Friday, 28 February 2025

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today's (28.02.2025

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today's (28.02.2025) School Morning Prayer Activities


திருக்குறள் :

பால்: அறத்துப்பால்  

அதிகாரம் மெய்யுணர்தல்   

குறள் 355:

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 விளக்கம்:

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

பொன்மொழி :


1) மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி    

2) கல்வி ஆபரணமல்ல, ஆடை....


பழமொழி :


Art is long and life is shot

கல்வி கரையில, கற்பவர் நாள் சில

பொது அறிவு : 

 இந்திய ஓவியத்தின் தந்தை யார் ?

விடை : நந்தலால் போஸ்



முக்கியச் செய்திகள் :   

மாநிலச்செய்தி:

நம் மாணவர்களின் கல்விக்காக செய்யும் திட்டங்களை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உள்நாட்டுச்செய்தி:

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து

உலகச்செய்தி:

நாளை டிரம்ப்புடன் சந்திப்பு; அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு

விளையாட்டுச்செய்தி:

துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் போட்டிகளின் 2வது சுற்றுப் போட்டிகளில் நேற்று மாரின் சிலிக், பெலிக்ஸ் அகர் அலியாஸிமே அபார வெற்றி பெற்றனர்...

Monday, 6 April 2020

கப சுர குடிநீா்

கப சுர குடிநீா்

நுரையீரலின் காவலன் கப சுர குடிநீா்-By மருத்துவா் சோ.தில்லைவாணன்  |  

தமிழகத்தில் வைரஸ் சாா்ந்த நோய்த்தொற்றுகள் பரவத் தொடங்கும் ஒவ்வொரு கால நிலையிலும் சித்த மருத்துவத்தின் பங்கு அளப்பரியது. டெங்கு, சிக்குன்குன்யா பரவிய காலகட்டத்தில் நிலவேம்பு குடிநீா் எனும் சித்த மருந்து ஆற்றிய பங்கு அளவில் அடங்காதது. இன்று நிலவேம்பு குடிநீா் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் சித்த மருந்து என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் நுரையீரல் சாா்ந்த நோய்த்தொற்றான பன்றிக் காய்ச்சல் பரவிய காலத்தில் பேசப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து கப சுர குடிநீா். இன்று கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கும் முன்னரே தமிழகம் முழுதும் தேடப்படும் ஒரு சித்த மருந்தாக விளங்குவது கப சுர குடிநீா்தான்.

ADVERTISEMENT

கப சுரம் என்பது பற்றி தேரையா் கரிசல் , சுர வாகடம், யூகி வைத்திய சிந்தாமணி முதலான பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கப சுரத்தின் குறிகுணங்களான தொண்டை நோதல், மேல் மூச்சு - பெருமூச்சு விடல், மூச்சுத்திணறல், இருமல், விக்கல், முகம் - கை - கால் வெளுத்தல், தீவிர வயிற்றுப்போக்கு, இடைவிடாத காய்ச்சல், முப்பிணியை உண்டாக்கி சமயத்தில் கொல்லும் முதலானவை இன்றைய வைரஸ் காய்ச்சல்களின் குறிகுணங்களுடன் ஒத்துப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

 

இத்தகைய தன்மை உடைய கப சுரத்தைத் தீா்க்க கப சுர குடிநீா் பயன்படும் என்பது மறைபொருளாகக் கிடக்கின்றது. சுக்கு, திப்பிலி, கிராம்பு, அக்கிரகாரம், சிறு காஞ்சொறி வோ், கறிமுள்ளி வோ், கடுக்காய், ஆடாதோடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சிறு தேக்கு, சீந்தில், நிலவேம்பு, கோரைக்கிழங்கு, பொன்முசுட்டை வோ் ஆகிய 15 வகை மூலிகைகளை கொண்டது இந்தக் கப சுர குடிநீா்.

இந்த 15 மூலிகைகளில் சுக்கு, கிராம்பு, கற்பூரவள்ளி, திப்பிலி முதலானவை நம் வீட்டில் பல காலமாக நாம் பயன்படுத்தி வருபவைதான். சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, நிலவேம்பு, கோரைக்கிழங்கு முதலானவை வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உடையதாகவும் , நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, பொன்முசுட்டை வோ் போன்றவை அதிகரித்த உடல் வெப்பநிலையைச் சீராக்கும் தன்மை உடையதாகவும் உள்ளன.

இந்த கப சுர குடிநீரிலும் மகத்துவம் வாய்ந்த நிலவேம்பு சோ்க்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன்குன்யா போன்ற ஆா்என்ஏ வகை வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது; இதனால், தமிழக மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக நிலவேம்பு குடிநீா் உள்ளது. பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 ஆா்என்ஏ வகை வைரஸுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு, அதன் நியுராமினிடேஸ் தடுப்பு செய்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

மூச்சுக் குழாயை விரிவடைய செய்யும் தன்மையும், மூச்சு குழாய் வீக்கத்தை சரிசெய்யும் தன்மையும், இருமலை குறைக்கும் தன்மையும் கொண்டது ஆடாதோடை. கற்பூரவள்ளியும், திப்பிலியும், கறிமுள்ளி வேரும் நுரையீரலில் கட்டிப்பட்ட சளியினை (கபத்தினை) வெளியேற்றி, மூச்சிரைப்பினை சரி செய்யும் தன்மை உடையவை; கோஷ்டமும், கிராம்பும் சுரத்தினால் ஏற்படும் உடல் வலியைப் போக்கும் தன்மை உடையவை. சிறு காஞ்சொறி வேரும், சிறுதேக்கும் ஹிஸ்டமின் உற்பத்தியைத் தடுத்து, ஒவ்வாமைக்குக் காரணமான மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தவும் செய்து, சளி உற்பத்தியைக் குறைக்கும் தன்மை உடையன.

சாதாரண சளி காய்ச்சல் முதல் எச்ஐவி வைரஸ் வரையில் அமிா்தவல்லியான சீந்தில் மிகுந்த பயனளிக்கும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க சீந்திலுக்கு நிகா் இல்லை. அமிா்தத்துக்கு ஒப்பான இது வாத, பித்த, கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சரி செய்து ஆயுளைக் கூட்டும்.

