியாகப் பயன்படுத்துவது நிச்சயமாக காலப்போக்கில் நல்ல பலன்களைத் தரும். உண்மையில் துன்பங்கள் நமக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக, நம் பாதையை சுலபமாக்குவதாக உள்ளன. வாழ்க்கையில் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதனுக்கு, அவனை உருவாக்குவதில் துன்பங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

கே: மதம் மீட்சியளித்தல் மற்றும் விடுதலையளித்தல் ஆகியவற்றைக் கையாள்கிறது. ஆன்மிகம் மெய்யுணர்வு நிலையைக் கையாள்கிறது. இது எவ்வாறு?
ப: எப்போதும் என்னைச் சுற்றிலும் இருக்கின்ற, எப்போதும் என்னுடன் இருக்கின்ற, எப்போதும் எனக்குள் இருக்கின்ற ஒரு முழுமையான பிரசன்னமாக விளங்கும் கடவுளை நான் மறுப்பதில், என் பிறப்புரிமையை, என் பிறப்பையே நான் மறுக்கிறேன். இதனால் என்னை ஒரு அநாதையாக, ஆன்மிக அநாதையாக, தனது சொந்த மூல உறவிலிருந்து துண்டிக்கப்பட்டவனாக, தன் வீடு எங்கே, தனது தாயும் தந்தையும் யார் என்று அறியாதவனாக ஆக்கிக் கொள்கிறேன். ஆகையால் தான் நாம் தனிமையாக, ஒதுக்கப்பட்டவராக உணர்கிறோம்; அதனால் துன்பப்படுகிறோம். பயப்படுகிறோம். ஆகவே மதம் மீண்டும் அதனுடன் நம்மை இணைப்பதாகச் சொல்லி நடிக்கின்ற இந்தத் தொடர்பு எப்போதுமே நீடித்து இருக்கும் தொடர்பேயாகும். அதை நாம் மீண்டும் கண்டறிய முயற்சிக்க வேண்டியதில்லை, அல்லது மீண்டும் உண்டாக்க வேண்டியதில்லை, ஆனால் அது இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகையால் மதம் மீட்சியளித்தல் மற்றும் விடுதலை அளித்தல் ஆகியவற்றைக் கையாள்கிறது. ஆன்மிகம் மெய்யுணர்வு நிலையைக் கையாள்கிறது.

கே: மதம் மீட்சியளித்தல் மற்றும் விடுதலையளித்தல் ஆகியவற்றைக் கையாள்கிறது. ஆன்மிகம் மெய்யுணர்வு நிலையைக் கையாள்கிறது. இது எவ்வாறு?
ப: எப்போதும் என்னைச் சுற்றிலும் இருக்கின்ற, எப்போதும் என்னுடன் இருக்கின்ற, எப்போதும் எனக்குள் இருக்கின்ற ஒரு முழுமையான பிரசன்னமாக விளங்கும் கடவுளை நான் மறுப்பதில், என் பிறப்புரிமையை, என் பிறப்பையே நான் மறுக்கிறேன். இதனால் என்னை ஒரு அநாதையாக, ஆன்மிக அநாதையாக, தனது சொந்த மூல உறவிலிருந்து துண்டிக்கப்பட்டவனாக, தன் வீடு எங்கே, தனது தாயும் தந்தையும் யார் என்று அறியாதவனாக ஆக்கிக் கொள்கிறேன். ஆகையால் தான் நாம் தனிமையாக, ஒதுக்கப்பட்டவராக உணர்கிறோம்; அதனால் துன்பப்படுகிறோம். பயப்படுகிறோம். ஆகவே மதம் மீண்டும் அதனுடன் நம்மை இணைப்பதாகச் சொல்லி நடிக்கின்ற இந்தத் தொடர்பு எப்போதுமே நீடித்து இருக்கும் தொடர்பேயாகும். அதை நாம் மீண்டும் கண்டறிய முயற்சிக்க வேண்டியதில்லை, அல்லது மீண்டும் உண்டாக்க வேண்டியதில்லை, ஆனால் அது இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகையால் மதம் மீட்சியளித்தல் மற்றும் விடுதலை அளித்தல் ஆகியவற்றைக் கையாள்கிறது. ஆன்மிகம் மெய்யுணர்வு நிலையைக் கையாள்கிறது.
கே: மாஸ்டரின் அருகில் நெருங்குவது எப்படி?
ப: மாஸ்டரை உங்கள் இதயத்தில் உணர்வதில் முக்கியமான தடைகளாக இருப்பது உங்கள் ஆசைகளாகும். சகஜமார்க்க பிரார்த்தனை இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. நீங்களே செய்ய வேண்டிய பயிற்சியைச் செய்து, ஒரு ‘ப்ரிஃபெக்டி’டம் சென்று ஒழுங்கான இடைவெளிகளில் ‘சிட்டிங்’ எடுத்துக் கொண்டு, நிலையான நினைவைப் பயிற்சி செய்யுங்கள். இதுதான் பயிற்சி முறையின் அடிப்படை. ஆனால் மாஸ்டரின் பிரசன்னத்தை உங்கள் இதயத்தில் உணர்வதற்கு நீங்கள் விரும்பினால் நிச்சயமாக நீங்களும் ஏராளமான விஷயங்களை விட்டு விட வேண்டியிருக்கும். இது பற்றி நீங்கள் சிந்தித்து, உண்மையில் உங்கள் பற்றுக்கள் எதில் உள்ளன என்பதைக் காண வேண்டும். உங்களால் சாத்தியமாவதற்கு ஏற்றபடி அவற்றில் சிலவற்றை விட்டு விட முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு மாஸ்டரின் அருகே நீங்கள் நெருங்குவீர்கள்.

கே: நினைத்திருப்பதனால் மட்டுமே பக்தி வளர்ச்சியடைய முடியும் என்பது எப்படி?
ப: நினைத்திருப்பதால் மட்டுமே பக்தி வளரமுடியும். கடவுளைத் தேடுவதில் நம் நேரத்தை நாம் வீணாக்கக் கூடாது. ‘தேடுவது’ என்ற வார்த்தையே தவறு. கடவுள் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். எனவே அவரைத் தேடுவது பற்றிய கேள்வி எங்கே வருகிறது? அவர் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும் என்னும் போது நாம் செய்ய வேண்டியது அவரைக் கண்டறிவது மட்டுமேயாகும். அதற்கு அவரையே நினைத்திருப்பதுதான் வழி.

கே: நாமறியாத, எங்கிருந்து வருகிறது என்று தெரியாத மூல ஆற்றல்களிலிருந்து நாம் சக்தியை ஈர்த்துக் கொள்ளும் படி செய்வது எது?
ப: பொதுவாக மக்கள் கடவுளை நோக்கி தயக்கத்துடன், அந்த சத்தியமான விஷயத்தை அடைவதற்கு நாம் மிகவும் திறமையற்றவர்களாகவும், பலவீனர்களாகவும் இருக்கிறோம் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டு போகிறார்கள். முதல் அடி எடுத்து வைத்தவுடன் ஏற்படுத்திக் கொண்ட சக்திவாய்ந்த ஒரு சங்கல்பம், தொடர்ந்து முழுவதும் நீடித்து இருந்தால், அது முழுமையான வெற்றியை அளிப்பதில் ஒருபோதும் தோல்வி அடையாது. ஒரு உறுதியான மனத்துடன் இந்தக் களத்தினுள் ஒருவர் நுழைந்தால் பாதியளவு தூரத்தை அவர் கடந்திருக்கிறார் எனலாம். ஒரே பார்வையில் கஷ்டங்களும், மனத்தின் சோர்வு நிலைகளும் கரைந்து போகும். இதனால் வெற்றியின் பாதை சுலபமாக்கப்படும். ஒரு தீர்மானமில்லாத மனப்பான்மை அரைமனதாகச் செய்யப்படும் முயற்சிகளுக்கே வழிவகுக்கும். பொதுவாக அது பகுதியளவு வெற்றியையே பலனாகத் தரும்; அல்லது பெரும்பாலும் தோல்வியளிக்கும். ஆகவே நமது உறுதியான சங்கல்பம் தான் நாம் எடுத்துக் கொண்ட பணியைச் செய்துமுடிப்பதற்கு, எங்கிருந்து வருகிறது என்று நாமறியாத சக்தி மூலங்களிலிருந்து சக்தியை தானாகவே நாம் ஈர்த்துக் கொன்ள்ளும்படியாகச் செய்கிறது.

கே: ஒருவர் பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்?
ப: மிகவும் விதிவிலக்கான, அசாதாரணமான சமயங்களில், அவசியத் தேவைகள் கிடைக்காமல் மனம் மிகவும் அமைதியற்றிருக்கும் போது தவிர மற்ற சமயங்களில் சாதாரண உலகியல் நோக்கங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மூடத்தனமாகும். நாம் எப்போதுமே எல்லாம்வல்ல, எல்லாம் அறிந்த மிக மேலான மாஸ்டரிடம் மட்டுமே – நம்மையே ஒட்டுமொத்தமாக மறந்து விட்டு, - அவர் மீது அன்பு மற்றும் அவருக்கு அடிபணிந்திருப்பதில் முற்றிலும் ஆழ்ந்து ஈடுபட்ட மனத்துடன் பிரார்த்தனை செய்யவேண்டும். பிரார்த்தனை செய்வதில் சரியான வழி இதுதான். இந்த மாதிரி மனநிலையில் செய்யப்படும் பிரார்த்தனை ஒரு போதும் பயனளிக்காமல் போகாது.

கே: வாழ்க்கையின் ஒரே சாதனையாக இருப்பது என்ன?
ப: பாபுஜி கூறியிருப்பது போல, இன்றைய உலகில் சகஜ மார்க்கம் தான் முக்தியாகிய லட்சியத்தை அடைவதற்கான மிகச் சுலபமான மற்றும் மிக விரைவான வழியாக இருக்கிறது. இதையடுத்து வரும் லட்சியங்களாகிய மெய்யுணர்வு நிலையடைதல் மற்றும் ஐக்கிய நிலை அடைதலும் கூட, இந்த வாழ்வில், இந்த ஒரே சாதனையில் – அதாவது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் லட்சியமாகவும் மனித வாழ்வின் லட்சியமாகவும் இருக்கும் இந்த ஒரே சாதனையைச் செய்வதில் – நம் மனங்களை உறுதியாக நிலைபெறச் செய்யும் பட்சத்தில், அவையும் கஷ்டமானவை அல்ல என்பதையும் அவர் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.

கே: பழங்கால முனிவர்கள் என்ன விதமாக வாழ்க்கை நடத்தினார்கள்?
ப: பழங்காலத்து முனிவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் படித்தால், சத்தியத்தை அடைவதற்காக வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் அவர்கள் தியாகம் செய்தார்கள் என்பதை அறிகிறோம். அவர்கள் ஆசார சீலங்களும், தவமும் உடைய ஒரு வாழ்க்கையை நடத்தினார்கள். அவர்களின் இதயத்துக்கு மிகவும் பிரியமானதாக இருந்த குறிக்கோளை அடைவதற்காக எல்லா விதமான கஷ்டங்களையும், பிரச்னைகளையும் அனுபவித்தார்கள். தங்கள் லட்சியத்தின் மீதான தீவிரமான ஏக்கம், அவர்கள் மற்ற அனைத்தையும் காணாத குருடர்களாகச் செய்தது. எனவே தங்கள் பாதையில் குறுக்கே வருகின்ற திருப்பங்கள், சிரமமான நிலைகள் இவற்றைக் கவனிக்காமல் அவர்கள் தங்கள் பாதையில் உறுதியாக நிலைத்திருந்தார்கள்.

