Monday, 6 April 2020

தாஜி அவர்களின் அருளுரை:

13-11-2019 அன்று கோடி தீபம் – விழா, ஹைதராபாத்

தாஜி அவர்களின் அருளுரை:

பிராணாஹூதியை மையமாகக் கொண்ட தியானத்தின் மூலமாக 
“உள்முக ஒளியை” ஒளிரச் செய்யுங்கள். 

ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனின் தலைவர் என்கிற முறையில், இந்த கோடி தீபங்களின் விழாவில், பெருமிதமும், மகிழ்ச்சியும்  கொண்டு பங்கேற்பதை எல்லா அமைப்பாளர்களுக்கும், தன்னார்வர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது போன்ற தொரு தீப விழா என்பது, ஒரு அடையாளம் ஆகும். 
கோடிக்கணக்கான தீபங்கள், நம்மால் ஏற்றப் பட்ட பிறகும்,  இன்னும் இருள் இருகின்றது  என்றால், நமது இதயத்தின் உள்ளே இருள் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கின்றது என்றால், வெளிப்புறத்தில் மட்டுமே, தீபங்களை ஏற்றி வைப்பது என்கிற செயல், முக்கியத்துவம் ஆகாது, என்பதையே காட்டுகிறது.

நாம் பிரபு சிவா, பிரபு கிருஷ்ணா, பிரபு ஹனுமான் போன்றரது சிலைகளைப் பார்க்கின்றோம்;  அவர்கள் தியானத்தில் அமர்ந்து இருக்கின்ற சிலைகளைப் பார்க்கின்றோம்.  ஏன் இந்த கடவுளர்களே தியானத்தில் இருக்கின்றார்கள் என்றும், அதன் கருத்து இன்னது என்றும் நாம் நம்மைக் கேட்டதும் இல்லை.
நான், நம் அனைவருக்குமாக ஒரு விஷயத்தை முன் வைக்கின்றேன்; அதாவது இந்த கடவுளர்களின் தரிசனம் என்பதோடு மட்டும் நின்று விடாமல், அதனைத் தாண்டியும்  சென்றாக வேண்டும்.
நமது இதயத்தின் உள்ளேயே, நாம் உள்ளொளியை ஏற்றி வைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.  ஆகவே, நாம் சென்றே ஆக வேண்டும்; அதாவது இருள் என்பதில் இருந்து, கடவுளின் ஒளிக்கும், அன்பிற்கும் சென்றாக வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் தியானம் செய்ய முடிகிறது என்றால், பிராணாஹூதியுடன் கூடிய தியானத்தை செய்திட முடிகிறது என்றால், அதில் இருந்து பெறப்பட்டும் ஆனந்தம் என்பதே தனிப்பட்ட ஒன்றாக அமைந்திருக்கும் என்பதே எனது தாழ்மையான பிரார்த்தனை. நாம் தெய்வீகத்தை அனுபவித்து ஆக வேண்டும். 

முகஸ்துதி செய்து, வெறுமனே, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருத்தல் மட்டுமே, அதிக முக்கியத்துவத்தை தந்து விடாது. 
நம்மைப் பற்றி என்ன சொல்ல? பிரபு கணேசா உறுதியாக இருக்கின்றார். அவர் அந்த சுண்டெலியைக் கூட காயப்படுத்துவது இல்லை; ஆனால் பாருங்கள் அவரது உருவம் மிகப் பெரும் அளவில், எவ்வளவோ பெரியது; என்றாலும் அவர் மூஞ்சூறு, சுண்டெலியின் மீது ஏறி பயணிக்க முடிகிறது. அவரது பெருமை, பெருமிதம் யார் ஒருவரையும் காயப்படுத்துவதும் இல்லை.  நமது வாழ்க்கையும் அவ்வாறாக, எந்த ஒரு நபரையும் காயப்படுத்தக் கூடிய அளவில் இருக்கக் கூடாது. 

உங்கள் அனைவரையும், தியானம் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.  அந்த தியானத்தை, உங்கள் வாழ்க்கையில் ஒன்றிணைக்கச் செய்து, அது உங்களில் எவ்வாறு தன்மை மாற்றம் ஏற்படச் செய்கிறது என்பதைக் காணுங்கள் என்று கூறி எனது உரையை நான் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி.
**

No comments:

Post a Comment