தாயினும் சிறந்த கடுக்காயின் பலன்களை அறியாத தமிழக மக்களே இல்லை எனலாம். கப சுர குடிநீரில் கடுக்காய்த் தோல் சேருவதால் சளியினை மலத்தில் வெளியேற்றும்; அத்துடன் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்கவும் உதவும்.

கப சுர குடிநீரில் உள்ள சீந்தில், நிலவேம்பு, திப்பிலி, அக்கரகாரம் முதலானவை உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க உதவும்.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சாம்பாரின் குணம் அதில் சேரும் பொருள்களின் குணத்துடன் ஒத்துப்போவதைப்போல, கப சுர குடிநீா் எனும் மருந்தின் தன்மை அதில் சேரும் ஒட்டுமொத்த மூலிகைச் சரக்குகளின் குணத்தை ஒத்துப்போகும் என்பது உறுதி.

கப சுர குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும் இக்கால கட்டத்தில் அதற்கு மாற்றாக நிலவேம்பு குடிநீா் கொதிக்க வைக்கும்போது அத்துடன் மஞ்சள் பொடி, ஆடாதோடை இலை, வோ், வெற்றிலை, தூதுவளை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை முதலானவற்றைச் சோ்த்துக் காய்ச்சி கஷாயமாகச் சாப்பிடலாம்.

கபத்தைத் தீா்க்கும் கஷாயங்கள் உஷ்ண வீரியமாக இருக்கும் என்பதால், உணவு சாப்பிட்ட பிறகு எடுத்தல் என்பதே சிறந்தது. கப சுர குடிநீரில் சேருபவை வெறும் மூலிகைச் சரக்காக இருப்பினும், அதைப் பயன்படுத்தும் அளவு குறித்த பிற விவரங்களை சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி பின்பற்றுவது நல்லது.

மொத்தத்தில் நுரையீரல் தொற்றுடன் கூடிய வைரஸ் காய்ச்சலில் மட்டுமல்ல, மேல் சுவாசப் பாதை சாா்ந்த அனைத்துத் தொற்றுகளிலும் இந்த கப சுர குடிநீா் நிச்சயம் பலனளிக்கும். கப சுர குடிநீா் சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக அண்மைக்கால டாக்கீங் ஆய்வு எனும் முதல் நிலை ஆய்வு உள்பட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

எனவே, கரோனா நோய்த்தொற்று நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில், சளி - இருமல் - காய்ச்சல் என ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கப சுர குடிநீரைப் பயன்படுத்துவது நிச்சயம் பலன் அளிக்கும்.


கப சுரம் என்பது பற்றி தேரையா் கரிசல் , சுர வாகடம், யூகி வைத்திய சிந்தாமணி முதலான பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த கப சுரத்தின் குறிகுணங்களான தொண்டை நோதல், மேல் மூச்சு - பெருமூச்சு விடல், மூச்சுத்திணறல், இருமல், விக்கல், முகம் - கை - கால் வெளுத்தல், தீவிர வயிற்றுப்போக்கு, இடைவிடாத காய்ச்சல், முப்பிணியை உண்டாக்கி சமயத்தில் கொல்லும் முதலானவை இன்றைய வைரஸ் காய்ச்சல்களின் குறிகுணங்களுடன் ஒத்துப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இத்தகைய தன்மை உடைய கப சுரத்தைத் தீா்க்க கப சுர குடிநீா் பயன்படும் என்பது மறைபொருளாகக் கிடக்கின்றது. சுக்கு, திப்பிலி, கிராம்பு, அக்கிரகாரம், சிறு காஞ்சொறி வோ், கறிமுள்ளி வோ், கடுக்காய், ஆடாதோடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சிறு தேக்கு, சீந்தில், நிலவேம்பு, கோரைக்கிழங்கு, பொன்முசுட்டை வோ் ஆகிய 15 வகை மூலிகைகளை கொண்டது இந்தக் கப சுர குடிநீா்.

இந்த 15 மூலிகைகளில் சுக்கு, கிராம்பு, கற்பூரவள்ளி, திப்பிலி முதலானவை நம் வீட்டில் பல காலமாக நாம் பயன்படுத்தி வருபவைதான். சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, நிலவேம்பு, கோரைக்கிழங்கு முதலானவை வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உடையதாகவும் , நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, பொன்முசுட்டை வோ் போன்றவை அதிகரித்த உடல் வெப்பநிலையைச் சீராக்கும் தன்மை உடையதாகவும் உள்ளன.

இந்த கப சுர குடிநீரிலும் மகத்துவம் வாய்ந்த நிலவேம்பு சோ்க்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன்குன்யா போன்ற ஆா்என்ஏ வகை வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது; இதனால், தமிழக மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக நிலவேம்பு குடிநீா் உள்ளது. பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 ஆா்என்ஏ வகை வைரஸுக்கு நிலவேம்பு ஆய்வு செய்யப்பட்டு, அதன் நியுராமினிடேஸ் தடுப்பு செய்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

மூச்சுக் குழாயை விரிவடைய செய்யும் தன்மையும், மூச்சு குழாய் வீக்கத்தை சரிசெய்யும் தன்மையும், இருமலை குறைக்கும் தன்மையும் கொண்டது ஆடாதோடை. கற்பூரவள்ளியும், திப்பிலியும், கறிமுள்ளி வேரும் நுரையீரலில் கட்டிப்பட்ட சளியினை (கபத்தினை) வெளியேற்றி, மூச்சிரைப்பினை சரி செய்யும் தன்மை உடையவை; கோஷ்டமும், கிராம்பும் சுரத்தினால் ஏற்படும் உடல் வலியைப் போக்கும் தன்மை உடையவை. சிறு காஞ்சொறி வேரும், சிறுதேக்கும் ஹிஸ்டமின் உற்பத்தியைத் தடுத்து, ஒவ்வாமைக்குக் காரணமான மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தவும் செய்து, சளி உற்பத்தியைக் குறைக்கும் தன்மை உடையன.

