Monday, 6 August 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

விளக்கம்:

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

பழமொழி

A honey tongue and a heart of gall.

 அடி நாக்கிலே நஞ்சும்  நுனி நாக்கில் தேனும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

நம்மிடம் நேர்மை, அன்பு,சுயநலமின்மை, நம்பிக்கை இவையாவும் இருப்பின்  தீமையைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் வராது.

-----விவேகானந்தர்

பொது அறிவு

1. சனி கிரகத்தின் நிறம் எது ?
 மஞ்சள்

2.பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பெருங்கடல் எது?   அட்லாண்டிக் பெருங்கடல்.

English words & meanings

* Zoogeology – study of fossil animal remains. புதையுண்ட விலங்குகள் குறித்த படிப்பு.

* Zincograph - Aristic work done on Zinc plate. துத்த நாக தட்டில் செய்ய படும் நுண் வேலை.

ஆரோக்ய வாழ்வு

பதநீரில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து தோய்ந்த வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியைத் தருகிறது.

Some important  abbreviations for students

* DC -  direct current

* DIY do-it-yourself

நீதிக்கதை

வழிபோக்கனும் வைரகல்லும்

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா? என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே! என்று திட்டினான். அதற்கு அவன், அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள் என்றான்.


திருக்குறள்:299


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.


விளக்கம்:


புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.


*பழமொழி*


Anything  valued where it belongs.


 எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.


*இரண்டொழுக்க பண்புகள்*


1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்


2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.


*பொன்மொழி*


எந்தக் குடும்பத்தில் இருள் இருக்கிறதோ அங்குதான் வெளிச்சம் தேவை... கல்வியும் வெளிச்சமும் ஒன்றேனப் படும்


---- காமராசர்


*பொது அறிவு*


1. பற்களைப் பற்றிய அறிவியலின் பெயர் என்ன?


 டென்டாலஜி


 2.உலகிலேயே அதிகமாக காணப்படும் ரத்த வகை எது?


 'O'ரத்த வகை


*English words & meanings*


Kelvin -the SI unit of temperature.

ஒரு  சர்வதேச வெப்ப அலகு.  இந்த கெல்வின் அளவீடு தனிமுழு அளவீட்டு முறை என்றும் அழைக்கப்படும்.


Kindle - set something on fire.

தூண்டுதல்


*ஆரோக்ய வாழ்வு*


கட்டிகள் உடைய பப்பாளிப் பாலை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேகவைத்து கட்டியின் மீது வைத்து கட்ட வேண்டும்.


*Some important  abbreviations for students*


  * alt-alteration


 * Annot-Annotation


*நீதிக்கதை*


பட்டாணிக்குத் தையல்


ஒரு நாள் ஒரு பாட்டி மண் அடுப்பில் சட்டியை வைத்து சமையல் செய்வதற்கு அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்தாள். அது கொதித்ததும் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்த சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, என்னை சமைக்கவேண்டாம் என்று கத்தியது.


பாட்டி நீ மரியாதையாக சட்டிக்குள் போ இல்லையென்றால் உன்னை நசுக்கி விடுவேன் என்றாள். பட்டாணி பாட்டி சொல்வதைக் கேட்காமல் அங்கிருந்து வேகமாக ஓடியது. அப்போது நில் நில் ஓடாதே உன்னுடன் நானும் வருகிறேன் என்றது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது, அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன் என்றது, நிலக்கரி.


என்ன வெளியுலகிற்கா? அப்படியென்றால் நானும் வருகிறேன் என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. சரி, என்றபடி மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.


இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது என்று நிலக்கரியும், பட்டாணியும் திரும்பி போக நினைத்தது. நண்பர்களே நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி செல்லுங்கள் என்று நம்பிக்கை காட்டியது, வைக்கோல்.


முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீர்ருக்குள் விழுந்தன.


பட்டாணி சிரித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டது.


தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்ததால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்க வேண்டியிருக்கிறது.


*இன்றைய செய்திகள் - 19.10.2019*


*மாசற்ற சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 400 நாள்களில், 27,046.7 கி.மீ தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார் கரூரைச் சேர்ந்த தங்கவேல்.


*நெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள் விடப்படும் என ரயில்வேதுறை அறிவிப்பு.


*இளைய தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்: அக்.19 சர்வதேச தொல்லியல் நாள்.


*பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு.


*விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.


*Today's Headlines*


🌸To bring awareness about the immaculate environment Thangavel of Karur had travelled  27,046.7 km in the bi cycle for the past 400 days and made an impression


🌸Railway department announced  Special trains for Diwali between Nellai and Chennai


🌸 We have to create interest in archeology for the younger generation: Oct. 19 International Archeology Day


🌸Earthquake shook  Philippines, 5 people were killed.


🌸

20.09.2019 - வெள்ளி.

திருக்குறள்

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

பழமொழி

Haste is a fool's choice.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.

--------அப்துல் கலாம்

பொது அறிவு

* விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி யார்?

வாலண்டினா தெரஸ்கோவா

* விண்வெளியில் நடந்து சென்ற முதல் பெண்மணி யார்?

ஸ்விட்லானா இவ்கின்யெவ்னா சவிட்ஸ்கையா

English words & meanings

• thermometer -
an instrument used for measuring temperature
வெப்பமானி - வெப்ப அளவை அளக்க உதவும் கருவி.
மனித உடலின் வெப்பநிலை அளக்க உதவுவது மருத்துவ வெப்பநிலை மானி ஆகும்.
மூன்று வகை உண்டு.
மருத்துவ, ஆய்வக மற்றும் கால நிலை வெப்ப மானிகள்.

* textures - the feeling when you touch a cloth or something
இழை நயம்.

ஆரோக்ய வாழ்வு

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புச்சளியை இருமல் மூலம் வெளியேற்றுகிறது .உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது .

Some important  abbreviations for students

* AN  -  Andaman and Nicobar Islands

* AP  -   Andhra Pradesh

நீதிக்கதை

குறையா? நிறையா?

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது.

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது.

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள் - 20.09.2019

* இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பள்ளிக்கல்வி இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி பெற்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்ததை அடுத்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.

Today's Headlines

🌸 RKS Patharia has been appointed as the new Commander of the Indian Air Force.

🌸The Government of Tamil Nadu has given order for the transfer of three School  Education Directors.

🌸In plus 1 and plus 2 courses the combined  syllabus which enables the students to go for both  Engineering and Medicine has been removed .  Instead separate courses are given separately for both groups.
. 🌸India won the second T20 match against South Africa by 7 wickets.

🌸 Indian wrestler Bajrang Bunia qualifies for the 2020 Tokyo Olympics.  He qualified for the Olympics after entering the semifinals of the World Wrestling Championships in Kazakhstan.

Prepared by
Covai women ICT_போதிமரம்.
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
நன்றி. மகிழ்ச்சி.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் .

🙏🙏🙏🙏🙏
திருக்குறள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

விளக்கம்:

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

பழமொழி

Health is wealth

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

இரண்டொழுக்க பண்பாடு

1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர்      பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்.

2.பிறர் செய்யும் நற்செயலுக்கு மதிப்பு அளிப்பதுடன், அதனை தொடர்வேன்.

பொன்மொழி

உங்கள் உடல் நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

         -ஜவஹர்லால் நேரு

பொதுஅறிவு

1.இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்?

திருமதி. நிர்மலா சீத்தாராமன்

2.நமது நாட்டின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?

திரு. ரவீந்திரநாத் தாகூர்
        
English words and. Meanings

Everybody------ ஒவ்வொருவரும்
Exhibition-------கண்காட்சி
Empire------பேரரசு
Embassy------தூதரகம்
Expression------ முகபாவனை

நீதிக்கதை

பொதுவாக ஜப்பானியர்கள் மீன்🐟 உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் !

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை விரும்பிச் சாப்பிட,
படகெடுத்து🚣 சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.

அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும்🐟 மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன்🐠 பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.

மீனவர்கள்🎣 கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை.
ப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !

இப்பொழுது மீனவர்கள்,🎣 ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !

ஆயினும்,
அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !

யோசித்த மீனவர்கள் 🎣 புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.

குட்டிச் சுறா மீன்🐬 ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள்🐡🐠🐟🦐🦑🦀 எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள்🦐🦀🐠🐟 முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.

வாழ்க்கையும் அப்படித்தான்...!!! வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே🏃🚴🤼⛹️🏋️ இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா🐬🐋🐳🦈 இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள்🐠🐡🐟🦀🦐🦑 சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட 🏃மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !!!!

சுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் !
🎾🎾

இன்றைய செய்திகள்

07.08.2018

* தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* ஆகஸ்ட் 31க்குப் பிறகு 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்லுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

* சேலம் 8 வழிச்சாலை வழக்கில் ஒரு நில உரிமையாளர் நாடினாலும் விசாரணை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசின் வாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் பதிலளித்துள்ளது.

* ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோடிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் வலுவான அர்ஜென்டினா யு-20 அணியை இந்திய யு-20 அணி வென்றது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதை அடுத்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் முதலிடத்தை பெறும் 7-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

பழமொழி :

Add fuel to fire

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல

பொன்மொழி:

அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.

- கில்ப்பின்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?
ஈரோடு

2.இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?
ராதா கிருஷ்ணன்

நீதிக்கதை :

துன்பம்:

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை.   அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர  நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி.  நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!” கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..  நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை  ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..  அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!

No comments:

Post a Comment