[5/28, 20:21] +91 96770 68557: தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.. நீங்கள் சொல்லும் அறிகுறிகள் பல எனக்கு உள்ளன. நான் நீங்கள் சொல்வது போன்ற வாழ்வியல் சூழ்நிலையில் இருந்து வந்தவன் தான். கட்டாயம் நம் பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்ய முயற்சி செய்வேன். இப்பொழுது
எனது முதல் கேள்வியும் இரண்டாம் கேள்வியும் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறது தயவுசெய்து இதை விளக்க வேண்டுகிறேன்.
[8/2, 19:00] Dr. Pal Pandian Ayya Tharsarbu: பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு
காலையில் சென்று தூரத்தில் உள்ள ஒரு மலையை பார்த்து
கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு
பெரிய பொக்கிஷம் உள்ளது, என்று ஒருவன் கேள்விப்பட்டான்.
உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான்.
மணலின் மீது அவனது நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.
பொக்கிஷத்தை பெற அவன் மணலை தோண்ட ஆரம்பித்தான்.
அவன் தோண்ட தோண்ட சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது.
அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது,அவன் தோண்டி
கொண்டே இருந்தான்.நண்பகலில் அவன் நிழல் அவன்
காலடிக்குள் நுழைந்து கொண்டது.
நிழலே இல்லை.
அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவனது செயல்
கண்டு சிரித்தார்.அவன் அவரை பார்த்தான்.அவர் கூறினார்:
இப்போதுதான் உன் நிழல் பொக்கிஷம்
இருக்கும் சரியான இடத்தை காண்பிக்கிறது.
அது உனக்குள்ளே இருக்கிறது என்றார்.
[8/5, 20:18] Dr. Joseph Sidda: பாரதத்தின் ஆன்மமார்க்கங்களில் ஒன்றான சக்திபாதையின் தேவதைகள் வீற்றிருக்கும் இடங்கள் சக்திபீடங்கள். அவற்றுள் முக்கியமான ஒரு பீடம் மேற்கு வங்கத்திலுள்ள தாராபீடம். அன்னை தாரா அங்கு கொலுவீற்று இருக்கிறார். மிகமுக்கியமான தாந்திரிக வழிபாட்டு தலம் இது.
தந்தையால் அவமதிக்கப்பட்ட சதி யோககுண்டத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள, மனைவியின் மரணத்தால் விரக்தியுற்ற சிவபெருமான் தன் ருத்திரதாண்டவத்தை தொடங்கினார். இதனால் உலகம் அழியும் சூழல் உருவானது. நிலைமை கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சதியின் உடலை பல துண்டுகளாக்கி பூமியில் பல பகுதிகளில் விழச்செய்தார். சதியின் கண் வந்து விழுந்த இடமே தாராபீடம். தாரா என்ற சொல்லுக்கு கண் என்றும் ஒரு பொருள் உண்டு.
தாராபீடத்தில் அன்னையின் கோவிலின் அருகேயே தாந்திரீக சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்ய மயானம் அமைந்துள்ளது. மகாசமாஷனா என்று அழைக்கப்படும் இந்த மயானம் அன்னை தாரா நடமாடும் இடம். அன்னையின் உக்கிரத்தை தணிவிக்கும் பொருட்டு தினமும் பலிகளும் உண்டு இங்கு. தாந்திரீக பாதையில் ஆன்ம பயணம் மேற்கொள்ளும் யோகிகள் பலர் இங்கு தங்கி தங்கள் சாதனைகளை தொடர்ந்துவருகின்றனர்.
ஆம் ... அன்னை தாரா ஆட்சி செய்யும் தாந்திரீக பேரரசின் தலைநகரே தாராபீடம்..
அப்பேரரசில் அன்னையின் குழந்தையாக, இளவரசராக வலம்வந்தவரே
யோகி பாமகேபா... (வாமகேபா என்றும் வழங்கப்படுவார்)... ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தருக்கு சமகாலத்தவர்...
‘பித்துபிடித்த’ யோகி என்று அழைக்கப்பட்டவர்... ‘கேபா’ என்ற வங்கச்சொல்லுக்கு ‘பைத்தியம்’ என்றே பொருள் ...
அனைத்து சம்பிரதாய சடங்குமுறைகளையும் தகர்த்தெறிந்தவர் அவர்...
1837 ஆம் ஆண்டில் தாராபீடம் அருகே அட்லா என்ற கிராமத்தில் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே அவர் தனது கேள்விகளுக்கு சிலை உருவாய் வீற்றிருக்கும் அன்னை காளி பதிலுரைக்காவிட்டால் கடும்கோபத்தை வெளிப்படுத்துவார். அழுவார். மண்ணில் புரள்வார்...சீற்றம் கொள்வார்.
என்ன ஒரு உரிமையும் நம்பிக்கையும் தாயின் மீது... !
படிப்பில் நாட்டமில்லை. சிறந்த பாடகராய் இருந்த தந்தையின் உடன் பாடுவார் பாமகேபா. பாடும்போதே உருகி உணர்ச்சி மேலிட்டு சிலையாய் நின்றுவிடுவார் தந்தை. பாமகேபாவின் தந்தையும் ஒரு யோகியே. அவரே சிறுவன் பாமகேபாவை தாராபீடத்தின் மயானபூமிக்கு முதலில் அழைத்துச்சென்றார்.
பதினாறு வயதில் குலகுருவிடம் தீட்சை. சிறிது காலத்திலேயே தந்தையின் மரணம். குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய பாமகேபாவோ சதாநேரமும் தாராபீடத்தில் இருந்தார். அன்னையின் திருஉருவம் முன் இரவும் பகலும் உன்மத்தமாய் உருக்கமாய்
ஏக்கமாய்
கோபமாய் பாடிக்கொண்டே இருப்பார்.
1864 ஆம் ஆண்டு ‘பிசாசு சித்தர்’ என்றழைக்கப்பட்ட ‘ப்ரஜாபசி கைலாசபதி’ தாராபீடத்துக்கு வருகைதந்தார். அவர் துளசி மாலை அணிந்திருப்பார். ஆனால் நரிகளுடனும் நாய்களுடனும் காகங்களுடனும் சேர்ந்து ஒரே இலையில் உணவருந்துவார். ஆவிகளுடனும் பிசாசுகளுடனும் உரையாடுவார். அவை அவரது ஆலோசனையை கேட்க வந்துசெல்லும். பாமகேபாவுக்கு உடனடியாக அவரைப்பிடித்துப்போனது. அவரைப்போலவே பாமாவும் செயல்பட ஆரம்பித்தார்.
ஒருநாள் கனவில் பாமகேபாவுக்கு அன்னை தாரா தோன்றி நெல்வயல்களுக்கு நெருப்புவைக்க சொல்லும் காட்சி கிடைத்தது. பாமாவும் உடனடியாக அன்னையின் ஆணையை ஏற்று நெருப்பிட்டார். மக்கள் அதனை அணைக்க போராடிக்கொண்டிருந்தனர். பாமாவோ அந்த பெருநெருப்புக்கிடையே அன்னையின் உருவமே கண்டார். தாம் நெருப்பிட்டதற்கு பரிகாரமாக ‘ஜெய் தாரா’ என்று அன்னையாய் வாழ்த்தியவாறு நெருப்பில் குதித்தார். நெருப்பை அணைத்தபின் எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்தில் கைலாசபதியின் குடிசையில் இருந்தார் அவர். அன்னையின் கரம் நீண்டு நெருப்பில் இருந்து தன்னை தூக்கி வனத்துக்குள் வீசியது என்று சொன்னார்.
பின்னர் குரு கைலாசபதியிடம் தீட்சை ‘தாரா மந்திர’ தீட்சை பெற்றார் பாமகேபா. குரு கைலாசபதிக்கு ஏற்பட்ட அனைத்து அனுபவங்களும் பாமகேபாவுக்கும் ஏற்பட்டன.
தாராபீடத்தின் பூசாரியாக பாமகேபா பொறுப்பேற்றார். மயானத்தில் உற்சாகமாய் வலம்வருவார். நாய்களுடன் நட்பாக இருப்பார். அவற்றுக்கு பெயரிட்டு அழைப்பார். அவற்றுடன் தன உணவை பகிர்ந்துகொள்வார்.
ஒருமுறை அன்னைக்கு படைக்க வைத்திருக்கும் உணவை எடுத்து அருந்தினார் பாமகேபா. அதனைக்கண்டு கோபமுற்ற சகபூசாரிகளும், காவலர்களும் அவரை அடித்து உதைத்தனர். பாமாவோ அன்னையே தனக்கு அவ்வாறு ஆணையிட்டதாக சொன்னார். அன்றிரவு அந்த நதோர் பகுதியின் ராணிக்கு ஒரு கனவு. அதில் அன்னை தாரா உடலெங்கும் இரத்தம் வழியும் காயங்களுடனும், அக்காயங்களில் இருந்து வழிந்த குருதியை ஓநாய்களும் கழுகுகளும் சுவைக்க, சோகமே உருவாக கண்ணீர் வழிய தாராபீடத்தை விட்டு வெளியேறி கைலாயத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட ராணி அன்னையிடம், ‘அம்மா என்ன காட்சி இது? ஏன் எங்களை விட்டு செல்கிறீர்கள்?’ என்று வினவினார். அன்னை பதிலுக்கு ‘நான் பலயுகங்களாக இங்கே இருக்கிறேன். ஆனால் எனது மகனை உனது பூசாரிகள் அடித்து உதைத்து விட்டனர். ஓர் அன்னையாக அந்த அடிகளை நான் ஏற்றுக்கொண்டேன். எனது உணவை எனது மகன் சாப்பிடதடை செய்துவிட்டீர்கள். நான்கு நாட்களாக நானும் பட்டினி கிடக்கிறேன். எனது உணவை எனது மகனுக்கு முதலில் படையுங்கள். அவன் அருந்தியபின்னர் எனக்கு படையுங்கள். இல்லையேல் நான் நிரந்தரமாக இவ்விடத்தை விட்டுசெல்வேன்’ என்று சொன்னார். பாமகேபாவின் பெருமைகள் அதன்பின்னரே அனைவருக்கும் புரிந்தது.
அன்னைக்கும் அவருக்கும் இருந்த உறவு உலகோரின் எந்தவித புரிதலுக்கும் உட்பட்டதன்று. எந்தவித சம்பிரதாயங்களும் கிடையாது அவர்களிடையே. அன்னையை கொஞ்சுவார். சிறிது நேரத்தில் கடும்கோபம் கொண்டு கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுவார். அன்னையை நோக்கி, ‘நீ ஒரு கல். உன்னால் எப்படி உணவு உட்கொள்ள முடியும்?’ என்று கேட்டு அனைத்து உணவையும் அவரே சாப்பிடுவார். சிலசமயம் மிச்சம் ஏதாவது உணவை வைத்து அன்னையை நோக்கி வீசி, ‘அம்மா, எடுத்துகொள்’ என்று சொல்வார். மண்டை ஓடுகளில் மதுவருந்துவார். பூசாரி என்றாலும் எவ்வித மந்திரங்களையும் அவர் ஓதுவதில்லை. பூஜை நேரங்களை மறந்து நாட்கணக்கில் சமாதிபாவத்தில் அமர்ந்திருப்பார்.
சீடர்கள் என்று அவரை நெருங்கியவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டனர். ஒருமுறை சீடராக தன்னை ஏற்றுக்கொள்ள சொன்ன வேண்டிவந்தவரை உதைத்து அனுப்பினார் பாமகேபா. சுற்றியிருந்தவர்களிடம் வந்தவர் கல்கத்தாவில் நடந்து வந்த தனது வியாபாரம் குறித்த சிந்தனையில் இருந்ததாக கூறினார் பாமகேபா.
நோய்களை குணமாக்கும் அவரது முறைகள் மிக விசித்திரமானவை. பாம்புகடித்து வந்தவரின் உடலில் இருந்து விடத்தை பாமாவே உறிஞ்சிக்கொண்டு நீலநிறமாய் மாறுவார். கடிபட்டவர் பிழைத்துக்கொள்வார். கொல்வதற்கு கழுத்தை நெரிப்பது போல பலம்கொண்டு நெரித்து ஒருவரை குணமாக்குவார்.
வாழ்க்கை முழுதும் உலகோர் கருதும் தூய்மையின்மையின், அசிங்கங்களின் அடையாளமாய் வாழ்ந்தார் அவர். எனினும் அத்தனை சித்திகளும் அவரை சரணடைந்திருந்தன. பூஜையின் அத்தனை பாரம்பரிய வழக்கங்களையும் உடைத்தார் அவர். சொல்லவோ நினைக்கவோ அச்சப்படும் செயல்களை அன்னையின் திருமுன் செய்தார். அன்னையோ அவரை விட்டு கணமும் அகலாமல் தன்னை விட மகன் முக்கியம் என உலகுக்கு அறிவுறுத்தி அவரைக்காத்தார்.
முதிய வயதிலும் அவரது பித்துநிலையில் எவ்வித மாற்றமுமில்லை. பெருமழைக்கு நடுவே அன்னையுடன் பேசியவாரோ அன்னையை ஏசியவாரோ நடந்து செல்வார். அவரது சமாதிவரை அன்னையுடனான அவரது உறவு இவ்வாறு நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஸ்ரீஸ்ரீ பாமகேபா தனது உடலை உதறி நிரந்தரமாய் அன்னையுடன் ஒன்றானார்.
மேற்கு வங்காளத்தில் மிகவும் புகழ்பெற்ற தாந்த்ரீக ஞானி அவர். ‘சாதக பாமகேபா’ என்ற தொலைக்காட்சி தொடர் வங்கமொழியில் வரலாறு காணாத அளவில் 1500 அத்தியாயங்களையும் கடந்து அனைத்து மக்களாலும் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டது.
திருவடி சரணம்🙏🏽
[8/12, 15:06] Dr. Joseph Sidda: ஹஸ்ரத் தாவூத் ஷா என்ற அந்த அலுவாலியா அரேபியாவில் இருந்து சுமார் 625 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வந்தார். வேணாடு கிராமம் வந்து சேர்ந்த அவர், அதுவே இவ்வுலகில் தமது நோக்கம் நிறைவேற ஏற்ற இடம் என்பதை அறிந்து அங்கேயே தங்கினார்.
அங்குள்ள மக்களுடன் ஒன்றாகி உறவாடியவர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். தமது சக்தியால் நோய்களை நீக்கியும் அற்புதங்கள் நிகழ்த்தியும் அம்மக்களுக்கும் தம்மை நாடிவந்த அனைவருக்கும் அன்பான துணையாய் நின்றார்.
தம்மோடு அவர் அழைத்து வந்த அவரது தங்கை வாகிதாவும் அண்ணனோடு சேர்ந்து மக்களுக்கு உதவியாய் இருந்தார்.
குறித்தகாலம் பணிகளை செய்தபின்னர்,
இந்த உலகில் தமது கடமைகள் நிறைவுற்றதை அறிந்த அந்த அவதூதர், உடலை உதற எண்ணி, ஒரு குழி தோண்டி அதில் தாம் படுத்துக்கொண்டார். எப்போதுமே குழந்தைகளை நேசிக்கும், குழந்தைகள் நேசிக்கும் அவர், அன்று தம்மோடு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அந்த குழியை தாம் படுத்த பின்பு மூடிவிடுமாறும், அதற்கு பரிசாக அவர்கள் தமது மண் பானையிலிருந்த பேரீச்சம் பழங்களையும், பொட்டுக்கடலையையும் எடுத்துக்கொள்ளுமாறும் சொன்னார்.
குழந்தைகளும் அந்த குழியை மூடிவிட்டு, பரிசை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். வீட்டில் இருந்தவர்களிடம் விபரம் சொல்ல, அவர்கள் பதறிப்போய், தங்களோடு இவ்வளவு நாள் அன்பாய் இருந்த மகானை தேடி விரைந்தனர். அந்த குழியை தோண்டி அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் ஒருபக்கம் தோண்ட தோண்ட மறுபக்கம் அந்த சமாதி நீண்டு கொண்டே சென்றது. அவ்வாறு 144 அடிகள் நீண்டது. மக்கள் இறை சித்தத்தையும், அதன் முன்னர் தங்கள் இயலாமையையும் உணர்ந்தவர்களாக, தங்கள் முயற்சியை கைவிட்டனர். சமாதியை தங்கள் வழிபடும் தலமாக ஏற்றுக்கொண்டனர்.
இன்றும் அந்த சமாதி ஆந்திராவில் ஸ்ரீ ஹரிகோட்டா அருகில் உள்ள வேணாடு கிராமத்தில் உள்ளது.
மண்ணால் ஆன சமாதி பல சமயங்களில் கடலில் இருந்து வீசும் பெரும்காற்றினால் சற்று சிதைந்தாலும், அடுத்த நாள் யாருடைய முயற்சியும் இன்றி தன்னைத்தானே சீர்செய்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
சமாதியின் இன்னொரு விசேஷம் ஒவ்வொரு அமாவசை அன்றும் நள்ளிரவுக்கு மேல், சமாதி மனிதர்களை போல மூச்சு விடும். அதைக்காண பல்லாயிரம் மக்கள் அமாவாசை தினங்களில் வேணாடு கிராமத்துக்கு வந்து பெருமானின் ஆசிகளை பெற்று திரும்புகின்றனர்.
வேண்டும் மக்களுக்கு உதவி செய்வதையே வாழ்வின் நோக்கமாக கொண்ட மகான், இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து தரிசனம் செய்யும் மக்களின் வேண்டுதல்களை இன்றும் நிறைவேற்றி வருகிறார்.
திருவடி சரணம்🙏🏼
[8/16, 23:06] +91 73738 87398: ஐயா அறிதுயில் காலையில் விழித்தவுடன் தொடர்ந்து செய்து வருகிறேன். தூக்கநேரம் குறைந்துள்ளது. ஆனால் அறிதுயிலில் முதல் இருபது நிமிடங்கள் மனம் அலைபாய்ந்து, பின் ஒடுங்கிய நிலையில் ஒரு வித அதிர்வு ஏற்படுவது போல் உள்ளது இது பிரமையா அல்லது சரியானதா தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி ஐயா.
[8/16, 23:37] Dr. Pal Pandian Ayya Tharsarbu: வணக்கம்
இது பிரமை அல்ல....
தளர்வு என்பது இறுக்கம் நீங்கி ஒரு வெற்றிடம் உருவாகும் அனுபவம்...
அறி துயிலின் நிறைவில் ஏற்படும் ஒப்படைப்பின் போது அளப்பரிய அருள் ஆற்றல் நம்மை ஆட்கொண்டு எழுச்சி பெறும்....
இதன் தொடக்க நிலையே இந்த அதிர்வு அனுபவம்...
இது ஏற்படும்போது மனம் தோன்றி இதை பற்றி எடை போடாமல், கணிக்காமல், மேலும் உடன் பட்டு ஒருங்கிணைய ஆழ்நிலை அருள் அனுபவம் விழிப்புக்கு எட்டும்....
நன்றி...தொடருங்கள் அக வழியில்...
திருவடி சரணம்🙏🏻
[8/18, 23:07] Dr. Pal Pandian Ayya Tharsarbu: பகவான் ரமணரின் வாழ்வில் -
அன்னை சாந்தம்மாள்
=======================
சாந்தம்மாள் அறையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை வர்ணித்தார்.
"ஒருமுறை யாரோ ஒரு ஐரோப்பியர் ஆஸ்ரமத்திற்கு குதிரை வண்டியில் வந்திறங்கினார். நேரே அறைக்குள் சென்றார். ஒரு துண்டுச் சீட்டில் தான் எழுதியதை பகவானிடம் கொடுத்தார். பகவான் அதைப் படித்துவிட்டு அவரைப் பார்த்தார். உடனே அந்த மனிதர் கண்களை மூடிக்கொண்டு அமைதியானர். சிறிது நேரத்தில் பகவானும் கண்களை மூடிக்கொண்டு இருவரும் சேர்ந்தே அமைதியாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த சிலரும் அந்த அமைதியில் மூழ்கினார்கள். பதினோறு மணிக்கு மதிய உணக்கான மணி அடிக்கப்பட்டது. ஆனால் பகவானும் அந்த ஐரோப்பியரும் நகரவேயில்லை. பன்னிரெண்டு மணிக்கு இருவரும் கண்களைத் திறந்தார்கள். அந்த ஐரோப்பியர் ஆனந்தமாக வெளியே சென்றார்"
பகவான் ஒருமுறை சொன்னார்.
"எந்தப் பாத்திரத்தை எடுத்துண்டு சமுத்திரத்துக்குப் போறோமோ அவ்ளோதான் தண்ணி எடுத்துண்டு வரமுடியும். சின்ன கிண்ணமா இருந்தா அவ்ளோதான் தண்ணி கொண்டு வரலாம். வாளியாயிருந்தா ஒரு வாளி தண்ணி கிடைக்கும். போ.... போயி அந்த சமுத்திரத்தைக் கொள்ளையடி"
இந்த ஐரோப்பியர் சமுத்திரத்தைக் கொள்ளையடிக்க வந்திருந்தார். பகவானின் அருளை வாங்கிக்கொண்ட அந்த ஐரோப்பியர் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்த மனிதர் என்று சாந்தம்மாள் என்னிடம் சொன்னார்.
*****************************
ஒரு துறவியைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் சாந்தம்மாள் பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை வயதான வடக்கிந்திய துறவி ஒருவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து சில வாரங்கள் தங்கினார். கடைசி நாளன்று பகவான் முன் வந்து நின்றார்.
"பகவான்! ரமணாஸ்ரமத்தின் எல்லாமும் எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. நான் இப்போது கிளம்ப சித்தமாயிருக்கிறேன். என்னுடைய இதயத்தின் ஆசையை நிறைவேற்றுங்கள்"
பகவான் இதுவரையும் இதற்கு அப்புறமும் செய்யாத ஒன்றைச் செய்தார். எழுந்திருந்தார். அந்தத் துறவியருகில் நடந்து சென்றார். அவரைத் தொட்டார்.அந்தத் துறவி கண்ணீர் மல்க பகவானின் திருவடிகளில் விழும் வரை இருவரும் இதே போல் கொஞ்ச நேரம் நின்றார்கள். முகத்தில் நிறைவான ஒரு சிரிப்புடன் அந்தத் துறவி எழுந்தார். பகவான் பார்த்துக்கொண்டிருக்க வெளியே சென்றார்.
*****************************
மைசூர் மஹாராஜா பற்றிய ஒரு செய்தி வேறெந்த புத்தகத்திலும் இல்லாததை சாந்தம்மாள் பகிர்ந்திருந்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒவ்வொரு தனிப்பட்ட ராஜா, ராணி, அரண்மனை, இராணுவம் என்று நிர்வகிக்கப்படும் முன்னூறுக்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்தன. இவைகளில் ஹைதராபாத்தும் மைசூரும் மிகப்பெரியவை. மைசூர் மஹாராஜா பண்டிதர். கலைகள் மற்றும் கலாசார போஷகர். ஒரு நாள் இரவு வெகு நேரம் கழித்து பகவானிடம் வந்தவர் மறுநாள் அதிகாலை வரை தங்கியிருந்தார். பகவானை தனியாகப் பார்க்க விரும்பினார். ஆனால் அதற்குமுன் பகவான் யாரையும் அதுபோலப் பார்க்க அனுமதித்ததில்லை. அறையில் எப்போதும் பக்தர்கள் இருப்பார்கள். மலை மீது ஏறும் போதும் பக்தர்கள் இருப்பார்கள்.
ஆகையால் அவர் குளித்த எட்டிக்கு எட்டடி இருக்கும் குளியலறையில் மஹாராஜாவைப் பார்க்க அனுமதியளித்தார். பகவானின் திருவடியில் விழுந்து மஹாராஜா கதறினார். ராஜாவின் கண்ணீர் தனது பாதங்களை நனைத்தது என்று பகவானே சொன்னதாக சாந்தம்மாள் எழுதுகிறார். மஹாராஜா பின்னர் எழுந்திருந்து சொன்னார்.
"பகவான், அவர்கள் என்னை ராஜாவாக்கி அரியணையில் அமரவைத்துவிட்டார்கள். இந்தக் காரணதினால்தான் என்னால் இங்கே வந்து உங்களோடு தங்கி உங்கள் முன்னால் இருக்க முடியவில்லை. என்னுடைய வாழ்நாளில் இந்த சில மணித்துளிகள்தான் பொக்கிஷம் போன்றது. இதற்குப்பின்னால் என்னால் வர முடியாது. என்னை ஆசீர்வதியுங்கள்"
சாந்தம்மாள் மஹாராஜவைப் பற்றி பகவானிடம் கேட்டபோது பகவான் சொன்ன ஒரே வரி.
"அவர் ஒரு பழுத்த பழம்"
*******************************
ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை தீபத்திருநாள் பத்து நாள்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். அருணாசலேஸ்வரர் நகரெங்கும் வீதிகளில் ஊர்வலமாக வருவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அற்புத தரிசனத்தைக் காண கூடுவார்கள். இந்த பக்தர்களில் பெரும்பாலும் பிச்சைக்காரர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் போன்றோர் ரமணாஸ்ரமத்திற்கு சாப்பிட வருவார்கள். எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட வருஷத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. சாப்பாடு போடுவதை நிறுத்திவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவெடுத்த ராத்திரி சாந்தம்மாள் ஒரு சொப்பனம் கண்டார்.
பகவானுடன் அறையில் சாந்தம்மாளும் அமர்ந்திருக்கிறார். ஏதோ ஒரு பூச்சி அவரருகே பறக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பூச்சி பெரிதாக ஆரம்பித்து கடைசியில் இறக்கைகள் உடைய ஒரு பெரிய சிகப்புக் குதிரையாக உருமாறிவிடுகிறது. அது முதலில் பகவானை பிரதக்ஷிணம் செய்தது, பின்னர் ஆஸ்ரமம் முழுக்க வலம் வந்தது, கடைசியாக மீண்டும் பகவானிடம் வந்து பின்னர் மறைந்துவிட்டது. அடுத்த நாள் காலையில் இந்த கனவின் பலனை அறிவதற்காக மிகவும் ஆர்வத்துடன் பகவானை அனுகினார் சாந்தம்மாள்.
"கார்த்திகைத் திருநாளின் போது தேவர்களும் கடவுளர்களும் சாதுக்களாவும் பிச்சைக்காரர்களாகவும் திருவண்ணாமலைக்கு வருவா. அவாளுக்கு சாப்பாடு போறது நம்மளோட பாக்கியம்" என்றார் பகவான்.
அடுத்த நாள் காலையில் இதை சின்ன ஸ்வாமியிடம் சாந்தம்மாள் சொல்ல அவர் உடனே கூட்டம் வரும் அடுத்த பத்து நாள்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் சாதுக்களுக்கும் ஆஸ்ரமத்தில் உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பகவான் முன்னிலையில் பிரகாசமான சில வெளிச்சங்களை சாந்தம்மாள் காண்பார்.
"முதலில் நான் பகவானிடம் வந்த போது சூரியனைப் போன்ற பிரகாசமான வெளிச்சத்துக்கு நடுவில் பகவான் இருப்பதைப் பார்த்தேன். பின்னர் இந்த வெளிச்சம் எனது இரு புருவங்களுக்கு மத்தியில் தெரியும். ஒருமுறை பகவானின் சிரசிலிருந்து பெரும் விளக்கொன்று எரிந்து அறை முழுவதையும் பிரகாசத்தால் நிரப்பியது. அந்த வெளிச்சத்தில் பகவானுடன் சேர்த்து எல்லாம் மறைந்துவிட்டது. ஆனால் அங்கே "நான்" என்ற ஒளிரும் ஒன்று மட்டும் மிதந்துகொண்டிருந்தது. இதை பகவானிடம் நான் தொடர்புபடுத்திச் சொன்னபோது அவரும் இப்படி சில திருஷ்டாந்தங்கள் ஏற்படும் என்று ஆமோதித்தார்." என்று சாந்தம்மாள் சொல்கிறார்.
"ஒருவர் தான் எப்படியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியைப் பார்க்கணும். ஆனாலும் அதில் தெரியும் பிம்பம்தான் தான் என்று கொள்ளவேண்டாம். புலன்களாலும் மனதினாலும் என்னவெல்லாம் அறியப்படுகிறதோ அவையெல்லாம் உண்மையில்லை. பார்க்கப்படுபவை எல்லாமே மனது உருவாக்குபவைதான் அதை உண்மையென்று நம்ப ஆரம்பித்தால் ஆன்மிக வளர்ச்சி நின்றுவிடும். யாருக்கு இவை தெரிகின்றது என்பதை ஆராய வேண்டும். யார் இதைப் பார்க்கிறார் என்று கண்டுபிடிக்கவேண்டும். எல்லா நினைவுகளையும் விட்டு அந்தப் பரிபூர்ண உணர்தல் நிலையில் அசையாமல் இருக்கவேண்டும்"
*******************************
ஒருமுறை வடக்கே ஒரு கோடியில் இருந்து ஒருவர் ஆஸ்ரமத்திற்கு வந்து சில வாரங்கள் தங்கினார். கிளம்பும் நாளன்று பகவான் முன்னால் வந்து நின்றார்.
"பகவான், நான் செல்கிறேன். திரும்பவும் எப்போது வருவேன் என்று தெரியாது. உங்களோடேயே நித்யமும் இருந்து பலனடைபவர்களைக் காட்டிலும் நான் துரதிர்ஷ்டசாலி. நீங்களாக என்னை நினைக்காமல் வெகு தூரத்தில் இருக்கும் இந்த பாவிக்கு நீங்கள் எப்படி உதவிசெய்வீர்கள்? உங்களது மனதில் எனக்கொரு இடம் அளிக்க வேண்டுகிறேன்" என்றார்.
"ஞானிக்கு மனசுன்னு ஒண்ணு கிடையாது. மனசுங்கிற ஒண்ணே இல்லாதவன் எப்படி ஞாபகம் வச்சுண்டு உன்னை நினைப்பான்? இந்த பிரார்த்தனையெல்லாம் நான் எப்படி நினைவுல வச்சுப்பேன்? உன்னோட பிரார்த்தனைகளை நான் இந்த பிரபஞ்சத்தோட கடவுளுக்கு அனுப்பறேன். அவர் உன்னைப் பார்த்துப்பார். இது அவரோடு லோகம்" என்று அந்தப் பக்தருக்குச் சொல்லி வழியனுப்பிய பின்னர் பகவான் எங்களிடம் திரும்பிச் சொன்னார்.
"ஞானியிடம் சூழ்ந்து இருக்கிற பக்தர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்புக் கிடைக்கும்ணு மனுஷாள்ளாம் நினைக்கிறா. குரு பாரபட்சமா நடந்துண்டா அவர் எப்படி ஞானியா இருக்கமுடியும்? மனுஷாளோட உபசாரத்திலேயும் கவனிப்புலேயும் குளிர்ந்து போறத்துக்கு அவரென்ன அவ்ளோ முட்டாளா? தூரமா இருக்கறது பிரச்சனையா? தன்னோட அகங்காரத்தை விட்டுட்டு முழுசுமா அர்ப்பணிச்சுக்கறவாள்ட்டே குரு திருப்தியடையறார். அப்படிப்பட்ட மனுஷன் எங்கேயிருந்தாலும் குருவால பாதுகாக்கப்படறான். அவன் தொழ வேண்டாம். அவன் கேட்காமலேயே கடவுள் அவனைப் பார்த்துக்கிறார்"
இதற்கு பின்னர் பகவான் தண்ணீரில் இருக்கும் தாமரைத் தண்டில் வாழும் தவளை பற்றிய உதாரணம் சொன்னார். தவளை அந்த தாமரையின் அருகாமையில் இருந்தாலும் தேனீக்குதான் தேன் கிடைக்கிறது. தூரத்திலிருந்து பறந்து வந்து தேனைக் குடித்துவிட்டு திரும்பவும் பறந்துவிடுகின்றன். அவைகள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவை.
****************************
சாந்தம்மாளின் நேர்த்தியான பதிவுகள் இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தேடுபவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
அருமையான சமையல்காரராக இருந்த சாந்தம்மாள் நல்ல திடகாத்திரமானவர். ஒரு நாள் பெரிய பானை ஒன்றில் சாம்பார் கொதித்துக்கொண்டிருந்தது. பகவான் திடீரென்று சமையலறைக்குள் நுழைந்தார். மூன்று ஆள்கள் தூக்கும்படியான பெரிய பானை அது. சாம்பார் ரொம்பவும் கொதித்துவிட்டதால் நெருப்பிலிருந்து அதை எடுத்துக் கொட்டும்படி சொல்லிவிட்டு பகவான் சென்றுவிட்டார். யாரும் அருகில் இல்லையென்றாலும் சாந்தம்மாள் தனியொரு ஆளாக அதை இறக்கி வைத்துவிட்டார். இதைச் செய்து முடித்தவுடன் அதிசயப்பட்டுப்போனார்.
"இது பகவான் செய்த அற்புதம். சாதரணமா ஒரு தனி பொம்பளையால அந்தப் பானையைத் தொடக்கூட முடியாது. பகவான் சொன்னதால என்னால அந்தப் பானையை இறக்கிவைக்க முடிஞ்சுது" இப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை அவர் பகவான் மீது வைத்திருந்தார்.
**********************************"
பலாக்கொத்தில் வசித்த சாதுக்களுக்கு சாந்தம்மாள் அன்போடு பல உதவிகள் செய்திருக்கிறார். அவர்கள் தங்களது உணவை தாமே சமைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு முடியாத பொருள்களான ஊறுகாய் போன்றவைகளும் ஆஸ்ரமத்தில் சில நாள்கள் செய்யப்பட்ட இனிப்புகளையும் அவர்களுக்குப் பகிர்வார். இவையெல்லாமே பகவானுக்குத் தெரிந்துதான் செய்தார். ஒருமுறை ஆஸ்ரமத்தில் அவியல் செய்தார்கள். முருகனார் பலாக்கொத்தில் வசித்தார். பகவான் சாந்தம்மாளைக் கூப்பிட்டு..
"முருகனாருக்கு அவியில்னா ரொம்பவும் பிடிக்கும். அவருக்கு யார் அவியல் தருவா?" என்று கேட்டார். சாந்தம்மாள் உடனே முருகனாருக்காக அவியல் எடுப்பதற்கு சமையலறைக்கு ஓடினார். அவியலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு பலாக்கொத்திற்குச் என்றால் முருகனார் தனது உணவை பிச்சையெடுப்பதற்கு நகரத்திற்குச் சென்றிருந்தார். வீதியில் ஓடிச்சென்று முருகனாரைப் பிடித்து பகவான் அவருக்காக அவியல் கொடுத்ததாகச் சொனார். முருகனார் பகவானின் பெரும் கருணையை எண்ணி கதறி அழுதார்.
************************************
வயோதிகம் வந்தவுடன் ஆஸ்ரமத்திற்காக தேக உழைப்பை தன்னால் தரமுடியாது என்று சாந்தம்மாள் உணர்ந்தார். ஆஸ்ரமத்திற்கு சுமையாக இல்லாமல் கிளம்பிவிட உத்தேசித்தார். அன்றிரவு பகவான் அவரது சொப்பனத்தில் வந்தார்.
"நீ எங்கே போவே சாந்தம்மா? உனக்கப்புறம் யார் என்னைப் பார்த்துப்பா?" என்றார்.
மறைமுகமாக பகவான் தான் அவரைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். தனது இறுதி நாள்கள் வரை சாந்தம்மாள் நிம்மதியாக ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார்.
தனது முழுவாழ்வை தான் நேசித்த குரு நாதருக்கே அர்ப்பணித்து பிரதிபலன் கருதாது வாழ்ந்த அன்னை சாந்தம்மாவின் அருள் உள்ளம் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்
அருணாச்சல குரு ரமணாய🙏🏻
-------------------------------------------------------
[8/19, 18:44] Dr. Joseph Sidda: அவரது பெயர் வள்ளிமலை சுவாமிகள். அவருக்கு ‘திருப்புகழ் சுவாமிகள்’ என்றொரு பெயரும் உண்டு. அதனின்றே திருப்புகழைப் பாடியதும் பரப்பியதுமே அவரது வாழ்வில் அவருக்கு இறை இட்ட பணி என்பது புரியும்.
ஈரோடு மாவட்டம் பவானியில் 1870 நவம்பர் 25 ஆம் நாள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அருளால் பிறந்தவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அர்த்தநாரி. கல்விச்சாலைக்கு செல்ல வீட்டில் வசதியில்லை, இளம்வயதிலேயே திருமணம், உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் மைசூர் அரண்மனையில் சமையல் வேலை, என்றவாறு அவரது வாழ்க்கை மிகவசதியாக இல்லாவிட்டால் கூட, சராசரி வசதிகளுடன் சென்று கொண்டிருந்தது.
