இதயநிறைவு
பத்து நியமங்கள்
நியமம் 1
அதிகாலைக்கு முன்பாகவே விழித்தெழுந்து, நிர்ணயித்துக்கொண்ட நேரத்தில் பிரார்த்தனையை சமர்ப்பித்து தியானம் செய்யுங்கள். சூரியோதயத்திற்கு முன்பே இவற்றைச் செய்து முடிப்பது சாலச் சிறந்தது. தியானத்திற்கென தனி இடத்தையும், இருக்கையையும் அமைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஒரே நிலையில் அமரும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உடல் மற்றும் உள்ளத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
நியமம் 2
ஆன்மீக மேம்பாட்டிற்கான பிரார்த்தனையுடன் தியானத்தைத் தொடங்குங்கள். இதயம் அன்பினால் நிரம்பும் வகையில் உங்கள் பிரார்த்தனையை சமர்ப்பியுங்கள்.
நியமம் 3
இறைவனுடன் இரண்டறக் கலப்பதையே லட்சியமாகக் கொள்ளுங்கள். இலட்சியத்தை எய்தும்வரை ஓயாதீர்கள்.
நியமம் 4
இயற்கையுடன் இயைந்திருக்கும் வண்ணம் உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ளுங்கள்.
நியமம் 5
எப்போதும் உண்மையாக இருங்கள். துன்பங்களை, உங்கள் சொந்த நலனிற்காக இறைவனிடமிருந்து வருபவை என ஏற்றுக்கொண்டு, நன்றியுடன் இருங்கள்.
நியமம் 6
அனைவரையும் உங்கள் உடன் பிறப்புகளென பாவித்து அவர்களை அவ்வாறே நடத்துங்கள்.
நியமம் 7
எவரேனும் உங்களுக்குத் தவறிழைத்ததாக உணர்ந்தால், பழிவாங்க விரும்பாதீர்கள். அதற்கு பதிலாக, அது கடவுளிடமிருந்து வருவதாக நினைத்து நன்றியுடன் இருங்கள்.
நியமம் 8
பொருளீட்டுவதில் நேர்மைக்கும், தூய்மைக்கும் உரிய மதிப்பளித்து, கிடைப்பதை நிலையான தெய்வீக சிந்தனையுடன் உண்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
நியமம் 9
மற்றவர்களிடம் அன்பும், பக்தி உணர்வும் சுரக்கும் வகையில் உங்கள் நடத்தையையும், வாழ்க்கை முறையையும் மேன்மையாக அமைத்துக்கொள்ளுங்கள்.
நியமம் 10
இரவு உறங்கும் முன், இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து, அறியாமல் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோருங்கள். மீண்டும் அவற்றுக்கு இடம் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் மன்றாடுகிற மனநிலையில் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.
No comments:
Post a Comment