Tuesday, 27 March 2018

நித்தியக்கடமை

🌋🌐🌋🌐🌋🌐🌋
*நித்தியக்கடமை - செவ்வாய்*

☣ அதிகாலை எழுந்திருந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

*நற் சிந்தனை*

☣ உடல் பயிற்சியை உணர்வோடும்
தியான நிலையோடும் செய்யும் பொழுது.

☣ செல்களில் உயிரில் காந்தத்தில்  இருக்கின்ற விஷத்தன்மைகள், விலங்கின பதிவுகள் சிறிது சிறிதாக அகற்றப்படுகிறது.

*செவ்வாய் கிழமை*
காலை:- துரியாதீத தவம்
மாலை:- இறைநிலை தவம்.

*தற்சோதனை*

☣ இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இதில் ஏற்படக்கூடிய தடை, தேக்கம், திசை மாற்றம்
இதுவே நோயாகும்.

☣ இதனை சரியாக சீராக அமைத்துக் கொள்ள பயிற்சி மிகவும் அவசியம்

*பண்பு பயிற்சி*

☣ நாள் வராது உடல் பயிற்சியை முறையாக செய்யும் பண்பினை வளர்த்துக் கொள்வோம்.

☣ வெப்ப தற்ப ஏற்றத் தாழ்வாலும், கோள்களின் சஞ்சாரத் தாலும் நமது எண்ணம், சொல், செயல் இவைகளாலும்.

☣ நம் உடல் அடையும் ரசாயனமாற்றத்தை உடல் பயிற்சி சீரமைக்கிறது.

☣ * மூலிகை சீரகம்*

☣ இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

☣ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும்.

☣ இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும்.

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

No comments:

Post a Comment