Wednesday, 3 July 2019

இறைவன்

மழை பெய்யும்போது நீங்கள் வைக்கும் பாத்திரத்தின் அளவை பொறுத்து அதில் நீர் நிரம்பும்
மேலும் வைக்கபடும் அந்த பாத்திரம் காலியாக இருக்க வேண்டும்
ஆகவே
நம்  வாழ்க்கை
வளங்கள் நிறைந்ததா,
அல்லது பற்றாக்குறை நிறைந்ததா என்பது
அவரவர் எண்ணகளின் தன்மையை பொறுத்தே அமையும்.

அதேப்போல

அருள் என்னும் மழை நம்மை ஸ்பரிசிக்கும் போது
நம்முடைய மனதை எந்த அளவு காலியாக வைத்திருக்கிறோமோ அந்த அளவே
நம்முள் அருள் நிறையும் என்பதையும் புரிந்து.
கொள்ள வேண்டும் ...

அருள் ஸ்பரிசம் என்பது....

இறைவன் என்ற சொல் தோற்றத்தைக் குறிக்கிறதா...???
அல்லது
உணர்வு தன்மையைக் குறிக்கிறதா...???

உணர்வு தன்மை என்பதனாலேயே இறை நிலை என்று கூறுவது சரியாகும்.

இந்த அருள் ஸ்பரிசம் சதா நேரமும் நம்மை உயிர்ப்பித்து கொண்டே உள்ளது...

ஆனால் உயிர்ப்பை உணரா நிலை நமக்கு...

ஏன்?

வட்டத்தில் சிக்குண்ட பார்வை...
அத சிக்குண்ட பார்வையைப் பொறுத்து செயல்..

எதுவெல்லாம் எனது என்று வைத்திருக்கிறோமோ,
எனக்கு மட்டும் என்று தக்க வைத்திருக்கிறோமோ,
அதுவரை மனம் திறத்தல் சாத்தியம் இல்லை...

மனம் திரட்டல் என்பது ...

உள்ளதை உள்ளவாறு கண்டுணரும் திறன்.
இந்த திறனுக்கு
மற்றொரு பெயர்தான்
எளிமை என்பது.

எளிமை உணர்வே இருப்பதின் முழுமைத்துவம் காட்டும்.

எப்போது "தான், தனது" என்ற கட்டுகளிலிருந்து மனம் விடுபடுகிறதோ...
அன்று மனக் கதவு தானாக திறக்கப்படும்.

நான் என்ற ஒரு தனி நபர் இல்லை
எனது மட்டும் என்று எதுவும் இல்லை என்று
தனி நிலை ஒழிதலின்போது
மனக் கதவு தானாக திறந்துவிடும்.

பகவான்  இரமணர் கூறுகிறார்
“எந்த இடத்தில் “ கற்பித நான்” மடிகிறதோ,

அந்த இடத்தில் இறைவன் வெளிப்படுகிறான்” என்று.

நான் இறந்தால் என்றால்
இறுதியில் வரும் மரணம் அல்ல
நான் என்ற எண்ணம், செருக்கு, எங்கு மரணிக்கிறதோ அங்கு இறைவன் பிறக்கிறான்
அப்போது எல்லாம் கிடைக்கும்..

இறவன் என்பது இறைதன்மை  தான் என்று தெளிவாக புரிகிறது...

இதனையே பாரதியும்
“இறைவன் தன்மயமானவன்”
இதன் உட்பொருள் "தன்மையானவன்" என்பது சரியாக இருக்கிறது அல்லவா...

“காயிலே புளிப்பதென்ன கண்ணபிரானே....!!!,
நீ கனியிலே இனிப்பதென்ன கண்ணபிரானே....!!!
இந்த இடத்தில் பாரதி நமக்கு கூற வருவது யாதெனில்,
இறைவா, நீ காயிலே புளிப்பாய் இருக்கிறாயே,
கனியிலே இனிப்பாய் இருக்கிறாயே..!!!
என்ற உள்ளதை உள்ளவாறு கண்டு ஏற்ற நிலை.

இன்னும்...
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா,
நின்றான் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா....!!!"
அப்போ இறைவன் என்னவாக இருக்கிறான்...???
காக்கையிலே கருமை நிறமாக இருக்கிறான்
“பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா,
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா.....!!!”
மரங்களில் பச்சை நிறமாக இருக்கிறன்
“கேட்கும் ஒலிகளெல்லாம் நந்தலாலா,
உந்தன் கீதம் மிக இசைக்குதடா நந்தலாலா.....!!!”
பாரதியின் வழியில் உணர்ந்தால்...
காக்கா கரைகிறதா...???
இல்லை இறைவன் கரைகிறானா...???
காக்கை கரையவில்லை
இறைவா நீ இசை பாடுகிறாய் என்றல்லவா கூறுகிறான்

இதுவே முழுமை உணர்வனுபவம்...

இந்த முழுமை உணர்வினால் ஒன்றை பார்க்கும்போது ஒன்றை தொடும்போது ஒன்றில் வாழும்போது....

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா,
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா.....!!!”

நெருப்பின் புறத்தன்மை சூடாக இருந்தும் ..
அதன் இயல் தன்மை  இறை உணர்வே என்பதால் அப்போது
அந்த அருள் ஸ்பரிச தீண்டல் இன்பம் உண்டாவதாய் பாடுகிறார் பாரதி...

ஆம் அருளே சூடாய் வெளிப்பாட்டு நிலையில் நெருப்பு என்று கண்டுணரும் முழுமைத்துவம் அங்கு பிறக்கும்...

தீக்குள் விரலை வைத்தால் என்ன ஆகும்.... சுடும்
அப்போ அங்கே இறைவன் சூடாக இருக்கிறான் என்று  பொருள் படும்போது தான் என்ற தனி நிலை காப்பு பயம் நீங்கி இயல் நிலை ஆதி உணர்வில் ஆட் கொள்ள பட்ட சுகமே எஞ்சி நிற்கும் எப்பொழுதும்...

அறி துயில் இரவு அன்பர்கள் அனைவருக்கும்🙏🏻.

No comments:

Post a Comment