Monday, 27 May 2019

பிரார்த்தனை

இதயநிறைவு
இரவு 9 மணி பிரபஞ்சமளாவிய பிரார்த்தனை உள்ளிட்ட, பிரார்த்திக்கும் மனோபாவத்துடனான சங்கல்பங்கள்

நம்மைச் சூழ்ந்துள்ள, காற்றுத் துகள்கள், மனிதர்கள், பறவைகள், மரங்கள்... நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் கடவுளின் நினைவில் ஆழ்ந்து லயித்துள்ளன. அனைத்தும் மூலஆதாரத்துடன் இரண்டறக்கலந்து, அதிகமான அமைதியையும், மிதத்தன்மையையும் வளர்த்து வருகின்றன.
அனைவரும் நற்சிந்தனை, சரியான புரிந்துகொள்ளுதல் மற்றும் வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்கள், செயல்பாட்டில் சரியான அணுகுமுறையையும், நடத்தையில் பூரணத்துவத்தையும் அடைகிறார்கள்.
பிரபஞ்சமளாவிய பிரார்த்தனை: அனைவரும் அன்பாலும் பக்தியாலும் நிரப்பப்படுகிறார்கள் மற்றும், அவர்களுள் உண்மையான நம்பிக்கை வலுவடைந்து வருகிறது என்ற எண்ணத்துடன் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.
பரம்பொருளுக்காக ஏங்கித் தவிக்கும் அனைவரும் சகஜ மார்க்கத்தை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment