⛅ இன்றைய நித்தியகடன்
⛅ அதிகாலை எழுந்து
நிதானமாக உடற்பயிற்சி,
நிதானமாக காயகல்பம்,
நிதானமாக தவம் செய்வோம் அந்நாள் இனிய நாளாக.
⛅ இன்றைய நற் சிந்தனை
⛅ வாசமில்லாத மலர், சுவையில்லாத கனி, வெப்பம் இல்லாத சூரியன், ஒளி இல்லாத சந்திரன், பருவநிலைக்கேட்ப மாற்றம் இல்லாத காலம், வயதுக்கு ஏற்ப பக்குவமும், அனுபவமும் இல்லாத மனிதர்கள் இவை எல்லாம் இருந்தும் பயனில்லை. மாறாக இவற்றால் ஏற்படும் துன்பங்கள் அதிகம்.
⛅ இன்றைய சாதகம்
⛅ வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்.
மாலை:- இறைநிலை தவம்.
⛅ இன்றைய தற்சோதனை
⛅ அனைத்து நிகழ்ச்சிகளும் மாறுதல்களுக்கு உட்பட்டது. அந்த மாறுதல்களை, நல்ல மாறுதல்களாக, மனிதர்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஜடப் பொருள்களுக்கு உயிர் பொருளான மனிதனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
⛅ ஜடப்பொருள் அதன் சிறப்பை இழந்தாலே அதற்கு பெருமை கிடையாது. மனிதர்கள் அறிவால், சிந்தனையால், செயலால் உயர்ந்தவர்கள். இவர்களுக்குள் இருக்கும் சிறப்பு வெளிப்பட வேண்டும். அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழ முடியும் பூமி பூமியாக இருக்க முடியும். தற்சோதனையில் ஆழ்ந்து உயர்வோம்.
⛅ இன்றைய பண்புப் பயிற்சி
⛅ இறை நீதிக்கு உட்பட்ட சிந்தனையை செயல்களை செய்துகொள்வதற்கு மனிதர்கள் ஒருநாளும், ஒரு பொழுதும் பயம் கொள்ளக்கூடாது. காலம் கருதி சில விஷயங்களுக்கு இடைவெளி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளும் ஒரு பொழுதும் பின்வாங்கி விடக்கூடாது.
⛅ இன்றைய மூலிகை
⛅ கொத்தமல்லி
⛅ ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
⛅ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
⛅ புகுவினையில் கவனம் வைப்போம் (ஆகாம்யம்)
⛅ புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். ( இதற்கு துரிய தவம் உதவும்)
⛅ இளைஞர்களுக்கு வேண்டுகோள் : புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். ( இதற்கு மனவளக்கலை மன்றம் பயிற்சி உதவும்).
⛅ குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்
⛅ நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛅ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்”
⛅ இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம்
⛅ காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
No comments:
Post a Comment