* கே: நம்பிக்கை என்பது என்ன?
ப: உண்மையான அர்த்தத்தில் நம்பிக்கை என்பது அழியக் கூடிய ஒன்றை அழியாத ஒன்றுடன் இணைக்கின்ற உயிரோட்டமுள்ள தொடர்பாகும். அழியாத, நிலையான ஒன்றுடன் தானே இணைந்துள்ள மாஸ்டர் என்ற ஊடகத்தின் மூலமாகவே அது உண்டாக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த இணைப்பு ஒருமுறை இணைப்பு பெற்றுவிட்டால் எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையினாலும் உடைக்க முடியாததாக, அதன் இறுதிக் கட்டம் வரை நமது முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து உடன் வருகிறது (நீடிக்கிறது).

கே: மாயை பற்றி மாஸ்டர் எவ்வாறு விளக்குகிறார்?
ப: இந்த மிகப் பெரிய பிரபஞ்சம் பற்றிய ஒரு கருத்து நம் மனத்தில் இருக்கிறது. அது நாம் அனைவரும் அறிந்திருப்பது போல கடவுளின் திடப்பொருள் சார்ந்த உருத்தோற்றமாகும். மாற்றமில்லாத முழுமையான சத்தியத்திலிருந்து அதை வேறுபடுத்திக் காண்பதற்காக, பொதுவாக அதை மாயை அல்லது பொய்த்தோற்றம் என்பதாகப் பார்க்கிறோம். மாயையை எத்தனையோ வேறுபட்ட விதங்களில் விளக்குவதற்கு மக்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஏதோ ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் தான், அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். உண்மையில் மாயை ஒரு தெய்வீக சக்தி; அதுவே பிரபஞ்ச சிருஷ்டி முழுவதையும் அதனுடைய பல்வேறு வடிவங்களிலும் அமைப்புகளிலும், ஜீவிதத்துக்குக் (இயங்கும் தன்மைக்குக்) கொண்டு வந்தது; அதுவே அதன் செயல்பாடு முழுவதையும் ஒழுங்குபடுத்துகிறது. நாம் எப்போதும். எல்லா நிலைமையிலும் இந்த மகத்தான சக்தியால் சூழப்பட்டிருக்கிறோம். நமது நடவடிக்கைகளின் எல்லாக் கட்டங்களிலும், அதன் விளைவு கண்களுக்குப் புலப்படுகிறது.

*. கே: நாட்குறிப்பு எழுதுவது ஏன் முக்கியமானது?
ப: நாட்குறிப்பு மிகவும் பயனளிக்கும் ஒரு சாதனம். நீங்கள் அதை ஒரு வருடத்திற்குப் பிறகு படிக்கும் போது, உங்கள் ஆன்மிகம் எந்த வழியில் போயிருக்கிறது என்பதை நீங்களே அறிவதற்காக, ஒவ்வொரு நாளும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்வதற்கு உங்களுக்கு ஒரு கருவி அது. இந்தச் செயல் முழுவதன் மையப் புள்ளி, உங்களுடனும், உலகத்துடனும், உங்கள் குருவுடனும் முழுமையான நேர்மையுடன் இருப்பதில்தான் உள்ளது. உங்கள் வேலையில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.

1628. கே: ஒருவர் ஏன் மன்னிக்கவும், மறக்கவும் வேண்டும்?
ப: நாம் எப்போதுமே (பிறரின் தவறுகளை, குறைகளை) மறக்கவும், மன்னிக்கவும் வேண்டும். இதில் ‘எப்போது’ என்ற கேள்வியே இல்லை. இதற்கு எளிய தீர்வு என்னவெனில், இன்னொருவரின் இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பதேயாகும். நான் அவருடைய நிலைமையில் இருந்தால், மற்றவர்களிடமிருந்து நான் என்ன விரும்புவேன்? என்னை மன்னிப்பதையும், என் தவறை மறந்து விடுவதையும் நாடுவேனா? அல்லது எனக்கு தண்டனை கொடுங்கள் என்று சொல்வேனா?