சாதாரண சளி காய்ச்சல் முதல் எச்ஐவி வைரஸ் வரையில் அமிா்தவல்லியான சீந்தில் மிகுந்த பயனளிக்கும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க சீந்திலுக்கு நிகா் இல்லை. அமிா்தத்துக்கு ஒப்பான இது வாத, பித்த, கபம் ஆகிய மூன்று குற்றங்களையும் சரி செய்து ஆயுளைக் கூட்டும்.

தாயினும் சிறந்த கடுக்காயின் பலன்களை அறியாத தமிழக மக்களே இல்லை எனலாம். கப சுர குடிநீரில் கடுக்காய்த் தோல் சேருவதால் சளியினை மலத்தில் வெளியேற்றும்; அத்துடன் வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்கவும் உதவும்.

கப சுர குடிநீரில் உள்ள சீந்தில், நிலவேம்பு, திப்பிலி, அக்கரகாரம் முதலானவை உடலில் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க உதவும்.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சாம்பாரின் குணம் அதில் சேரும் பொருள்களின் குணத்துடன் ஒத்துப்போவதைப்போல, கப சுர குடிநீா் எனும் மருந்தின் தன்மை அதில் சேரும் ஒட்டுமொத்த மூலிகைச் சரக்குகளின் குணத்தை ஒத்துப்போகும் என்பது உறுதி.

கப சுர குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும் இக்கால கட்டத்தில் அதற்கு மாற்றாக நிலவேம்பு குடிநீா் கொதிக்க வைக்கும்போது அத்துடன் மஞ்சள் பொடி, ஆடாதோடை இலை, வோ், வெற்றிலை, தூதுவளை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை முதலானவற்றைச் சோ்த்துக் காய்ச்சி கஷாயமாகச் சாப்பிடலாம்.

கபத்தைத் தீா்க்கும் கஷாயங்கள் உஷ்ண வீரியமாக இருக்கும் என்பதால், உணவு சாப்பிட்ட பிறகு எடுத்தல் என்பதே சிறந்தது. கப சுர குடிநீரில் சேருபவை வெறும் மூலிகைச் சரக்காக இருப்பினும், அதைப் பயன்படுத்தும் அளவு குறித்த பிற விவரங்களை சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி பின்பற்றுவது நல்லது.

மொத்தத்தில் நுரையீரல் தொற்றுடன் கூடிய வைரஸ் காய்ச்சலில் மட்டுமல்ல, மேல் சுவாசப் பாதை சாா்ந்த அனைத்துத் தொற்றுகளிலும் இந்த கப சுர குடிநீா் நிச்சயம் பலனளிக்கும். கப சுர குடிநீா் சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக அண்மைக்கால டாக்கீங் ஆய்வு எனும் முதல் நிலை ஆய்வு உள்பட பல்வேறு ஆய்வு முடிவுக9ள் தெரிவித்துள்ளன.

எனவே, கரோனா நோய்த்தொற்று நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில், சளி - இருமல் - காய்ச்சல் என ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கப சுர குடிநீரைப் பயன்படுத்துவது நிச்சயம் பலன் அளிக்கும்.

தாஜி அவர்களின் அருளுரை:

13-11-2019 அன்று கோடி தீபம் – விழா, ஹைதராபாத்

தாஜி அவர்களின் அருளுரை:

பிராணாஹூதியை மையமாகக் கொண்ட தியானத்தின் மூலமாக 
“உள்முக ஒளியை” ஒளிரச் செய்யுங்கள். 

ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனின் தலைவர் என்கிற முறையில், இந்த கோடி தீபங்களின் விழாவில், பெருமிதமும், மகிழ்ச்சியும்  கொண்டு பங்கேற்பதை எல்லா அமைப்பாளர்களுக்கும், தன்னார்வர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது போன்ற தொரு தீப விழா என்பது, ஒரு அடையாளம் ஆகும். 
கோடிக்கணக்கான தீபங்கள், நம்மால் ஏற்றப் பட்ட பிறகும்,  இன்னும் இருள் இருகின்றது  என்றால், நமது இதயத்தின் உள்ளே இருள் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கின்றது என்றால், வெளிப்புறத்தில் மட்டுமே, தீபங்களை ஏற்றி வைப்பது என்கிற செயல், முக்கியத்துவம் ஆகாது, என்பதையே காட்டுகிறது.

நாம் பிரபு சிவா, பிரபு கிருஷ்ணா, பிரபு ஹனுமான் போன்றரது சிலைகளைப் பார்க்கின்றோம்;  அவர்கள் தியானத்தில் அமர்ந்து இருக்கின்ற சிலைகளைப் பார்க்கின்றோம்.  ஏன் இந்த கடவுளர்களே தியானத்தில் இருக்கின்றார்கள் என்றும், அதன் கருத்து இன்னது என்றும் நாம் நம்மைக் கேட்டதும் இல்லை.
நான், நம் அனைவருக்குமாக ஒரு விஷயத்தை முன் வைக்கின்றேன்; அதாவது இந்த கடவுளர்களின் தரிசனம் என்பதோடு மட்டும் நின்று விடாமல், அதனைத் தாண்டியும்  சென்றாக வேண்டும்.
நமது இதயத்தின் உள்ளேயே, நாம் உள்ளொளியை ஏற்றி வைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.  ஆகவே, நாம் சென்றே ஆக வேண்டும்; அதாவது இருள் என்பதில் இருந்து, கடவுளின் ஒளிக்கும், அன்பிற்கும் சென்றாக வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் தியானம் செய்ய முடிகிறது என்றால், பிராணாஹூதியுடன் கூடிய தியானத்தை செய்திட முடிகிறது என்றால், அதில் இருந்து பெறப்பட்டும் ஆனந்தம் என்பதே தனிப்பட்ட ஒன்றாக அமைந்திருக்கும் என்பதே எனது தாழ்மையான பிரார்த்தனை. நாம் தெய்வீகத்தை அனுபவித்து ஆக வேண்டும். 

முகஸ்துதி செய்து, வெறுமனே, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருத்தல் மட்டுமே, அதிக முக்கியத்துவத்தை தந்து விடாது. 
நம்மைப் பற்றி என்ன சொல்ல? பிரபு கணேசா உறுதியாக இருக்கின்றார். அவர் அந்த சுண்டெலியைக் கூட காயப்படுத்துவது இல்லை; ஆனால் பாருங்கள் அவரது உருவம் மிகப் பெரும் அளவில், எவ்வளவோ பெரியது; என்றாலும் அவர் மூஞ்சூறு, சுண்டெலியின் மீது ஏறி பயணிக்க முடிகிறது. அவரது பெருமை, பெருமிதம் யார் ஒருவரையும் காயப்படுத்துவதும் இல்லை.  நமது வாழ்க்கையும் அவ்வாறாக, எந்த ஒரு நபரையும் காயப்படுத்தக் கூடிய அளவில் இருக்கக் கூடாது. 

உங்கள் அனைவரையும், தியானம் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.  அந்த தியானத்தை, உங்கள் வாழ்க்கையில் ஒன்றிணைக்கச் செய்து, அது உங்களில் எவ்வாறு தன்மை மாற்றம் ஏற்படச் செய்கிறது என்பதைக் காணுங்கள் என்று கூறி எனது உரையை நான் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி.
**

Wednesday, 11 December 2019

இயற்கையோடு இயைந்து வாழ்தல்: ஹார்ட்ஃபுல்னெஸ் 9


இயற்கையோடு இயைந்து வாழ்தல்: ஹார்ட்ஃபுல்னெஸ் 90 நாட்கள்



90 நாட்கள் திட்டம் அதற்கான பலன்கள் பற்றி நாம் நன்கு அறிவோமா?

இப்போது இருக்கின்ற வாழ்க்கையிலேயே, ஆன்மீக முன்னேற்றம் அவசரமாகத் தேவைப் படுகின்ற ஒன்று , என்பதை நாம் புரிகின்றோமா?

பரவ வேண்டும் ஹார்ட்ஃபுல்னெஸ், பார்க்கும் இடமெல்லாம் என்றால் அதற்கான தூதுவராக நாம் வரவேண்டும் என்றால் அது எவ்வாறு?

எஸ்.பிரகாஷ் எழுதியுள்ள ஒரு கட்டுரை. அற்புதமான கட்டுரை. தூங்குவோரை எழுப்பிடும்; சீக்கிரம் சீக்கிரம் என்னும் ஆன்மீகத் தேவையை நம்மிடம் ஆழப்படுத்திடும்; 90 நாள் திட்டத்தில் நம்மை இன்னும் அர்ப்பணிக்கச் செய்திடும்.

தீவிரமான பயிற்சி செய்வோரை அது கவர்ந்து இழுப்பதுடன், சாதனாவை தீவிரமாகக் கொண்டு செல்ல விரும்புவோருக்கும், 90 நாட்கள் திட்டத்தினை இன்னும் விரைவு படுத்தச் செய்யும்.

ஏப்ரல் 30, 2019 அன்று தாஜி, ஹார்ட்ஃபுல்னெஸ், உலக வழிகாட்டி, 90 நாட்கள் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். தேடலர்களோ, புதியவர்களோ, நிபுணர்களோ எல்லோருமே கற்று, தங்களை ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சியில் வலிமை பெற்றிடவே இந்த திட்டம். புதியவர்களுக்கு இதன் மதிப்பு, 90 நாட்கள் எடுத்துக் கொண்ட பயிற்சியின் மதிப்பு தொட்டிருக்கும். யார் ஒருவர் இதனை கற்று, தங்கள் உள்முகம் கொண்டு செல்ல விழைந்தவராக இருந்தாலும் அது அவ்வாறே ஒரு அனுபவமாகும்.  தியானம் என்றால் அது ஒன்றும் புதியது அல்ல. உலகம் எங்கும் ஏராளமானோர், இதில் இருந்து பலன் அடைந்து வருகின்றார்கள். ஆனாலும் இந்த 90 நாட்கள் பயிற்சி என்பது, பல காலமாக, பயிற்சியை மேற்கொண்டு இருந்து கொண்டு இருப்போருக்கும் அது பலன் தருவதாகவே இருக்கிறது. சில பல ஆண்டுகளாக தீவிரமான தேடலர்களாக இருக்கின்ற, ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சியில் இருப்போர், பலரும், தமது ஆன்மீகப் பயிற்சியை, அன்றாட ஆன்மீகப் பயிற்சியை வலிமைப் பெற்றிட ஆர்வமுடன் இருப்போர், இன்னும் அதிக அளவில் உள்முகமாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் இது துணையாக இருக்கிறது. 


90-நாள் திட்டம்: மூலமும் காரணமும்:

ஆண்டுகள் சில பின்னோக்கிப் பார்க்கின்றேன். சிலர் சாரிஜி, சென்னை காட்டேஜில் இருக்கும் போது, அவரிடம் கேட்டார்கள். “கடவுள் எல்லா இடமும் இருக்கின்றார் என்றால், அவர்கள் எதற்காக மீண்டும் மீண்டும் கோவிலுக்கு சென்று கொண்டே இருக்கின்றார்களே. அது ஏன்?”

·         சாரிஜி சொன்னார். “அது மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும் இடத்தில் தீயைக் கொளுத்திப் போடுவது போன்றதாகும். நீங்கள் அதனை நீக்கி விட்டால், எரியும் நெருப்பில் இருக்கும் கட்டைகள், வெப்பத்தை இழந்து விடும்.  மீண்டும் எரியும் இடம் கொண்டு சென்று, அதனை வெப்பம் ஊட்டும் நிலை வந்து விடும். மக்கள் அப்படிப்பட்டவர்கள்.  அவர்கள் அவ்வாறு போவது என்றால், அவர்கள் இணைப்பு பெற்றிட வேண்டும்/மறு இணைப்பு பெற வேண்டும்/மீண்டும் சக்தியூட்டப்பட வேண்டும் என்பதற்காகவே. அதுவும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.” அத்துடன் அவர் பாபூஜியின் ஒரு சொற்றொடரையும் எடுத்து முன்வைத்தார்

 “எரியும் தணலில் தன்னை அழிக்கும் அந்துப் பூச்சி யாரும் அறிவார். ஆனால், தன்னை தணலாய் ஆக்கிக் கொண்டு எரிதழல் ஊட்டி, தன்னை அழிக்கும் அந்துப் பூச்சி அரிதினும் அரிதே; அவையும் இல்லை இப்போது. (அன்பின் நெருப்பு).” ஆகவே, அவ்வாறான ஒரு நிலை, வருகின்ற வரை தொடரும், இந்த 90 நாள் சாதனா;  நமக்குத் தேவையான 90 நாள் சாதனா; நம்மை அது மீள் சக்தியூட்டி, இறுதியாக அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும். அதன் பிறகு ஏதும் செய்யத் தேவை இல்லை.

சென்னை மெட்ரோ மண்டலத்தில், ஒரு ஒண்ணரை ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் 100 நாள் சவால் ஒன்று ஆரம்பித்தோம். அதில் இருந்து பல அடுக்குக் குழுக்கள் வந்தன. இப்பொது மாஸ்டர் அறிமுகம் செய்து இருக்கின்றார்; 90 நாட்கள் சவால், ஏப்ரல் 2019 –இல். இன்று உலகளாவிய விதமாக ஹார்ட்ஃபுல்னெஸ் இணையத்தில், அது பிரதான இடம் வகிக்கின்றது.
ஒரு 90 நாள் சாதகர், தகவல் ஒன்றைத் தெரிவித்தார். மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நிலவில் இருக்கும், மற்றும் எதிர்காலத்தில் வருகின்ற சென்னை மெட்ரோவின் 100 நாள் சவாலில் தாமும் பங்கேற்றிட விழைவதாகவும் தெரிவித்தார், அவர்.  இந்த நபரை மாணவராக நாம் ஒப்பீடு செய்து பார்த்தால், ஒரு ஆசிரியர் அந்நிலையில் அவரை நேரடியாக பட்டதாரியாகும் வகுப்புக்குச் செல்லவே வைப்பார். இதே வகுப்பு வேண்டியதில்லை என்பார். அவ்வாறு இல்லை என்றால், ஆசிரியரது பணி நன்றாக இல்லை அல்லது மாணவரது பணி நன்றாக இல்லை என்றுதான் பொருள்படும். இது மிகவும் முக்கியமான ஒன்று; அதாவது நம்மிடம் இருக்க வேண்டியது மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கின்ற அர்ப்பணிப்பு வேண்டும். அது 90 நாள் அல்லது 100 நாள் சவால் என்று எதுவாக இருந்தாலும் சரிதான்.

ஆன்மீகத் தேடலில் ஒரு அவசரம் அதற்கான ஆக்கம்: “இதயத்தின் வழி”

இதயத்தின் வழி - தி வே ஆப் ஹார்ட் தனது பிறந்த நாள் அன்றுசெப்டம்பர் 28, 2019 கான்ஹா சாந்தி வனத்தில் தாஜி வழங்கிய உரை.


பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி அவர் எடுத்துச் சொன்னார். குறிப்பிட்டுச் சொல்வதானால், அவர் கடுமையான எச்சரிக்கையும் செய்தார், ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் போது.  “நான் உங்களை பயமுறுத்தப் போகின்றேன்….”

ஒரு வேளை நீங்கள் அடுத்த பிறவி என்று ஒன்று எடுத்து வருகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, கியாரண்டி ஏதும் கிடையாது; இப்படி ஒரு ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. பிராணாஹூதி/ டிரான்ஸ்மிஷனை அடிப்படையாகக் கொண்ட ஹார்ட்ஃபுல்னெஸ் அப்போதும் கிடைக்கும் எவ்விதமான உத்தரவாதமும் கிடையாது.

இது ஒரு கடுமையான எச்சரிக்கை மணி ஓசை. ஹார்ட்ஃபுல்னெஸ்/ சகஜமார்க்க இயக்கத்தில் உள்ள பெரும்பாலானவர்கள், ஒரு நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு வேளை இந்த வாழ்க்கையில் முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் ஒரு வாழ்க்கை வரும். அப்போது இந்த இடத்தில் இருந்து பிடித்துக் கொள்ளலாம்; தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும் என்று ஒரு நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள். ஆனால் மேலே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையோடு, அப்படிப்பட்ட நம்பிக்கை செல்லுபடி ஆகாது.  டிரான்ஸ்மிஷன்/ தகுதி வாய்ந்த குரு போன்றவை யாவும் எதிர் காலத்தில் இனியும் செல்லும் நிலை என்பதில் இல்லை. ஆகவே நாம் ஏதாவது செய்திட வேண்டும் என்றால், அதனை இந்த பிறவியிலேயே, செய்தாக வேண்டும். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று!

சாரிஜியின் இறுதி நாட்களில், அவர் இந்த பூமியில் இருக்கும் போதே, காலத்தின் அவசரம் பற்றி ஒரு அழகான உரை வழங்கினார். காலத்தின் ஓட்டத்தில், இதே போன்று ஒரு தீம் என்பதை முன்னிறுத்தி, நமது ஆன்மீக தேடலை விரைவு படுத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
தாஜியின் அண்மைக் கால எச்சரிக்கையின் வழியே நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். அவர் ஏன் சொன்னார்? அவர் என்ன சொன்னார்? பல்வேறு முறை, நாம் ஒன்றை பல தடவைகள் கேட்டு இருக்கின்றோம். மிஷன் இலக்கியங்களின் படி, பிராணாஹூதி என்பது, ராமபிரானின் தந்தை, தசரதனுக்கு 72 தலைமுறைக்கு முன்பாக இருந்துள்ளது என்று அறிகின்றோம்.  அதனை ஆண்டுகளில் கொண்டு வந்தால், 10-30 ஆயிரம் வருடங்கள் என்று வருகிறது. ஏதோ சில காரணங்களுக்காக, இயற்கையே, பிரணாஹூதியின் ஆற்றலை இயற்கை, தன்னகத்தே வைத்துக் கொண்டது. அதற்கான காரணங்கள் பல பரிமாணங்களில் இருக்கலாம். ஒரு வேளை வாழும் மாஸ்டர் யாரும் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணம் கூட இருக்கலாம். சாரிஜி பாபூஜியிடம் நடந்த ஒரு உரையாடலை நினைவு படுத்தினார். பாபூஜி சொல்லியது என்னவென்றால் ….. நிலைமை இவ்வாறு போய்க் கொண்டு இருந்தால், நான் திரும்பவும் இயற்கையிடம் கொடுத்து விட்டு,  வந்த இடம் சென்று விடுவேன். இயற்கையே முடிவு செய்து கொள்ளட்டும். இதன் பொருள், இந்த டிரான்ஸ்மிஷன் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு விடும். அது மீண்டும் சென்று விடும்.  சாரிஜி பேசினார்; வேண்டினார்; அது போன்று ஏதும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார். அந்த அடிப்படையில், நமக்கும் இன்னும் டிரான்ஸ்மிஷன் கிடைத்து வருகிறது. தாஜியின் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு, எனக்கு ஒரு ஆச்சரியம், மீண்டும் அது கொண்டு வரப்படும் சந்தர்ப்பம் கிடைக்குமா? தாஜி அப்படிப்பட்ட அவசரத்தின் நிலையை நம்முள் இட்டுள்ளார்.

