Friday, 25 October 2019

அல்ஜிப்ரா வின் தந்தை - அல் குவாரிஸ்மி

அல்ஜிப்ரா வின் தந்தை என அறியப்பட்டவர்
பாரசீக அறிஞர் முஹம்மது இப்னு மூஸா அல் குவாரிஸ்மி.
****************************
இவர்தான் அனைத்து கணித அடிப்படைகளின் மந்திரமாக கருதப்படும் அல்ஜிப்ராவை,
 (இயற்கணிதவியல்) உருவாக்கியவர்.
எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பல்துறை வித்தகர். 

கணிதவியல், இயற்கணிதவியல், வடிவியல், வானியல், கோணவியல், வரைகலை பொன்ற துறைகளில் இவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை.
12 ஆம் நூற்றாண்டில் இவரின் கணிதச் சமன்பாடுகள் அரபி மொழியிலிருந்து லத்தீன் மொழிக்கு மொழியாக்கம் பெற்று வெளியிடப்பட்டது. இந்திய எண்கள் பற்றி விளக்கிய இந்த நூல் பதின்ம இட எண்முறையை (decimal positional number system) மேற்குலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.

நவீன காலப் புதுமை நிறைந்த கட்டிட கலைக்குத் தேவையான வடிவங்கள் (geometric shapes), அவற்றிற்குத் தேவையான தகுந்த முப்பரிமாணச் சமன்பாடுகளை கோணவியலாக (Trigonometry) வடமைத்துத் தந்தவர். இந்த கோணவியல்தான் தற்போதைய விண்ணியலின் தாரக மந்திரம். கிரேக்கக் கணிதவியலாளர்கள் தாலமி, ஹிப்பாகிரஸ் போன்றோர் கோணவியலை வடிவமைத்திருந்தாலும் அவை முழுமையாக்கப்படவில்லை. அதற்கான முழுமையான சமன்பாடுகள் எழுதப்
பட்டிருக்கவில்லை. ஆரம்பகட்ட கோணவியல் கட்டிடக்கலையை வடிவமைக்க மட்டுமே பயன்படுவதாக இருந்தது.

அல்குவாரிஸ்மி உருவாக்கிய அல்ஜிப்ராவும், கோணவியலும்தான் விண்ணியல் ஆராய்ச்சியை எட்டிப்பிடிக்க வழிவகை செய்தது. கோணவியலின் முதல்விதியே ராக்கெட்டின் கூம்பு தயாரிப்பதற்குத் தான் என்றால் நமக்கு ஆச்சரியம் தோன்றும். Fraction, decimal, algorithm and algorism
ஆகிய முதற்படி மற்றும் இருபடிநிலை கணித வகைப்பாடுகளை உருவாக்கியதன் மூலம் உலக வரைபடங்கள் தயாரிக்க இவரது கணித ஞானம் மிகவும் பயன்பட்டது. வழிமுறைகள் (அல்கோரிதம்) இல்லையெனில் இன்றைய கணினி இல்லை என்பது எத்தனை உண்மை.

இவரது படைப்பாளுமைக் காலம்
கிபி. 813 ல் தொடங்கி 20 ஆண்டுகள் நீடித்தன. 
இஸ்லாமியர்களின் பாரசீக வெற்றியின் பின்னர், பக்தாத் நகரம் அறிவியல் ஆய்வு மற்றும் வர்த்தகத்தின் மத்திய நிலையமாக மாறியது. இதனால், சீனா மற்றும் இந்தியா போன்ற தூர இடங்களிலிருந்தும் பல வியாபாரிகள், விஞ்ஞானிகள் அந்நகருக்கு பிரயாணம் செய்தனர். அல்-குவாரிஸ்மியும் இவ்வாறே செய்தார். 
கலீபா மஹ்மூனால் ( Al Mamun ) பக்தாதில் உருவாக்கப்பட்ட அறிவு வீ்டு ( Bayat al-Hikma, House of Wisdom ) என்ற ஆய்வகத்தில் ஒரு அறிஞராக அல்-குவாரிஸ்மி பணியாற்றினார். அங்கு அவர் கிரேக்க மற்றும் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு விஞ்ஞானச் சுவடிகள் உட்பட, கணிதம் மற்றும் விஞ்ஞானத்தை கற்றார்.

இவர் கி.பி. 780 ஆம் ஆண்டில் தற்போதய உஸ்பெக்கிஸ்தானில் உள்ள ஹிவா ( Khiva )
என அழைக்கப்படுவதும், அக்காலத்தில் குவாரிஸிம் (Khwārizm) என்று அழைக்கப்பட்ட நகரில் பிறந்தார்.
19 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவின் மிகப்பெரிய அடிமை வியாபாரம் நடைபெற்ற கோட்டை நகரம் ஹிவா. இந்த நகரம் அக்காலத்தில் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த ஊர்ப்பெயர்தான் அவர் பெயரோடு சேர்ந்து குவாரிஸ்மியாகியது. அவரது முழுப்பெயர்
அபு அப்துல்லா முஹம்மது பின் மூசா அல் குவாரஸ்மி (Abu Abdallah Muhammad Ibn Musa al Khwarizmi)
எட்டாம் நூற்றாண்டின் கோட்டை நகரமாகத் திகழ்ந்தது ஹிவா. இந்த நகரக் கோட்டைக்கு வெளியே அல்குவாரிஸ்மி சிலை நிறுவப்பட்டுள்ளது
என்பது மிக ஆச்சரியமான, வியக்கவைக்கும் செய்தி.
தெஹ்ரான் அமீர்கபீர் பல்கலைக்கழகத்திலும்
( Amirkabir University, Tehran ) இவரது முழு உருவச்சிலை  வைக்கப்பட்டுள்ளது.

அல் குவாரிஸ்மியின் உத்தேசமான 1200 ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்
6, செப்டம்பர், 1983 ஆண்டு இவர் உருவம் தரித்த ஸடாம்ப் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.

"On the Calculation with Hindu Numerals" :
இந்நூல் இந்தியக் கணித இலக்கமுறையுடன் கணித்தலில் 825 பற்றி எழுதப்பட்டது.  இது செழுமைப்படுத்தப் பட்ட இந்திய -அரபு எண்ணுருக்களை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் பரப்புவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. படிமுறைத் தீர்வு (Algorithm),
பதின்ம இட எண்முறை (Algorism) ஆகியவை இவரின் இலத்தீன் மொழிப்பெயரான அல்கோரித்மி (Algoritmi) என்னும் பதத்திலிருந்து உருவானதாகும்.

"முழுமை மற்றும் சமநிலை கணி்த்தல் சுருக்கம்",
("The Compendious Book on Calculation by Completion and Balancing") என்பது ஒரு கணித புத்தகமாகும். இது ஏறத்தாழ கி்.பி. 830 இல் எழுதப்பட்ட கணிப்புகளுக்கு புகழ்பெற்ற நூல்.
இந்நூல் வியாபாரம், அளவியல் மற்றும் சட்டஉரிமை பற்றிய விரிவான பிரச்சினைகளுக்கு பல உதாரணங்கள் மற்றும் பிரயோகங்கள் மூலம் விளக்கங்களை வழங்குகின்றது.

இந்த நூல் "லிபர் அல்ஜிப்ரே" ( "Liber algebrae et almucabala" by Robert Chester ) எனும் பெயரில் மர்மக் கவிஞர் செஸ்டரால் இலத்தீன் மொழியிலும் ஆங்கிலத்திலும்
மொழியாக்கங்கள் கண்டன.
இதன் அரிய அரபு மொழிப் பிரதி ஆக்ஸ்ஸஃபெட் பல்கலைக்கழக்கத்திலும், இலத்தீன் மொழிப் பிரதி
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இன்னும்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தியாவின் கணித மேதை பிரமகுப்தா ( Brahmagupta of Ujjain ( ம.பி. மாநிலம் ), மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த எகிப்தின் கணிதவியலாளர் டயஃபேந்தஸ் 
(Mathematician Diophantus of Alexandria, Egypt ) ஆகியோரது படைகப்புகளுடன் அல்குவாரிஸ்மியின் படைப்புகளை ஒப்பிட்டு வேறுபடுத்துகிறார் சுவிஸ் அமெரிக்கன் கணித வரலாற்றாளர் ஃப்லோரியன் கஜோரி, Florian Cajori. இந்த இருவரது கணிதச் சமன்பாடுகளிலும் மறுசீரமைப்பு மற்றும் குறைத்தல் விதிகள் ( Restoration மற்றும் Reduction ) இல்லை என்கிறார்.