*கே: நீங்கள் கடவுளிடம் சரணடையும் போது என்ன நிகழ்கிறது?
ப: நீங்கள் கடவுளிடம் சரணடையும் போது, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் சரணடைகிறீர்கள்.

.கே: புள்ளிகள் அல்லது சக்கரங்கள் என்பவை யாவை?
ப: நமது ஆன்மிக முன்னேற்றத்தின் போது நாம் சக்கரங்கள் என்று அறியப்படுகின்ற பல்வேறு புள்ளிகளின் வழியே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அவை மனிதனால் வாரிசுரிமையாகப் பெறப்பட்ட தெய்வீக ஆற்றலாகிய உண்மையான (சத்தியத்தின்) சக்தியின் வடித்தெடுக்கப்பட்ட சாராம்சமான ஆற்றலின் மையங்களாகும். அவை மனிதனின் உருவ அமைப்பிற்குள் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. நாம் (ஆன்மிகப் பயிற்சியில்) முன்னேறிச் செல்லும் போது இடையில் குறுக்கிடும் படலங்களின் இந்த சிக்கலான நிலைகளின் வழியே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நிலையின் வினைப்பயனை போகத்தை – அனுபவித்து முடிப்பதற்காக, கணிசமான அளவு நேரம் அங்கே தங்க வேண்டியிருக்கிறது. போகம் என்பது நமது கடந்த காலச் செயல்களின் விளைவை அனுபவிப்பது என்பது மட்டுமே அதன் பொருளல்ல. ஆனால் அதன் உண்மையான பொருள் நாம் ஏற்கெனவே எங்கே வந்து சேர்ந்திருக்கிறோமோ அந்தப் புள்ளியின் நுட்பமான தன்மைகளைக் கட்டவிழ்க்கும் செயல்முறையின் மூலமாக அதைக் கடந்து செல்லுதல் என்பதேயாகும்.

1631. கே: ஒரு குருவைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
ப: எந்த விதமான மனிதரை ஒரு வழிகாட்டியாக அல்லது குருவாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பிரச்னைக்கான தீர்வைத் தேடிக் கண்டறிவது சிரமமான விஷயமல்ல. நம் கண்கள் இறுதியான லட்சியத்தின் மீது நிலைபெற்றிருக்கும் போது, அதற்குக் குறைந்த நிலையில் இருப்பவராகத் தோன்றும் எந்த ஒரு மனிதருடனும் நாம் ஒருபோதும் திருப்தி அடைந்திருக்க முடியாது. ஒவ்வொரு மகான் அல்லது யோகியும், அவர் சொந்தமாக அடைந்துள்ள ஒரு உயர் நிலையை மற்றும் சுயமுன்னேற்றத்தை அடைந்திருக்கிறார். நம்பிக்கை மற்றும் பக்தியுடன் அவர்களில் யாராவது ஒருவருடன் நம்மை இணைத்துக் கொண்டால், மற்றும் அவருடைய அதிகபட்ச உயர்நிலைத் தன்மையுடன் ஐக்கியம் அடைந்தால் அதற்கிசைந்ததான ஒரு உயர்நிலையை நாமும் அடைவோம். ஆகையால் மிக அதிகபட்சமான உயர்நிலை எய்திருக்கின்ற ஒருவரையே நம் குருவாக நாம் தேர்ந்தெடுப்பது முற்றிலும் அவசியமானது.

1632. கே: பிரபஞ்சம் என்பது நான் என்ன உருவாக்குகிறேனோ அதுவே... இக்கருத்தை விளக்குக.
ப: நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, பிரபஞ்சமும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றுகிறது. மலர்கள் அற்புதமான வண்ணங்களில் திகழ்கின்றன. நீரில் அன்னப்பறவைகள் மிதந்து நழுவிச் செல்கின்றன. நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது உலகம் முழுவதும் இருண்டு, ஒளிமங்கி, பரிதாபகரமாகத் தெரிகிறது. எனவே நான் சொல்வதை நம்புங்கள், மிகவும் அந்தரங்கமான, நூறு சதவீதம் சொந்த உணர்வில் இந்தப் பிரபஞ்சம் நான் அதை எப்படி உருவாக்குகிறேனோ அப்படியே இருக்கிறது.
இன்றைய கேள்வி பதில்கள்