ஹார்ட்ஃபுல்னெஸ் – திருப்புமுனையை அடைய வைப்பது எப்படி?

பிரசித்தி பெற்ற ஒரு நூல். ‘Tipping Point’- திருப்பு முனை. எழுதியது மால்கம் கிளாட்வெல். அந்த நூலின் படி, ஒவ்வொரு விஷயமும் ஆரம்பித்து மிகவும் மெதுவாகத்தான் செல்லும். ஆனால் திருப்புமுனை என்கிற டிப்பிலிங்க் பாய்ண்ட் வந்து விட்ட பிறகு எல்லாமே விரைந்து செல்லும்.  சாரிஜி இந்த திருப்பு முனை மற்றும் கிறித்தவம் பற்றி பேசி இருக்கின்றார். கிறித்தவத்திற்கு இந்த திருப்பு முனைப் புள்ளி வருவதற்கு 300 ஆண்டுகள் ஆனது. இன்று கிறித்தவம் உலகத்திலேயே மிகப் பெரிய மதங்களில் ஒன்றாகும். இன்று ஹார்ட்ஃபுல்னெஸ் இயக்கத்தில் 30-40 லட்சம் மக்கள் பயிற்சி செய்து வருகின்றார்கள். குறிப்பிட்ட அந்த டிப்லிங் பாய்ண்ட் நூலில் குறிப்பிட்டபடி, 5% மக்கள் வந்து விட்டால் போதும், அது திருப்பு முனை என்கிற கட்டத்தை அடைந்து விடும். இன்று உலகத்தில் இருக்கின்ற மக்கள் தொகை 730 கோடி எனில், அதில் 5% என்றால் அது 35-40 கோடிகள் ஆகும். எனவே, நமது ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம், ஒரு 35-40 கோடி மக்கள் தியானம் செய்யும் நிலை வரும் போதுதான், அமைப்பு கீழிறங்காது.  இது எனது கருத்து. இவ்வாறான ஒரு எண்ணிக்கையை, அடைந்திட, மிக முக்கியமான விஷயம், நாம் வாழும் உதாரணங்களாக ஆகிட வேண்டும்.

நான் விற்பனைப் பகுதியில் இருக்கின்ற காரணத்தில் ஒரு விஷயத்தை உணர்ந்துள்ளேன். பொருள் ஒன்றைப் பற்றி பேச வேண்டும் என்றால், சொந்தமாகப் பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும்.  அதில் பலனை கண்டிருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ஒரு மனிதன் வாசனைப் பொருள் ஒன்றை விற்பனை செய்கின்றான். வாங்குங்கள்- என்று மட்டும் சொல்லி விட்டால், வாங்கிட ஒருவரும் முன் வரார். ஆனால், அவன், இந்தப் பொருளை எனது வீட்டில் உள்ள பெண்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள். அது நன்றாக இருக்கின்றது என்பதைக் கண்டுள்ளார்கள் என்பதை அவன் சொல்ல வேண்டும். வாடிக்கையாளருக்கு ஒரு எண்ணம் மிகும்; வாங்கலாம் என்று தோன்றும். ஆகவே சொந்த அனுபவம் வேண்டும்; பலன்களைக் காண வேண்டும்; அதுவும் நமது வாழ்க்கையில் இருக்க வேண்டும்; இதுவே முக்கியமானவை. ஹார்ட்ஃபுல்னெஸ் தியானமும் அப்படித்தான்.  நாம் நமது கதையை அங்கே எடுத்துச் சொல்ல வேண்டும். அது எவ்வாறாக எனக்குப் பயன்பட்டது என்று சொல்லத் தெரிய வேண்டும். இப்போது, எனக்கு  ஆச்சரியம் வரலாம். ஏன் பிறர் ஹார்ட்ஃபுல்னெஸ்ஸின் பலன்களை இன்னும் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளவில்லை? இதயபூர்வமாக பயன்படுத்த வில்லை? நினைத்துப் பார்க்கின்றேன்.

இங்கே இந்த இடத்தில்தான் 90 நாள் சவால் வருகிறது. நீங்கள் யாரிடமாவது சொல்ல விரும்பினால், ஹார்ட்ஃபுல்னெஸ் நல்லது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல விரும்பினால், சொல்ல வேண்டியது என்னவென்றால், ஒருவர், தங்களைத் தாங்களே தன்மை மாற்றம் அடையச் செய்திட முடியும்; அது ஒரு அற்புதமான ஒன்றாகும் என்று சொல்ல வேண்டும். நாமே நம்மிடம், அவ்வாறான தன்மை மாற்றத்தை, ஒரு கால கட்டத்திற்குள், கவனத்தோடு இருந்து  பெற்றிட வில்லை என்கிற நிலையில், மற்றவர்களை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளச் செய்திட முடியும். வெறுமனே வாய்ச் சொல் வீரம் மட்டுமே அங்கே இருக்கும்.  ஹார்ட்ஃபுல்னெஸ் வைரங்கள் என்று நாம் சொல்லி வைக்க மட்டுமே முடியும். எங்கள் மாஸ்டரும் வைரம்தான் என்றும் சேர்த்து சொல்லிட முடியும்.  ஒருவேளை நாம் நன்கு அறிந்திடலாம். ஆனால் ஒரு புதிய நபர், தேடலர் அதை எவ்வாறு அங்கீகரிக்க முடியும்? ஒரு கரித் துண்டு வைரம் ஆகிடும் என்று சொல்வது போன்றதுதான் அது. இது போன்ற தன்மை மாற்றம் எப்போது ஏற்படும்? கரித் துண்டு ஆழத்திற்குச் செல்ல வேண்டும். அது அங்கே ஏற்படுகின்ற அழுத்தம், காலகாலமாக, ஏற்படுகின்ற அழுத்தத்தை ஏற்று நின்று நிலைக்க வேண்டும்.  ஒரு புதிய தேடலர், நம்மைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஹார்ட்ஃபுல்னெஸ் பற்றி அறிந்திட வேண்டும் என்றால், அவர் நம்மைக் கரித்துண்டாகவே பார்க்கின்ற நிலையில், நாம் நம்மை வைரம் என்று சொல்லி வருகின்றோம்.

ஆகவே மற்றவர்களை ஏற்கச் செய்திடநாம் செய்ய வேண்டியதுதான் என்ன?  தாஜி இப்போது அதனைகோடிட்டு காட்டுகிறார்நமது ஆன்மீக லட்சியத்தை அடைந்திட வேண்டும் என்றால்அது இந்த வாழ்க்கையிலேயே இருந்தாக வேண்டும்வரக்கூடிய எதிர்கால வாழ்க்கையில் அதற்கெல்லாம் எவ்வித உத்தரவாதமும் இல்லைநாம் படித்து இருக்கின்றோம்லாலாஜி மகராஜ் இந்த நிலையை 7 மாதங்களில் அடைந்தார்.  தாஜி இப்போதுதனது அண்மைக் கால உரைகளில், 3 மாதங்களில் சாத்தியம் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.  ஆனால்அதற்காக சாதகர்சரியான விதத்தில் முயற்சி மேற்கொண்டாக வேண்டும்அத்துடன் தீவிரமான அர்ப்பணிப்பு கொண்டிருக்கவும் வேண்டும்ஆகவே, 3 மாதங்களுக்குள்ளாகவேநமது மாஸ்டர் நம்மை ஒளி பிரசவிக்க சேர்க்க முடியும்அதற்கான வாய்ப்பு இருக்கிறது!

ஆன்மீக அவசரத்தின் அடிப்படையில், 90 நாள் திட்டம்

ஏப்ரல் 30-இல் தாஜி பேசும் போதுஅவர் 90 நாள் சவாலை அறிமுகம் செய்தார்அதாவதுநாம் மாஸ்டரது மனக் கருப்பையில் இருந்தால்நமது பயிற்சியை முழுமையான இதயத்தோடு செய்கின்றோம் என்றால்அப்போது அது சாத்தியம்ஆன்மீக ஆளுமை என்கிற நிலையில்ஒளி உலகத்தில் பிரசவம் ஆகிட முடியும்.

நமது சாதனா தீவிரமாக வேண்டும்; இந்த 90 நாட்களில் தீவிரமாக வேண்டும். அப்போது, நமது இதயத்தின் கதவுகள் திறக்கும்; மாஸ்டர் அங்கே நுழைய வேண்டும் என்று அது திறக்கிறது. மாஸ்டர் தனது பணியைச் செய்ய முடியும். நாம் தீவிரமாக அர்ப்போடு இருக்கின்ற நிலையில், அவர் நம்மை ஒளி உலகத்தில் பிரசவிக்க செய்வார். “நெருப்பில் பூடம் போடுவதற்காக” நமக்குக் கிடைத்திட்ட ஒரு சந்தர்ப்பம் அது.  90 நாட்கள் சவால், அது நமக்கும் மாஸ்டருக்கும், நமது அர்ப்பணிப்பின் அடிப்படையில், இருக்கின்ற நேரடியான தொடர்பு ஆகும்.  இந்த காரணத்திற்காகவே, நாம் நமது பணியை வசதியாக்க வேண்டும். இது நடந்திட வேண்டும் என்பதே பணி; பிரிசெப்டர்களது பணி; தன்னார்வர்களது பணி; புரிந்து கொள்ளல் அவசியம்.
ஆனால், நமது ஆழமான அர்ப்பணிப்பு, என்பது சோதனைக்கு உள்ளாகிறது. பங்கேற்பாளர்கள், இது போன்ற சவால்களில் ஏற்கனவே, பங்கேற்றவர்கள். பல ஆண்டுகளாக, பயிற்சி செய்து வருவோர் என்றாலும், அவர்களும் சில கருத்துக்களை சொல்கிறார்கள். இந்த 90 நாள் சவால், என்பதன் மூலமாக, இன்னும் சற்று ஆழமாக, தாங்கள் செல்கிறார்கள் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த 90 நாள் சவாலில், இப்போது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது கேள்வித் தாள். விடையளிப்பது பங்கேற்பாளர்களின் கடமை. விடை நன்றாக, சரியாக இருக்க வேண்டும் என்றால், சாதனாவில் ஆர்வம் தேவை; சாதனாவில் தீவிரம் தேவை. நாம் அவ்வாறு பயிற்சி மேற்கொண்டால், நாம் வெற்றியாளர் ஆகலாம். உறுதிபட தோல்வியே இல்லை. சாரிஜி சொல்வார்,”தோல்வி என்றால் அது ஒன்றுமில்லை. அது ஒரு அனுபவம் அவ்வளவே.” ஆகவே, நாம் இப்போது இதில் இருந்து, நாம் கற்றுக் கொள்கின்றோம். இந்த 90 நாள் சவால், நமக்கு இயற்கையே தந்திட்ட ஒரு மாபெரும் வாய்ப்பு; கனிவோடு கொண்டு வந்துள்ள வாய்ப்பு.  நாம் தீவிரமாக செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பு.  ஒரு வழக்கு உண்டு. இந்த பிரபஞ்சத்திலேயே தற்செயல் நிகழ்ச்சி என்று எதுவுமே இல்லை; ஆகவே பங்கேற்பு என்றால் கூட அதுவும் ஒரு ஆசியே.

இது தொடர்பான மேலதிக விவரங்கள்; 90 நாள் சவால் மற்றும் யாத்ரா பற்றிய எனது கட்டுரை இணையத்தில்:


இறுதியாக, இது போன்ற திட்டங்களின் வெற்றி உறுதியாக வேண்டும் என்றால், நாம் ஒரு “தியான நிலையை” அல்லது அது ஒரு நிலையான நினைவு என்பதாகும். இந்த நிலையை அடைந்திட, 90 நாள் திட்டம் என்றால் அது முதல் நாளே ஆரம்பம் ஆகும். 90 நாள் முடிந்தால், இன்னும் சில 90 நாள் சவால் தேவைப் படலாம். இந்த திட்டம், உங்கள் சொந்த அர்ப்பணிப்பின் மீதுதான் இருக்கும். மாஸ்டருடனான உங்கள் இணைப்பில்தான் இருக்கிறது. இந்த பலன் எல்லோருக்குமானதாகும்.

90 நாட்கள் ரீசார்ஜ் ஒரு நேரத்தில் –பலன்கள் பலப்பல:

27 ஆண்டுகள் நான் யாத்ராவில் இருக்கின்றேன். என்னுள்ளே, உள்முக மாற்றத்தை உணர்கின்றேன். வெளிப்புற மாற்றம் இருக்கின்றது. அதில் குணநல மாற்றமும் உண்டு. மிகப்பெரிய பலன்களைப் பற்றி மாஸ்டரே அறிவார். 90 நாள் சவால் பங்கேற்பிலும் அறிந்திட முடியும். ஆனால், பிரதானமான பணி உங்களுடையது ஆகும். இதற்கான பெரிய கருவிகள் 90 நாள் திட்டத்தில் இருக்கின்றன. “நடத்தை என்றால், அது நீங்கள் இருட்டில் செய்திடும் விஷயமாகும்.” நேர்மையாக உங்களைப் பற்றி பரிசீலனை செய்ய வேண்டியது தேவை. 90 நாள் செக்-லிஸ்டில் உள்ளபடி உங்கள் மாற்றத்தை உணர முயற்சி செய்யுங்கள். நேர்மையிலும் நேர்மையாக இருத்தலே சாலச் சிறந்த ஒன்றாகும். ஒரு வேளை அதில் ஒரு நாள் செய்ய முடியவில்லை; செய்ய வில்லை என்றால், நான் இனிமேல் வரக்கூடிய காலத்தில் அவ்வாறு விட்டு விட மாட்டேன் என்கிற உறுதிமொழியை, நானே எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆனால் அதில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள வேண்டியதில்லை. என்றாலும், இந்த 90 நாள் திட்டத்தில், உயர்ந்த மட்டத்துப் பணிகள் நடக்கின்றது. என்ன நடக்கின்றது என்பது வெளிப்படுத்தப் படுகின்றது. 90 நாள் சவாலில், நாம் நம்மை அர்ப்பணித்துக் கொண்டால், அப்போது, வளர்ச்சிக்கான, உள்ளாற்றல் மிகும். நீங்கள் பணிபுரியும் போது, உங்கள் உள்ளூர் பிரிசெப்டர்களுடன் இணைந்து பணிபுரியலாம்; இந்த யாத்ராவில் நீங்கள் சக பயணிகள் என்கிற அளவில் உங்கள் பணி இருக்கட்டும்.

மேலும் விவரங்களுக்கு:


நன்றி.

எஸ்.

Thursday, 14 November 2019

அறிவியல் பலகை –

• இன்று – 15/11/2019—
• அறிவியல் பலகை – அறிவியல்  கேள்வி பதில.
ஒடுக்க வினை என்றால்...
ஒரு வேதி வினையில் ஹட்ரஜன் சேர்க்கப்படுவதோ அல்லது ஆக்சிஜன் நீக்கப்படுதலோ
அல்லது எலக்ட்ரான் ஏற்கப்படுதலோ நியகழும்போது அந்த வினை ஒடுக்கவினை எனப்படும்.

• அறிவியல் கேள்வி பதில்...

• பள்ளி வளாகத்தில் மண்புழு வளர்க்கும் இடத்திற்கு – A PLACE WHERE THE EATHWORMS ARE REARED IN SCHOOL PREMISES..விடை. உரக்குழி  COMPOST PIT.

• ஒலிச்செறிவை அளக்கும் அலகு – NOISE POLLUTION CAN BE MEASURED BY –விடை. டெசிபெல்  DECIBEL.

• மக்காத பொருளுக்கு எடுத்துக்காட்டு  AN EXAMPLE FOR NON BIO DEGRADLE WASTE IS—
விடை.பாலிதன் பை POLYTHENE BAG.

• செம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா போன்ற விலங்குகளின் உரோமத்திலிருந்து நமக்குக்
கிடைப்பது WHAT IS OBTAINED FROM THE BODY BAIRS OF ANIMALS SUCH AS SHEEP, LAMA
AND GOAT? விடை. கம்பளி.

• உணவை வெட்டவும், கிழிக்கவும் உதவும் பற்களின் வகைகள் THE TYPE OF TEETH WHICH
ARE USED FOR CUTTING AND TEARING OF FOOD ARE  விடை.கோரைப்பற்கள் CANINES.

Monday, 11 November 2019

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?- சீதை சொன்ன நீதி!

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?- சீதை சொன்ன நீதி!

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும், பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும், பொறுத்துக் கொள்ளவேண்டும்.

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ''தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார். 

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு அனுமன், ''தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ''அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்' என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும், நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும், அதற்குக் காரணம் நாம் செய்த வினைப்பயன்தான் என்பதை உணர்ந்து, நாம் பதிலுக்கு அவரைப் பழிதீர்க்க நினைக்கக்கூடாது.