*உடற்பயிற்சியும் உடல்நலமும்*
03-03-1972-ல் மகரிஷி, டில்லியில் அருட்பணியாற்றச் சென்றார். ஒருவாரம் சர்வோதயா என்கிளேவிலும், ஒருவாரம் கமலா நகரிலும் புதிய அன்பர்களுக்குக் குண்டலினி தீட்சை கொடுத்தார். சொற்பொழிவுகளும் ஆற்றினார். அதோடுகூட ஏற்கனவே பிப்ரவரி 1972 அன்பொளி ஆங்கிலப் பகுதியில் அறிவித்திருந்தபடி, எளிய முறையிலான உடற்பயிற்சிகளக் காலை நேரங்களில் 8 மணிக்கு செய்து காட்டினார். உடல் ஆரோக்கியத்திற்கான உடலை வருத்தாத உடற்பயிற்சிகளை செய்து பயன்பெற விரும்பும் அன்பர்கள் காலை 8 மணிக்கு மேல் எந்த நாளிலும் தன்னைச் சந்தித்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்புகள் செய்தார்.
”ஆசனப் பயிற்சிகள் பல இருக்கின்றன. அவரவர்கள் தொழிலுக்கு ஏற்றபடி உடலுழைப்பை ஈடுசெய்ய ஏதேனும் சில முறைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்வது நல்லது. பல கோணங்களில் உடலை வளைத்து நிறுத்தும் போது, உடலில் புவி ஈர்ப்பு நிலை வேறுபடுகிறது அதற்கேற்ப இரத்த தேகத்தின் நிலை மாறுகிறது. இதன் மூலம் உடலியக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. உடலிலுள்ள சுரப்பிகள் நன்கு தொழில் புரியத் தூண்டப்படுகின்றன” என்று 15 மார்ச் 1972 அன்பொளியில் உடல்நலம் எனும் கட்டுரையில் தெரிவித்துள்ளார் மகரிஷி.
No comments:
Post a Comment