இதயநிறைவு
நிலையான நினைவு
இதில் முதல் கட்டமானது, தியானத்தின்போது, ஆன்மீக ஊட்டம் நமக்கு அருளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு போதுமான அளவு கூருணர்வு படைத்தவர்களாக ஆவதும், பிறகு அதைத் தக்கவைத்துக்கொண்டு, அதைப் பேணிப்பாதுகாத்து – ‘முயன்று அதைப் பெற்று, அதற்கு உயிரூட்டி, அதை உட்கிரகித்துக்கொண்டு, அதனுடன் ஒன்றுகலந்து, இறுதியில் ஒரு ஐக்கிய நிலையை அடைவது (or AEIOU)’ ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் அதை வளர அனுமதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுமாகும். நம்முடன் அது ஒன்றுகலக்கும் விதத்தில், அதை நாம் பத்திரமாகப் பாதுகாக்கிறோம். அதனுடன் நாம் ஐக்கியமாகிறோம்.
தியானத்திற்குப் பிறகு, உள்முகமாக நம்மைக் கூர்ந்து கவனித்து, நமது நிலையை அடையாளம் கண்டு, அதனுடன் ஒன்றுகலந்து, அதனை ருசித்து அனுபவித்து, அதற்கு உயிரூட்டி, அதை நம்முடையதாக்கிக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. பிறகு, வளர்வதற்கானதொரு வாய்ப்பு அதற்கு உள்ளது. காலை தியானத்தின்போது, ஒரு குறிப்பிட்ட அளவிலான உணர்வுறுநிலையை நாம் அடைகிறோம். அதை விடாது பற்றிக்கொண்டு, நமது அன்றாட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும்போது, காலை தியானத்தின்போது பெற்ற நிலையின் மீது, ஒரு முழுமையான பிடிப்பினை, கண்கள் திறந்த நிலையில், நாம் தக்கவைத்துக்கொள்கிறோம்.
உங்களது கண்களைத் திறந்த வண்ணம், அந்த தியான நிலையில் நீடித்திருக்க முயற்சி செய்யவும். உங்கள் இதயத்தில் உங்களை மையப்படுத்திக்கொண்டு, உணர்ந்தறியக்கூடிய நிலையில் இருந்து, உங்கள் இதயத்தால் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றிலும் உள்ள விஷயங்களை நீங்கள் கூர்ந்து கவனிக்கும்போது, உங்கள் கவனத்தை இதயத்திலேயே வைத்திருக்கவும். உங்களது உள்முக தொலைநோக்குப் பார்வை (radar) திறக்கட்டும். பேணி வளர்க்கப்பட வேண்டிய பழக்கம் இதுவே!
தியான நிலை மேலும் ஆழ்ந்து சென்று, நிலையான நினைவாக ஆகும்போது, உணர்வுறுநிலையின் முழு கற்றையும் (spectrum), உங்களது ஜீவிதத்தின் அஸ்திவாரமாக, உங்களது மையத்துடன் தொடர்பில் இருக்கிறது; மேலும், காலப்போக்கில், அஸ்திவாரமாக இருக்கும் இந்தத் தொடர்பு, அன்பாக மலர்கிறது. வழிகாட்டியானவர் நமக்கு உதவ வருகிறார். இறைவனின் ஆளுமைக்குட்பட்ட இந்தப் பிரதேசத்தில், அவர் அனுபவம் வாய்ந்தவராகவும், சௌகர்யமான நிலையிலும் உள்ளார்; ஆகவே, நமது கவனத்தை ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்பதை நோக்கி அவர் மென்மையாகத் திருப்புகிறார். இந்த ‘நான்’ மற்றும் ‘நாம்’ எனும் இயக்கவியல் வளர்ந்து, உணர்வுறுநிலையின் பல மட்டங்களினூடே காலப்போக்கில் விரிவடைகிறது. உணர்வுறுநிலையின் இந்த மட்டங்களினூடே நாம் கடந்து செல்கையில், மனிதமட்டத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடிவதும் அவருடன்தான். அவரது பிராணாஹுதியின் மூலமாகவும், அவரது ஆதரவின் மூலமாகவும் எந்த அளவு அதிகம் அவர் நமக்கு உதவுகிறாரோ, அந்த அளவு, நமது கவனம் பரிசுகளிலிருந்து பரிசளிப்பவரை நோக்கி நகர்கையில், அவருடைய உதவியை அதிகமாக நாம் பெறப் பெற, அவர்மீது அதிக நன்றியுணர்வு படைத்தவர்களாக நாம் உணர்கிறோம். இந்த நன்றியுணர்வானது, அவரை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகொள்ள வைக்கிறது, சிறிது காலத்திற்குப் பின், அன்பும் உதயமாகிறது. ஒரு கட்டத்தில், மிகுதியான அன்பினை நாம் உணர்கிறோம், அது எவ்விதம் நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரிவதில்லை. நாம் நேசிப்பவர்களை நாம் எப்போதும் நினைவில்கொள்வதுபோல், அதன் மறு பக்கமும் உண்மையானதே: நாம் அதிகமாக நினைவுகொள்கையில், அதிகமான அன்பு வளர்கிறது.
தியான நிலையில் நாம்ஆழமாக ஈர்த்துக்கொள்ளப்பட்டு
உள்முகமாக மையப்படுத்தப்படுகிறோம்..
இந்த மையப்படுத்தப்பட்ட தன்மையை மிக கவனத்துடன்
நாம்
பராமரிப்போமெனில்
இதனால் விளைகின்ற லயித்துப் போகும் தன்மை
நமது அன்றாட நடவடிக்கைகளில்
பிரதிபலிக்கும். விதத்தில்
அந்த அளவு நமக்குள்ளேயே
மையப்படுத்தப்பட்ட வர்களாக நாம் ஆகிறோம் ..
இந்த நிரந்தர மையப்படுத்தப்பட்ட தன்மைக்கான மற்றொரு பெயர்
நிலையான நினைவு என்பதாகும்
குறிப்பாக அத்தகையதொரு
லயித்துப் போகும் நிலையைப்
பரிசளித்த ஒருவரிடம்
நாம் நன்றியுடன் இருக்கும் போது
இந்த நன்றியுணர்வில்.
நாம் அப்படியே உருகி கரைந்து போகிறோம்..
No comments:
Post a Comment