திடீரென துயரங்கள் அரங்கேறின. மனைவியும், மகள்களும் நோயினால் மரணமடைய, இருந்த ஒரு மகனும் தூரதேசம் போய்விட்டான். அர்த்தநாரிக்கும் எம்மருந்தினாலும் தீராத வயிற்றுவலி.
அனைதுகதவுகளும் மூடப்பட, அவருக்காக திறந்த கதவுகள் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணியின் கோவிற்கதவுகள். அங்கு சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தவருக்கு வழியில் ஒரு பெண்மணி பாடிக்கொண்டிருந்த திருப்புகழ் உள்ளத்தில் பதியுமாறு முருகப்பெருமான் லீலை செய்தார்.
சிறிது நாளில் வயிற்றுநோய் அவரை விட்டகன்றது. ஆனால் திருப்புகழ் அவர் நெஞ்சைவிட்டு நீங்கவே இல்லை.
தமிழ் கற்றார். திருப்புகழின் பொருள் கற்றார். முருகப்பெருமான் மீது தீராத காதலுற்றார். முருகன் அபிஷேகத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர்கொண்டு வருவார்.
அவ்வாறு ஒருமுறை வந்தார் திருவண்ணாமலைக்கு. ஸ்ரீ பகவான் தரிசனம் பெற்றார். இடுப்பில் கோவணத்துடனும், கையில் கோலுடனும் நின்ற பகவான் அர்த்தநாரியை உற்றுநோக்க, அர்த்தநாரி அங்கு தரிசித்ததோ பழனி தண்டாயுதபாணியை. மெய் சிலிர்த்தார். அளவிடவியலா ஆற்றல் தன் உடம்பில் பாய்வதை உணர்ந்தார். பேரானந்தத்தில் கண்ணீர் வழிந்து அவர் உடலை நனைத்தது. சிறிது காலம் ஆசிரமத்தில் அவர் தங்க அவர்களிருவரிடையே ஓர் ஆழமான உறவு உருவானது.
தமிழகம் மட்டுமின்றி இமயம், காஷ்மீர். நேபாளம், பண்டரிபுரம் என பல தலங்களுக்கு யாத்திரை சென்றார் அர்த்தநாரி. இமயத்தில் ஓர் மகான் அவருக்கு தீட்சை அளித்து, சச்சிதானந்த சுவாமிகள் என்ற பெயரும் தந்தார். எனினும் தாம் இன்னும் முழு ஆன்ம விழிப்பு அடையவில்லை என அவர் உணர்ந்தார். உணர்ந்தபோது மீண்டும் அவருக்கு பகவான் நினைவு வந்தது. மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து பகவானுடன் தங்கினார். சில நாட்கள் கழித்து புறப்பட்டவரை பகவான் ‘செல், தொடர்ந்து தேடு, உனது தேடல் நிறைவடையும்’ என்று வாழ்த்தி அவரை அனுப்பிவைத்தார்.
செல்லும் வழியில் சேஷாத்ரி சுவாமிகளை தரிசித்தார் சச்சிதானந்தர். சேஷாத்ரி சுவாமிகள் அவரைக் கண்டதும், ‘திருப்புகழ் தானே உனது தாரக மந்திரம்?’ என விசாரிக்க, சச்சிதானந்தர் ஆச்சரியப்பட்டார். தொடர்ந்த சேஷாத்ரி சுவாமிகள், ‘உலகில் அனைத்து வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள இறைநிலை பற்றிய பேருண்மைகள் திருப்புகழில் எளிய வார்த்தைகளில் உள்ளன. அதனியே உனது வேதமாகக் கொண்டு, வள்ளிமலைக்கு சென்று சாதனை செய். நானே உன்னை அங்கு வந்து சந்திக்கிறேன்’ என்று அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்.
பெருமகிழ்வுடன் வள்ளிமலை சென்றார் சச்ச்தானந்தர். திருப்புகழை இன்னும் ஊன்றிக்கற்றார். அதற்கு இசைவடிவமும் தந்தார். சாதிமத பேதம் கடந்து தம்மிடம் வந்த அனைவருக்கும் திருப்புகழ் கற்பித்தார். அவரது ஞானத்தால் கல்லாதோரும், பார்வையற்றோரும் திருப்புகழில் தேர்ச்சி பெற்று ஞானமடைந்தனர். திருப்புகழ் மீதான ஆர்வம் சமூகத்தில் அவரால் மேலும் மேலும் அதிகரிக்க ஒரேசமயத்தில் 150 மாணவர்கள் அவரிடம் திருப்புகழ் கற்றனர்.
‘திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை’ என அவர் திருப்புகழ் பாராயணத்தை ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆன்ம வழியாக்கினார். அதே தலைப்பில் ஒருநூலும் இயற்றினார். மெய்க்காவல், அனுஷ்டான திருப்புகழ், மார்கழி பாராயண திருமுறை என்ற பிறநூற்களும் அவரது படைப்பே.
புத்தாண்டு அன்று திருத்தணியில் ‘படி விழா’ என்ற பெயரில் அங்குள்ள 365 படிகளையுள் படிக்கொரு திருப்புகழ் பாடல் பாடி ஏறும் வண்ணம் செய்தார். அவ்விழா முருகப்பெருமானின் பிற கோவில்களுக்கும் பரவியது.
அவரது பணிகளால் மனநிறைவு அடைந்த சேஷாத்ரிசுவாமிகள் சச்சிதானந்தருக்கு ஞானம் மற்றும் சித்திகளை அளித்தார். இதன்மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் சித்தியையும் அடைந்தார் சுவாமிகள்.
தம்மை நாடி துயரங்களுடன் வந்தோருக்கு ஆறுதல் மொழி அளித்தார். உலகியல் பிரச்சனைகளில் வழிகாட்ட வேண்டிவந்தோருக்கும், ஆன்ம முன்னேற்றம் தேடி வந்தோருக்கும் வழிகாட்டினார். ‘உன் கர்வத்தை விட்டுவிடு. கடமைகளை ஒருபோதும் விட்டுவிடாதே’ என்பது சுவாமிகள் நமக்கு வழங்கிய முக்கியமான பாடம்.
