கணக்கு புதிர் போட்டு ரொம்ப நாளாச்சி…
கிருஷ்ணவேணி மேடம் ...
உங்களையும் இந்த கணக்குக்கு விடை கண்டு பிடிக்க அழைக்கிறேன்.
ஓர் அறைக்கு 4 மூலைகள்தான் இருக்க வேண்டுமா என்ன?
ஒரு அறுங்கோண வடிவ அறையில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன.
அந்த அறையில் மொத்தம் ஆறு மூலைகள் இருந்தன.
அனைத்து எலிகளும் 1-வது மூலையில் கும்பலாகப் படுத்துக் கிடந்தன.
ஒரு பூனை அங்கு வந்து அதில் கொஞ்சம் எலிகளை சாப்பிட்டது.
மீதி எலிகள் 2-வது மூலைக்கு தப்பிச் சென்றன.
அங்கு சென்றவுடன் அவை 2- மடங்காக மாறிவிட்டன.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே பூனை மீண்டும் அதே அளவு எலிகளைச் சாப்பிட்டது.
மீதி எலிகள் 3-வது மூலைக்கு தப்பிச் சென்றன.
அங்கு சென்றவுடன் அவை 3- மடங்காக மாறிவிட்டன.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே பூனை மீண்டும் அதே அளவு எலிகளைச் சாப்பிட்டது.
மீதி எலிகள் 4-வது மூலைக்கு தப்பிச் சென்றன.
அங்கு சென்றவுடன் அவை 4- மடங்காக மாறிவிட்டன.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே பூனை மீண்டும் அதே அளவு எலிகளைச் சாப்பிட்டது.
மீதி எலிகள் 5-வது மூலைக்கு தப்பிச் சென்றன.
அங்கு சென்றவுடன் அவை 5- மடங்காக மாறிவிட்டன.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே பூனை மீண்டும் அதே அளவு எலிகளைச் சாப்பிட்டது.
மீதி எலிகள் 6-வது மூலைக்கு தப்பிச் சென்றன.
அங்கு சென்றவுடன் அவை 6- மடங்காக மாறிவிட்டன.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே பூனை மீண்டும் அதே அளவு எலிகளைச் சாப்பிட்டது.
ஆனால் இப்போது எலிகள் எதுவும் மீதம் இல்லை!
அனைத்து எலிகளும் காலியாகி விட்டதால் பூனை அறையைவிட்டு வெளியேறியது!
இப்போது கேள்வி என்னவென்றால்...
ஆரம்பத்தில் 1-வது மூலையில் இருந்த மொத்த எலிகள் எத்தனை?
ஒவ்வொரு மூலையிலும் பூனை சாப்பிட்ட எலிகள் எத்தனை?
No comments:
Post a Comment