1633. கே: அன்பைக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை மாஸ்டர் எவ்வாறு விளக்குகிறார்?
ப: ஒரு மனிதன் அன்பு வேண்டும் என்று கேட்கக் கூடாது. அவனும் சரி அவளும் சரி. அன்பைக் கொடுக்க வேண்டும். இதுவே தத்துவங்களையெல்லாம் கடந்த தத்துவம்; சகஜ மார்க்கத்தின் சாராம்சம். யாரால் அன்பு செலுத்த முடியவில்லையோ, யாரால் அன்பு செலுத்துவதை கற்றுக் கொள்ள முடியவில்லையோ, யாரால் எந்த நிபந்தனையும் இல்லாமல், தடங்கல் இல்லாமல், அன்பை நாடுகின்ற அனைவருக்கும் எல்லா நேரங்களிலும், எதையும் ஒதுக்கி அல்லது நிறுத்தி வைத்துக் கொள்ளாமல் அன்பைக் கொடுக்க முடியவில்லையோ, அவர் ஆன்மிக வாதியல்ல.

1634. கே: பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை மாஸ்டர் எவ்வாறு விவரிக்கிறார்?
ப: பிரார்த்தனை மிகவும் சக்திவாய்ந்த ஒரு சாதனம் என்பது உனக்குத் தெரியும். ஆனால் பிரார்த்தனை மட்டுமே முக்கியமான ஒரே விஷயம் அல்ல. கடவுளின் அருள் அதில் கட்டாயம் இருக்கவேண்டும். ஆனால் அது யார் தங்களுக்கு உதவி செய்து கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் உதவி செய்யும்.
இன்றைய கேள்வி பதில்கள்
28.08.2018 செவ்வாய் கிழமை

1643. கே: ஆன்மிக பூரணமான அமைதி மற்றும் நடுநிலைத் தன்மையை உடைய ஒரு நிலை என்பது எப்படி?
ப: உண்மையில் ஆன்மிகம், அதனுடன் ஒப்பிடும் போது மற்ற அனைத்தும் கனமாக அல்லது கடினத்தன்மை உடையதாகத் தோன்றுகின்ற அப்படி ஒரு மிக நுட்பமான மனநிலையாகும். ஒரு ரோஜா மலரின் இனிய நறுமணத்தினால் புலன்களின் மீது உண்டாகும் மெல்லிய உணர்வு கூட அதை விட மிகவும் கனமானது. அதை இயற்கையோடு முழுமையாக ஒத்திசைந்துள்ள பூரணமான அமைதி மற்றும் நடுநிலைத் தன்மையை உடைய நிலை என்று நாம் தெரிவிக்கலாம். இந்த மனநிலையில் அனைத்துப் புலன்கள் மற்றும் அவற்றின் செயல்திறன்களும் ஒரு உறக்க நிலையில் (அல்லது உள்ளுறைந்த நிலையில்) இருக்கின்றன எனலாம். அவற்றின் செயல்பாடு மனத்தின் மீது எந்தப் பதிவையும் ஏற்படுத்தாமல் தாமே (தானாகவே) நடப்பதாக மாறுகின்றன.

1644. கே: ஒருவர் தன் நிதானத்தை இழந்த பிறகு மீண்டும் சுய கட்டுப்பாட்டை வரவழைத்துக் கொள்வது எப்படி?
ப: முதலில் இதற்கான பதில் என்னவென்றால் உங்கள் நிதானத்தை இழந்து விடாதீர்கள் என்பது தான். ஏனென்றால் ஒருமுறை நீங்கள் அதை இழந்து விட்டால், மீண்டும் மனக் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது மிகவும் சிரமம்.

.

No comments:

Post a Comment