திடீரென ஒருநாள் சேஷாத்ரி சுவாமிகளிடமிருந்து திருவண்ணாமலைக்கு வருமாறு அழைப்பு வர குருநாதரை சந்திக்க புறப்பட்டவர் 1929 ஜனவரி 4 அன்று சேஷாத்ரி சுவாமிகள் சமாதி அடையும் வரை உடனிருந்தார். மீண்டும் வள்ளிமலை வந்தவர் பெரும்பாலும் தவத்திலும் மௌனத்திலும் கழித்தார். அடியவர்கள் பெருக ஆசிரமம் வளர ஆரம்பித்தது.
முருகப்பெருமானை அடைய வள்ளி பயன்படுத்திய மார்க்கமான பக்தி, சேவை, சன்மார்க்கம் ஆகிய குணங்கள் கொண்ட ‘வள்ளி சன்மார்க்கம்’ என்னும் மார்க்கமே ஆன்ம விடுதலை அடையும் வழி என்பது சுவாமிகள் உலகுக்கு அளித்த முறை ஆகும்.
1950 நவம்பர் 22 ஆம் நாள், தாம் சென்னை கந்த கோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த கந்த சஷ்டி விழா முடிந்த சில நாட்களில் சுவாமிகள் முருகப்பெருமானை நினைத்தவாறு உடலை நீத்தார். வள்ளிமலையில் அவர் ஏற்கனவே நிர்ணயித்திருந்த இடத்தில் சுவாமிகள் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி கோவில் எழுப்பப்பட்டது.
திருவடி சரணம்🙏🏽
[8/20, 23:14] Dr. Pal Pandian Ayya Tharsarbu: கி.பி 1671, சரியாக 348வருடங்களுக்கு முன்பு...
அதிகாலையிலேயே எண்ணற்ற பக்தர்கள் துங்கபத்ராவில் குளியல்.
மனதில் ஒரு விதமான துக்கம் பரவி இருந்தது அனைவரிடத்திலும். திவான் வெங்கண்ணா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார் பதட்டமாய்.
மூலராமர் பூஜைக்காக வந்த மலர்களில் நறுமணங்கள் கமழந்தது. காலை நேரத்து சிலு சிலுவென்ற சில்லென்ற காற்று மாஞ்சாலம் முழுவதும் அப்பியது.
ஆம் இதோ. ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இன்னும் சிறிது நேரத்தில் பிருந்தாவனத்தில் அமர போகிறார்.
இதோடு இந்த மகானை எப்போது காணப் போகிறோம் என கலக்கம் அனைவரின் விழிகளிலும்..
அனைவருக்கும் முன்பாகவே குரு ராயர் துங்கையில் குளித்து மூலராமர் பூஜைக்கு தயாரானார்.
அவருக்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார் யோகிந்திர தீர்த்தர். நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன.
ஸ்ரீ ராகவேந்திரர் அனைவரையும் ஆசிர்வதித்தார். பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாடினார்.
" உங்களையெல்லாம் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, உங்கள் கவலைகளை நான் மீட்பேன், நீங்கள் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், இந்த உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும், நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?, நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன். உண்மையான பக்தியோடு என்னை காண வரும் பக்தனுக்கு அவனுடைய கவலையை போக்குவேன், மாஞ்சாலம் வர முடியா விட்டாலும் இருந்த இடத்தில் தூய உள்ளத்தோடு வணங்கினால் கூட போதும் , இப்போது மூலராமர் பூஜை ஆரம்பமாக போகிறது. அனைவரும் அமைதியாக அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்" என பூஜையை ஆரம்பித்தார்.
பூஜைக்காக மூலராமர், விஜயராமர், ஜயராமர், சந்தான கோபாலர் போன்ற விக்கிரங்களை வரிசையாக வைத்தனர் சிஷ்யர்கள்.
வீணையை வாசித்து கொண்டே கிருஷ்ணரை பற்றிய பாடலை உருக்கமாக கண்ணீர் மல்க பாடினார். பக்தர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
திடீரென்று ஒரு பரவசம்.
ஆம் ......
ஸ்ரீ ராகவேந்திரர் பாடலை கேட்டு சந்தான கோபால விக்கிரகம் நாட்டியம் ஆடியது.
பக்தர்களும் ஓம் ஸ்ரீ ராகவேந்திரா... ஓம் ஸ்ரீ ராகவேந்திரா என விண்ணை மீண்டும் அளவிற்கு குரலெழுப்பினர்.
பூஜைகள் முடிந்த பின்னர் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க , வேத மந்திரங்கள் கணீரெண்று ஒலிக்க குரு பிருந்தாவனம் அருகில் சென்றார்.
கூடியிருந்த அனைவருக்கும் தீர்த்தமும், மங்கள அட்சதையும் வழங்கினார்.
பிரம்ம தண்டம், துளசி மாலையும் ஒரு கையில் மறு கையில் கமண்டலம். ஓம் நமோ நாராயணா என்று சொல்லியபடி பிருந்தா வனத்தை நோக்கி நடக்கலானார்.
சிரித்த முகத்தோடு மக்களை பார்த்த படியே தெய்வீக முகத்துடனே பிருந்தாவனத்தில் பிரவேசித்தார்.
யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார். பிரம்ம தண்டத்தை தோளில் சாய்த்தார். கமண்டலத்தை கீழே வைத்து துளசி மாலையை வலது கரத்தில் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
அனைவரின் கண்களும் துளசி மாலையையே பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நிமிடத்தில் துளசி மாலை கீழே விழுந்தது.
அனைவரும் குரு ராகவேந்திரா....குரு ராகவேந்திரா என கரகோஷம் எழுப்பினர்.
அப்படி குரு பிருந்தாவனத்தில் அமர்ந்த நாள்தான் இன்று. அவர் அமர்ந்து 348 வருடங்கள் முடிந்து 349 வருடம் துவங்குகிறது.
இன்று ராகவேந்திரரை உளமார உணர்ந்து அறிதுயில் ஆழுங்கள்.... வாழ்வில் வசந்தம் வீசும்.
அறி துயில் இரவு அன்பர்கள் அனைவருக்கும்🙏🏻
No comments:
Post a Comment