முதன்முதலில் நைல் நதியின் வரைபடத்தை துல்லியமாக வடிவமைத்தார். ஆனால் 
முன்பே பாரசீக புவியியலாளர் ஹஜ்ஜாஜ்
பின் யூசுப் (Al-Hajjaj ibn Yusuf) "தியாலம்" என்கிற பெயரில் நைல் நதியின் வரைபடத்தை உருவாக்கினார். அது தெளிவற்றதாக இருந்தது.
இவரது நைல் நதியின் வரைபடம் பொருளாதாரக் காரணம் மட்டுமின்றி அரசியல், வரலாறு, பண்பாட்டுத் தளங்களில் மிக முக்கியமான வரைபடமாகக் கருதப்பட்டது. உலகத்தின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களைத் தொட்டுப் பேசுகிறது இவரின்
நைல்நதியின் வரைபடம்.

இவர் முற்கால உயர்வுமானி எனப்படும் கோள்காண் வட்டு (astrolabe) மற்றும் சூரிய மணி காட்டி ( sundial ) போன்ற பொறிமுறை சாதனங்களைப் பற்றியும் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
கோள்காண் வட்டு என்பது ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கருவி. ஆஸ்ட்ரோலேப் என்று அறியப்பட்டது. மிகப் பண்டைய காலத்தில் வானில் விண்மீன்கள் மற்றும் இதர கோள்களின் நீள அகலங்களைக் கணிக்கவும், சூரியன் உட்பட அவற்றின் நிலைகொண்ட இடத்தை யூகித்தறியவும் பயன்பட்ட ஒரு கருவி. வடிவமைப்புச் சற்று மாற்றப்பட்டு கடற் பயணங்களின்போதும் உபயோகப்படுத்தப்பட்டது.

புவியின் சுற்றளவை கணிப்தற்கான ஒரு திட்டத்துக்கு உதவிசெய்ததுடன், கலீபா மஹ்மூனின் உலகவரைபடத்தை உருவாக்குவதற்கு 70 புவியியலாளர்களின் மேற்பார்வையுடன் ஈடுபட்டு,
டாலமி உருவாக்கிய உலக வரைபடத்திற்குப் பதிலாக புதிய அளவீடுகளுடனான புதிய உலக வரைபடத்தை உருவாக்கினார். டாலமியின் புவியியல் எனும் நூலைச் ( "The Geography" of Ptolemy ) செழுமைப்படுத்தி  சூரத்துல் அர்த்
(அரபியில்  "kitab surah al ard" - "The Image of Earth" ) எனும் புதிய  நூலை வடிவமைத்ததன் வாயிலாக அரபு உலகில் புவியிலுக்கும் புவிசார் கலைகளுக்கும் வித்திட்டார்.

தற்போது "சூரத்துல் அர்த்" முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் ஒரேயொரு புதுப்பிக்கப்பட்ட பிரதி மட்டும் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் ( Strasbourg University ) நூலகத்தில் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1551ல் மெகல்லன், கடல்வழியாக பூமியை சுற்றி வந்ததன் மூலம் புவி கோளவடிவமானது என கூறுவதற்கு 700 வருடத்திற்கு முன்பாகவே புவி கோள வடிவமுடையது அதன் ஓரங்கள் வளைந்து செல்லக்கூடியது என தமது "ஸிஜ் அல் சிந்த்ஹிந்த்"
( Zīj al-Sindhind  "Great astronomical tables of the Sindhind - The Sindhind is an Indian astronomical method ) எனும் நூலில் உலகிற்கு அறிவித்த மேதை அறிவியல் அல்குவாரிஸ்மி.
 ஏராளமான புத்தகங்களை இயற்றிய இவருடைய புகழ் ஐரோப்பாவில் மங்காத தனியிடம் ஒன்றை தக்கவைத்துள்ளது.

ஆரியபட்டா (Aryabhata (476–550 CE) கண்டறிந்த
"0" பூஜ்ஜியத்தை ஸைஃப்ர் என்கிற பெயரில் உலகப் பயன்பாட்டிற்கு கொண்டவந்தார். அதுவே பிறகு ஸீரோ ஆனது.

Muḥammad ibn Mūsā al-Khwārizmī :
(Persian: Muḥammad
Khwārizmī محمد بن موسى خوارزمی‎ :
 c. 780 – c. 850),
பென்ஸி.

No comments:

Post a Comment