நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி?
------------------------------------
இத்தருணத்தில் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதைப்பற்றிச் சிந்திக்கும்போது ஒன்று தெளிவாகப் புரிகிறது. கடந்துபோனவற்றை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்காமல் இருத்தல் நல்லது. அதேபோல் எதிர்காலம் பற்றிய கற்பனைகளில் கவனம் செலுத்தாதிருப்பது.
மிக எளிமையாகத் தோன்றும் இது உண்மையில் எளிதானதாக இல்லை.
எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும், அவற்றால் கவலைகளும் அதிகரிக்கும்போது நமக்குள் பிரச்சனைகள் உருவாகின்றன.
அதற்காக நமது எதிர்காலம் பற்றி நாம் திட்டமிடக்கூடாது என்பதல்ல. நமது திட்டமிடல் ஆக்கப்பூர்வமானதாக அமையவேண்டும்.
எதிர்காலம் பற்றி, எதிர்பார்ப்புக்கள் நிறைந்த கவலைகள் அதிகரிப்பது, நமது திட்டமிடலுக்கு உதவாது.
பொதுவாக நாம் நமது கடந்தகாலத்தை குற்ற உணர்வுடனேயே அணுகுகிறோம். அன்று நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று எண்ணுவதே நமது வழக்கமாக இருக்கிறது. இந்த எண்ணப்போக்கினால் நமது குற்றமனப்பாங்கே உறுதிப்படுகிறது. இதை விட்டுவிட்டு நாம் கடந்த கால நினைவுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப் பழக வேண்டும். அதுவே சிறப்பானது.
திட்டமிடல் என்பதை உணர்ந்து செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment