Wednesday, 11 September 2019

தற்சார்பு2

[4/22, 20:01] Dr. Joseph Sidda: சாதி, மத அடையாளங்களைத் துறந்து மனிதத்தன்மை மட்டுமே மனிதனின் அடையாளமாய் வாழ வலியுறுத்தும் அமைப்பே மெய்வழிச் சாலை. அமைப்பின் தலைமையிடத்தின் பெயரும் அதுவே.

இஸ்லாமியராய் பிறந்த ஒருவர் தமது மதத்தை சர்ந்த பெரியவா் ஒருவா் மனிதனின் பிறப்பின் நோக்கமே 'அநியாய மரணம்' அடைந்து எமனிடம் போகாமல் 'நியாய மரணம்' அடைந்து இறைவன் திருவடி சோ்வதே என்று கூற, அதிலிருந்து  அவரது எண்ணம், சிந்தனை, பாா்வை எல்லாமே அந்த 'அநியாய மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி?' என்ற ஏக்கத்தாலேயே நிரம்புகிறது.  ஞானத்துக்கான வேட்கை பிறக்கிறது. தன் மத வேதமான திருக்குரானுடன், சைவ வைஷ்ணவ வேதங்களையும் இதற்காக அலசி ஆராய்கிறாா். ஆச்சாியமளிக்கும் விதத்தில், எல்லா மதங்களுமே தங்களுடைய பாணியில் ஒரே விஷயத்தையே போதிப்பதை அறிகிறாா்.

இறுதியில் ஒரு மெய்யான குருவை அடைந்து அவாின் கருணையினால் இறைவனை அறிந்து அநியாய மரணத்திலிருந்து தப்பிக்கலாம் என உணா்கிறாா்.

அதிலிருந்து ஒரு மெய் குருவை தேடுவதை தன் வழக்கமாக்கிக்கொள்கிறாா்.

ஆம்...
அவரே மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்...

குருபெருமான் மெய்வழி சாலை ஆண்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி என்ற குக்கிராமத்தில் கி.பி.1855 ஆம் ஆண்டு சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவா். இயற்பெயர் காதர் பாட்சா. குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல் விவசாயத்தையும் ஆடு மாடு மேய்க்கும் தொழிலையும் மேற்கொண்டாா்.

மேற்கூறிய நிகழ்ச்சிக்குப்பின் குருநாதரை தேடுவதையே தமது ஒரே நோக்கமாக கொண்டவரை,
முகம்மது சாலிஹ் என்ற தணிகைமணிப் பிரான் என்ற பொிய மகான் ஏற்றுக்கொண்டு மாணவராக ஏற்று வழிநடத்தினார்.

திருப்பரங்குன்றம் மலையில் பன்னிரு ஆண்டுகள் ஊண், உறக்கம் தவிர்த்து தவம் செய்து ஞானமடைந்தார்கள்.

குருகட்டளையாக இதேபோல் மக்களுக்கும் ஞானம் அளித்து எமனிடமிருந்து காப்பாற்றுமாறு பணிக்கிறாா் குருநாதர்.

குருவின் கட்டளையை ஏற்று பணியாற்றிய
மெய்வழி சாலை ஆண்டவா்கள் மக்கள் தாங்கள் கடைசியில் உயிா் விடும்போது எமனிடம் இருந்து காப்பாற்றி இறைவன் திருவடி சோ்க்கும் செயலை செய்கிறாா்கள்.

கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும்தமிழில் எளிதாகக் கற்று ஆத்ம ஞானத்தை பெற ஏற்படுத்தப்பட்ட கட்டணம் வசூலிக்காத ஒரு சூபி வழியிலான மெய்க்கல்வி பாேதிக்கும் நிலையத்தை புதுக்கோட்டை அன்னவாசலில் நிறுவினார்கள்.

இங்கு பயில்பவர்கள் ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு அடையாளமாக "ஜீவப்பிரயாணம்" அல்லது "பரிசுத்த யதார்த்த நற்சாவு" அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மெய்வழி ஆண்டவருக்கு பின்னர் அவரது சந்ததியினரால் நிர்வகிக்க படுகிறது அந்த அமைப்பு.
அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்து-முஸ்லிம்-கிறித்துவம் என பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், மெய்வழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, இங்கே வசிக்கின்றனர்.
இன்னமும் பழமை மாறாமல் உள்ளது; இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், மெய்வழிச்சாலையில் மின்சாரம் கிடையாது. ஹரிக்கேன் விளக்குகளைத்தான் பயன்படுத்துகின்றார்கள்; குடிசைகளில்தான் வசிக்கின்றனர்; வீடுகளில் மண்தரைதான்.

தமிழ் மொழியின் சிறப்புணர்ந்து போற்றி, மதித்து தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பெயருக்கு முன்னால் 'சாலை' என்ற அடைமொழியை சேர்த்துக்கொள்கின்றனர்.

மெய்வழி ஆண்டவர்கள் 1976 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். அவரது சமாதி மெய்வழிச் சாலையிலேயே அமைந்துள்ளது. சமாதியின் மீது பொன்னரங்க தேவாலயம் எழுப்பப்பட்டு அது அனைவரும் கூடும், பிரார்த்திக்கும், கொண்டாடும் இடமாக உள்ளது.

அனைத்து சாதி மதத்தினரையும் இணைத்து பிறப்பின் நோக்கம் இறைவன் திருவடி அடைவதே என்பதை வலியுறுத்தி அவர்களை ஆன்மப்பாதையில் வழிநடத்தும் ஒரு சிறந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது மெய்வழிச் சாலை.

🙏
[4/22, 20:11] Dr. Pal Pandian Ayya Tharsarbu: "பண்ணியிடும் பணிபலவே பொன்ஒன்றேயாம்
பாண்டத்தின் பேர்பலவே மண் ஒன்றே யாம்
நண்ணுமறு சமயங்கள் போர்வே றல்லால்
நாதன் ஒருவரே"

என்று அனைத்து சமயங்களும் வணங்குவது அருட் பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவரே என்று ஒரே தேவன் ஆன்ம நேய ஒருமைப்பாடு கொண்டுவந்தவர்..
அவரது திவ்ய சரிதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்..🙏🏻

ஆதியை என்னுள் அமர்ந்த பகவனை
நீதியை எங்கும் நிலைத்த தலைவரை
ஜோதியை மெய்வழிச் சுந்தரர் தூமலர்ப்
பாத முளரிகள் பற்றிநின் றோதுவாம்

🙏🏻
[4/23, 14:55] Dr. Baskar Siddha Tharsarbu: அகத்தோர்க்கு வணக்கம்🙏🏽

அகம் குடும்பத்தாருக்கு அறிதுயில் சீரமைப்பு மற்றும் அடுத்த உயர்நிலை அறிதுயில் பயிற்சி வகுப்பு...

எதிர்வரும் 27.04.2019 சனிக்கிழமை...

ICSA பரிபூர்ணா ஹால், மணப்பாக்கம், சென்னை.
காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை...

இடவசதி, ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதால் அவசியம் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்...

கட்டணம் ரூ.1000...

சரவணன்...9362706564
பாஸ்கர்..9962563028
ஜோசப் ..7904364568

நன்றி🙏🏽
[4/25, 07:35] +91 89034 53916: மிக்க நன்றி ஐயா..
தன்னிலையில் இருக்க பயிற்சி செய்கிறேன்..
பல நேரங்களில் தவறு செய்வதில் இருந்து தப்பிதேன் என்று உணர்ந்தேன்..
பல நேரங்களில் மீண்டும் மனது படர்க்கைக்கு செல்வத்தையும் எண்ணி சிரி த்தும் தன்னிலையை அறிந்தேன்..
வழி நடத்தி நீங்கள் கொண்டு செல்வதில் இருக்க மிக்க மகிழ்ச்சி ஐயா..🙏🙏🙏
[4/29, 09:27] +91 94876 86343: ஐயா வணக்கம்🙏🙏. ஒரு பயிற்சியை தொடர்ந்து  செய்து வரும் போது , சில நேரங்களில் மனம் அவற்றை ஒத்தி வைக்க வே முற்படுகிறது, இதை எவ்வாறு கையாள்வது ஐயா?
[5/2, 21:46] +91 99425 44172: வணக்கம் ஐயா நிலைச்சு வாசம் செய்யும் போது இரண்டு தொடைகளும் வலிக்கிறது எதனால் அய்யா பாதம் எரிகிறது
[5/8, 10:34] Dr. Pal Pandian Ayya Tharsarbu: தன்னை ரசிக்கும் தகைமை இருப்போரிடம்

பிறரையும், இயற்கையையும் ரசிக்கும் குணமும் இருக்கும்

முகத்தில் எப்போதும் புன்னகை  பூத்திருக்கும்

எப்போதும் அன்பாகவும் இனிமையாகவும் இருக்க முடியும்

அன்பும் இனிமையும் இருக்கும் இடத்தில்

மகிச்சியும், ஆனந்தமும், திறமையும் நம்மிடையே கைகோர்த்து உலகை வலம் வர முடியும்

அன்பால்இணைந்து

ஆனந்தத்தில் திளைத்து

பொறுப்பில்  ஆழ்ந்து

அட்டகாசமான வாழ்வை அனுபவித்து வாழ்ந்து வருகிறீர்கள்...

மாற்றம் தேவையில்லை...
இருப்பது வளரட்டும்..
வளர்ந்தது நிலைக்கட்டும்..
நிலைத்ததை பகிருங்கள் சக உயிர்களிடம்...

இதுவே என்றும் வாழ்வியல் பயணமாகட்டும்.....
நன்றி டாக்டர்🙏🏻
[5/13, 15:15] Dr. Joseph Sidda: அரச குலத்தில் பிறந்து தக்க காலத்தில் முடிசூட்டி பாராளும் மன்னனாக இருந்தவர்...

இறையருளின் விருப்பத்தால் மணிமகுடம் துறந்து யோகியானவர்...

திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகளின் சத்குருநாதர்...

மகாபுருஷர் குமாரதேவ பெருமான்...

கர்நாடக மாநிலத்தில் அரசராக இருந்தவர் இறை சித்தத்தால் ஆன்ம நெறிக்கு திரும்பி, யாத்திரையாகவும், குருநாதரை தேடியும் கொங்கு தேசம் வந்தார்...

அங்கு பேரூர் ஆதீனத்தின் சாந்தலிங்க சுவாமிகளின் பாதங்களை சரணடைந்தார்...

முதலில் சீடராக ஏற்க மறுத்த சாந்தலிங்க சுவாமிகள், தாமிட்ட பணிகளை சிரத்தையாக, மன்னராயிருந்த அடையாளம் ஏதுமின்றி முடித்த குமரதேவரின் குணத்தை மெச்சி, தம் ஆஸ்தான சீடனாக ஏற்றுக்கொண்டார்...

குருநாதர் கற்று கொடுத்த யோகமுறைகளை சிறப்பாய் கற்று தேர்ந்த குமாரதேவரை அவருக்கு பிடித்த தலத்தில் ஒரு மடம் நிறுவி பணியை தொடருமாறு குருநாதர் உத்தரவிட்டார்.

அதனை ஏற்று தமக்கான இடம் தேடி தவமியற்றினார் குமாரதேவர். முடிவில் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தை தமது இடமாக தெரிவுசெய்தார்.

விருத்தாசலம் நோக்கிய பயணத்தில் ஏற்பட்ட தாகம் ஈசனால் தணிக்கப்பட்டவர். அன்னை பெரியநாயகியால் பொற்கிண்ணத்தில் பாலூட்டப்பட்டவர் குமாரதேவர். ஒருநாள் மணிமுத்தாநதியின் அக்கரையில், நாச்சியார்பேட்டையில் இருந்த குமாரதேவரின் மகிமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய அன்னை, அன்று இரவு தனக்கு பள்ளியறையில் வைத்திருந்த பொன்கிண்ணத்துப் பாலை அக்கரையிலிருந்த குமாரத்தேவருக்கு கொண்டு வந்து தந்தாள்.
பொழுது விடிந்தது. பள்ளி அறையில் வைத்த பொன்கிண்ணத்தைக் காணாது திடுக்கிட்ட சிவாச்சாரியார்கள் அறங்காவலரிடம் முறையிட்டனர். அப்போது அன்னை அசரீரியாய் ‘‘அந்த கிண்ணத்துப் பாலை அக்கரையில் உள்ள என் மகன் குமாரத்தேவனுக்கு நானே கொடுத்து வந்தேன்’’ என்றாள். அதன்படி அங்கு சென்று பார்க்க அங்கே குமாரத்தேவர் அருகே பொற்கிண்ணம் இருந்தது. உடனே, ஊர் குமாரத்தேவரை தெய்வக் குழந்தை என்று கொண்டாடியது.

பார்வையால் நோய் நீக்கினார். வார்த்தைகளால் அடியவர் வறுமையை விரட்டினார். பெருமான் செய்த அற்புதங்கள் பலப்பல.

ஒருமுறை குமாரதேவர் திருவாரூர் ஈசன் தேரில் வரும் அழகைக் கண்டு தன்னை மறந்து நின்றார். அப்போது குமாரதேவரின் அருமை தெரியாத இருவர், ‘‘வீரசைவ மருளைப் பார்த்தீரா?’’ என்றனர். இதைக் கேட்ட குமாரதேவர், ‘‘வீரசைவம் மருள் என்றால் தேர் செல்லட்டும். அருள் என்றால் நிற்கட்டும்’’ என்று சொல்ல தேர் அசையாது நின்றது. பின்னர் மன்னர் வந்து மன்னிப்பு கேட்ட பின்னரே தேர் நகர்ந்தது.

விருத்தாசலம் வந்து சேர்ந்த குமாரதேவர் அங்கு தமது தவத்தை தொடர்ந்தார். விருத்தாசலத்தில் துரையூர் ஆதீனத்துக்குட்பட்ட குமாரதேவர் மடம் உருவானது.


ஆறு மாதத்துக்கு ஒருமுறை பேரூருக்கு வந்து குருநாதரை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை அப்படி பயணப்படும்போது வழியில் அவினாசியில் உள்ள ரெட்டியாரின் வீட்டில் ஓய்வு எடுக்க நேரிட்டது. அப்போது குழந்தைச் செல்வம் இல்லாத ஏக்கத்தில் ரெட்டியார் தவிப்பதை அறிந்த குமாரதேவர். தன் குருநாதரை வணங்கிவிட்டு திருநீறு வழங்கினார். ரெட்டியாரையும் அவரின் மனைவியையும் உட்கொள்ளச் சொன்னார். மேலும் 'இந்த விபூதியை நெற்றி மற்றும் திருமேனியில் தினமும் பூசிக்கொள்ளுங்கள்' என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் குமாரதேவர். இதையடுத்து சில நாளிலேயே ரெட்டியாரின் மனைவி கருவுற்றார்.

அந்த ரெட்டியார் இல்லத்தில் தான் பிற்காலத்தில் தம் சீடராய் வந்துசேர்ந்த சிதம்பரம் சுவாமிகளை சந்தித்தார் குமாரதேவர். சிதம்பரம் சுவாமிகளின் தமிழ்ப்புலமை கண்டு பாராட்டிய குமாரதேவர் அவரை தம் குருநாதர் சாந்தலிங்கம் சுவாமிகளிடம் அழைத்து சென்றார். அவர் இட்ட 'ஒழிவில் ஒடுக்கம்' போன்ற நூற்களுக்கு உரை எழுதும் பணிகளை மிக சிறப்பாக முடித்தார் சிதம்பரம் சுவாமிகள். மகிழ்வுற்ற குருநாதர் தம் சீடர் குமாரதேவரிடம் 'சிதம்பரம் சுவாமிகளை உனது புத்திரனாக ஏற்று தீட்சை வழங்கி வழிநடத்து' என்று உத்தரவிட்டார். அவ்வாறே செய்தார் குமாரதேவர்.

வள்ளல் பெருமானின் விருப்பத்துக்குரிய 'சுத்த சாதகம்' உட்பட பல உயர்வான நூற்களை இயற்றியுள்ளார் குமாரதேவர். அய்யனின் 'மகாராஜா துறவு' என்னும் ஆன்மீக புதினம் தமிழ் வேதாந்த பாரம்பரிய வழியில் பயணப்படுவோர் மத்தியில் வெகுபிரசித்தமானது. அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகச நிட்டை, சிவதரிசன அகவல் ஆகியவை குமாரதேவரின் பிற நூற்களாம்.

தமது மடத்திலேயே ஜோதிர்லிங்கம் ஒன்றை நிறுவி, இறைதொண்டாற்றி வந்த குமாரதேவர், அதன் அருகிலேயே சமாதி எய்தினார்...

அவர் நிறுவிய திருமுதுகுன்றம் அருள்மிகு குமாரதேவர் மடம் இன்றும் தொடர்ந்து சிறப்பாக இறைதொண்டாற்றி வருகிறது...

வள்ளல் பெருமான் இம்மடத்துக்கு வருகை புரிந்து சிறப்பு செய்துள்ளார்.

'உலகில் எச்சமயங்களும் உரைத்திடுதற்கு ஒரு விரோதங்களும் இன்றி

இலகும் அச்சமயங்களுக்கும் மேலாகி இலங்கிடும் உபநிட நெறியை

அலகில் எம் அண்ணல் அருளிய வகை உன் அகத்திலும் விளக்கி வாக்கினிலும்

குலவிட உரைப்பேம் என்றனள் விருத்தக் குன்றில் வாழ் பெரிய நாயகியே

பெரியநாயகி தன் கருணையால் இங்குப் பிராரத்தமும் ஒழிந்தோர்க்குத்

திரிவதா மாயா வடிவது கரைந்து திருவருளே வடிவாக

அரியவாம் சாமத்து அசி உரைப்படியே அமைத்து இந்த சுத்த சாதகத்தைத்

தெரிவிலா எளியேன் வாக்கில் நின்று திருவுளம் பற்றியது இதுவே'
   -சுத்த சாதகம்

🙏🏽
[5/18, 08:09] Dr. Pal Pandian Ayya Tharsarbu: ஒருவரிடம் உள்ள சுயத்திர்க்கு மதிப்பு கொடுப்பதே ஆன்மீகம்

ஒருவரை சடங்குகளிலும், திணிப்பிலும் ஆளுமை செய்வது மதம்

ஆன்மீகம் சுயத்தின் தன் உணர்வு எந்த வழியில் வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்கிறது...

நான்  ஒரு வகை தியானம் செய்கிறேன் ..
அதையே நீயும் செய்ய வேண்டும் என்று உறவினரையோ சுற்றத்தையோ  ஆளுமை செய்தால் அது மதம்...
எடுத்து சொல்வது வேறு... நிர்ப்பந்திப்பது வேறு...

தன்னில் இருப்பதே வழி என்கிறது ஆன்மீகம்...
என் வழி மட்டுமேசிறந்தது என்பது மதம்.

ஒவ்வொரு தனி மனித மனமும் அதற்கு ஏற்பட்ட தனி மனித உணர்ச்சி அழுத்தம், பார்வைகளால் கட்டப்பட்டுள்ளது...

இதை கருத்தில் கொண்டு அணுகும் மென்மையே ஆத்மீகம்...

அப்படியின்று இதைதான் கும்பிடனும்..இப்படிதான் கும்பிடனும் என்று சர்வாதிகாரமே மதம்...

ஒரு நாத்திகவாதி  தவறானவன் அல்ல ஒரு மதவாதியே தீங்கானவன்.

சுயம் என்பது  தான் தோன்றி தனமான மனப்போக்கு அல்ல...
சுயம் என்பது தன்னில் தானாய் இருக்கும் உணர்நிலை...

தானல்லாத போது ....தோன்றிய உலகு, கும்பிடும் கற்சிலைகளும் இல்லை ...

இந்த தன் உணர்வே ஆதி என்றறிதலே  சித்தர்கள் பகிர்ந்த வாழ்வியல் உண்மை..

தன்னை மட்டுமே முன்னிறுத்தும் அகம்காரத்தை மறக்க ஏற்படுத்தப்பட்ட புற வழிபாடுகள் ...கடந்து செல்லப்படாமல் சிக்குண்ட  நிலையில் இருக்க செய்யும் போதே மதம் துளிர்க்கிறது...

இருப்புணர்வு ஒன்றே - தோன்றியதின் தொகுப்பும்..தோன்றா முழுமையும்  எனும் கண்டுணர்தலே ஆத்மீகம்...

ஆத்மீகம் என்னும் சொல்லே இதயப்பூர்வமான ஈடுபாடு என்பதாகும்

மதம் என்ற சொல்லே மூர்க்கத்தனமான என்று அர்த்தமாகும்...

நேரடியாய் உள்ள சத்தியத்தை சடங்குகள், பூசைகள், மந்திரங்கள் என்னும் சாளரங்கள் வழி பார்க்க குறுக்குவதே மதம்...

ஊடகம் தேவையற்ற யதார்த்தமாம் ஆத்மம் என்னும் இயல் நிலை உண்மை....

அனைத்து வரலாற்று வன்முறைகளின் ஆணி வேர் மதம்...

அனைத்து மனிதத்துவ உணர்வும் சங்கமிக்கும் நிலையே ஆன்ம நேய ஒருமைப்பாடு.

இனிய நாள் ...காலை வணக்கம்...🙏🏻

அனைவருக்கும் பொதுவானது இயற்கை வழிபாடு.... இனிய முழு மதி நாள் இன்று...

சிறப்பாய் அகம் உணர்ந்து மகிழ்வோம்🙏🏻
[5/18, 08:37] Dr. Pal Pandian Ayya Tharsarbu: இன்று...
இனிய புத்த பூர்ணிமா  நல்வாழ்த்துக்கள்.
போற்றப்பட வேண்டிய நாள்...

புத்தர் என்றால் விழிப்புணர்வு பெற்றவர் என்று அர்த்தம்.

விழிப்புணர்வு ஒன்றே இறைவனின் இயக்க தளம்...

ஆடும் அம்பரம்... திருவம்பல தாண்டவம்...
சுதர்சன சக்கரம்...
மகா மேரு...
கந்தனின் வேலாயுதம்
சாயுபின் ருகு....
புனித உயிர்ப்பெழுதல்..
புத்தரின் பிரக்ஞை
சித்தர்களின் வெட்டா சக்கரம்...
அருணாச்சலம். ( அசையா செஞ்சோதி)

அருள் நம் அனைவருக்கும் என்றும் உரித்தாகுக 🙏🏻
[5/20, 12:28] Dr. Joseph Sidda: இறைவனின் காதலர் அவர்...
தீவிரமான, வெறிபிடித்த, போதை ஏறிய காதலர்...
இறைசிந்தனை தவிர வேறேதும் அறியாத பெருமான் .... 
இறை தவிர உலகின் அனைத்தையும் துறந்தார்....மறந்தார்...

மஸ்த் என்கிற பாரசீக சொல்லுக்கு 'போதை' என்று பொருளாம்...
இறைபோதையை விட பெரிய போதை, தீராத போதை உண்டோ...

எனவே இறைவன் மேல் போதையேறிய ஞானிகளுக்கும் மஸ்தான் என்றே பெயரிட்டனர்...

குப்பை மேட்டில் குடியிருப்பு...
பித்து பிடித்த நடையுடைபாவனை...
அவரின் சித்துக்களோ எண்ணிக்கையில் அடங்கா...
சிந்தனைக்கும் விளங்கா...

சுபி ஞானி...
சித்த புருஷர்...
குணங்குடி மஸ்தான் சாயுபு...

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகே குணங்குடி சிற்றூரில் 1788 ஆம் ஆண்டில் இசுலாமியராய் பிறந்தவருக்கு பெற்றோர் 'சுல்தான் அப்துல் காதர்' என்று பெயரிட்டனர்.

இனிய மார்க்கமாம் இசுலாமிய சமய சாத்திரங்களை இளமையிலேயே தெளிவுற கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார் அவர்.

பதினேழாம் வயதில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண ஏற்பாட்டை மறுத்து தந்தையின் ஆசிகளோடு தம் பெருவிருப்பமான ஆன்மப்பதையில் தீவிரமாக ஈடுபட துவங்கினார்.

தம்மை பிடித்திருந்த பற்றுக்களை எல்லாம் இயல்பிலேயே துறந்தவராக  ஞானபூமியாம் கீழக்கரை சென்று அங்கு 'தைக்காசாஹிபு' என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் எனும் ஞானியிடம் மாணாக்கராக பணிந்து சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். அடுத்ததாக அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்னும் பெருமானிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். அதன்பின் பின்னர் அறந்தாங்கி அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி தவம் புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் அன்னாரின் தவம் தடையின்றி தொடர்ந்தது.

ஏழு ஆண்டுகள் இவ்வாறாக நீடித்த ஆன்மபயணம் மஸ்தான் சாயிபுக்கு ஆன்மவிழிப்பை அளிக்க, அவர் வடஇந்தியாவுக்கு சென்று அங்கு பலருக்கு தமது ஞான உபதேசங்களை வழங்க ஆரம்பித்தார். சிலகாலம் வடநாட்டில் இருந்தவிட்டு, சென்னை திரும்பினார். அங்கும் தமது இறைபணியை தொடர்ந்த ஞானியை இசுலாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் ‘சுவாமி’ என்றும் அழைத்து மகிழ்ந்தனர்.      

சென்னையில் இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். அங்கிருந்த நச்சு அரவங்கள் சுமாமியை எவ்வித தொந்தரவும் செய்ததில்லை. எனவே பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது சிலகாலம் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டு.

குணங்குடியாரின் துறவு நிலை குறித்தசந்தேகம் கொண்ட  சிலர் அட்டமாசித்துக்கள் உட்பட, அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி பல இந்துக்களும் அவ்வாறு தீட்சை பெற்றனர். அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபு, மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மஸ்தான் சாயுபுவின் மாணாக்கர்களில் முக்கியமானவர்கள்.

மதங்களிடையே இருந்த வேறுபாடுகளை முற்றிலும் நிராகரித்தவர் மஸ்தான் சாஹிப். மதங்களிடையே வேறுபாடு காட்டுபவர்களுக்கு இறைவன் ஒருபோதும் கருணை செய்யமாட்டான் என்று உரைத்தவர்.

"மதபேத மோதி மதி கேட்டவர்க்கு எட்டாத வான் கருணை வெள்ளம்" என்று இறைவனைப் பாடுகிறார் அவர்.       

குருநாதரின் எல்லையில்லாக்கருனையை அனுபவித்து உருகியவர் என்பது அவரது பாடல்களில் வெளிப்படுகிறது. குருநாதரின் பெருமைகளை குருவணக்கம் பகுதியில் பத்து பாடல்களில் உரைத்துள்ளவர், அவற்றில் குருநாதர் முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்கள் செய்த அற்புதங்களான
கடலில் மூழ்கிய கப்பலைக் கொடிக்கம்பத்துடன் திரும்பி வரச் செய்தது, கம்பத்துடன் ஓடி வந்த ஒரு கப்பலைப் பூனையாகச் செய்தது. கர்ப்பத்தில் இருந்த போது தன்னைக் கொல்லவந்த ஒரு முனியைக் கொல்வதற்காகக் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து அந்த முனியைக் கொன்று இருதுண்டாக்கிவிட்டு மீண்டும் கர்ப்பத்திற்குள் சென்றது, பிள்ளையைப் பிடித்து சந்நியாசி ஒருவன் தின்றுவிட அப்பிள்ளையை அச்சந்தியாசியின் குடலைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்படி செய்தது என அனைத்தையும் உவகையுடன் நினைவு கூர்கிறார்.

ஏராளமான மிக இனிய பாடல்களை கொண்ட பல நூற்களை இயற்றியுள்ளார் மஸ்தான் சாயுபு. முகம்மது நபியைப்பற்றிய அவரது பாடல்கள் மிக பிரசித்தி பெற்றவை. தவிர அவரது நூற்களில் நிராமயக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம் ஆனந்தக் களிப்பு ஆகியவையும் முக்கியமானவை. 24  கீர்த்தனைகள் உட்பட  1057 பாடல்கள் அவரால் இயற்றப்பட்டன.

தாயுமானவர் பாடல்களுக்கும் மஸ்தான் சாயுபு பாடல்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அவரைப்போல இவரும் பராபரக்கண்ணி இயற்றியுள்ளார்..

பணிகளை நிறைவு செய்து மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு  இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று..       

"படைப்புகளை படைக்கும்முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன. அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்தநேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளைப் படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு  பிரியவுமில்லை. எப்போதும் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்”

'அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்"

' நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே... ' (பராபரக்கண்ணி)

'எந்த உயிரும் எமது உயிர் என்று எண்ணிஎண்ணிச் சிந்தை தெளிய அருள்செய்வாய் நிராமயமே ....(நிராமயக்கண்ணி)

.....

"சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு" என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி பதிப்பக நூல் ஒன்று இப்பெரும் ஞானியின் வாழ்க்கையையும் வழிகாட்டுதல்களையும் தாங்கி வெளிவந்துள்ளது...

திருவடி சரணம்...🙏🏽🙇🏼
[5/25, 23:57] Dr. Pal Pandian Ayya Tharsarbu: "ஊரிலான் குணங் குறியிலான் செயலின்      
உரைக்கும்  பேரிலான்
ஒரு முன்னிலான் பின்னிலான்
பிறிதோர்சாரிலான் வரல் போக்கிலான்
மேலிலான் தனக்குநேரிலான்
உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்"

.அறி துயில் இரவு அன்பர்கள் அனைவருக்கும்🙏🏻
[5/27, 18:00] Dr. Joseph Sidda: ஆதிகடைநாதன் என்னும் கடையிற் சுவாமிகள்...

பாரத தேசத்திலிருந்து இலங்கை சென்று ஆன்மீக மணம் பரப்பிய ஞானிகளில் முதலாவதாக சென்றவர் ...

இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணை பகுதியை புண்ணியபூமி என்று அழைக்கிறார்கள். சிறப்புமிக்க தமிழ்க்கோவில்களும் அமைப்புக்களும் கொண்டது அப்பகுதி. அப்பகுதியின் சிறப்புக்கு முக்கிய காரணம் அங்கு வாழ்ந்த யோகிகளும், சித்தர்களுமே. அவர்களில் முதன்மையானவர் கடையிற் சுவாமிகள்.

மற்றொரு சிறப்புமிக்க சித்தரான ஸ்ரீ யோக சுவாமிகள் கடையிற் சுவாமிகளை பற்றி சொல்லும் போது, “புத்தர், கிறிஸ்து, முதலாயினோரிலும் பன்மடங்கு பெரியவர் ஆவர் அவர்" என்று உரைத்திருக்கிறார்..

சுவாமிகள் பிறந்த இடம், நாள், பெற்றோர் தெரியவில்லை எனினும், அவர் மைசூரில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. வள்ளல் பெருமானின் சமகாலத்தவராக சுவாமிகளை கருதலாம்.

சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், வடமொழி நான்கிலும் தேர்ச்சி பெற்று, நீதிபதியாக பணியாற்றியவர். கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டிய சூழலில், அவரது மனதில் ‘சகமனிதருக்கு தூக்கு தண்டனை வழங்க நான் யார்’ என்ற கேள்வி எழுந்து, அக்கேள்வி வலுப்பெற்று அதன் தீவிரத்தால் தமது பதவியை துறந்து ஆன்மப்பாதைக்கு திரும்பினார்.

மைசூர் சிருங்கேரி மடத் தலைவராயிருந்த  ஞானசித்தர் ஸ்ரீ நரசிம்ம பாரதியிடம் ஞான உபதேசம் பெற்று துறவு பூண்டார் கடையிற் சுவாமிகள். அவரது தீட்சை பெயர் சுவாமி முக்தியானந்தா.

சுமாராக 1862 ஆம் ஆண்டில் சுவாமிகள் தம் குருநாதர் ஸ்ரீ நரசிம்ம பாரதியுடன் இராமநாதபுரம் அருகே திக்விஜயம் செய்து கொண்டிருந்தபோது, ஈழத்தில்  தமது முதல் அடியவரான வண்ணார்பண்ணை வைரமுத்து செட்டியாரின் எளிய வேண்டுதலுக்கு இணங்கி, தமது சகோதர சந்நியாசிகள் சுவாமி சின்மயானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர் ஆகியோருடன் யாழ்ப்பாணத்துக்கு வந்தார் சுவாமிகள்.

யாழ்ப்பணத்தில் பொதுவிடமான பெரியகடைச் சதுக்கத்தையே சுவாமிகள் தமது இருப்பிடமாக தெரிவு செய்தார். பெரியகடைச் சதுக்கத்தில் வாழ்ந்ததாலேயே அவர் கடையிற்சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

தமது அடியவர்கள் வீடுகளில் கேட்டு உணவருந்துவது சுவாமிகளின் வழக்கம். தமது அடியவர்களின் மனநிலையை மட்டுமே கருத்தில் கொண்டு, பிற நிலைகளான சாதி, செல்வம் போன்ற வேறுபாடுகளை துளியும் கருதாது அனைவருக்கும் தமது அருட்பார்வையை ஒரேவிதமாக செலுத்தி, கருணை மழை பொழிந்து அவர்தம் இன்னல்களை தீர்த்தார் சுவாமிகள். உடல், மன நோய்களும், வறுமையும் அடியவர்களை விட்டகன்றன. நாட்செல்ல செல்ல அடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஏழை மக்கள் அவரை தமது கடவுளாகவே கருதினர். ஏழைகள் தங்கள் வீடுகளுக்கு வருகை தருமாறு விடுத்த அன்பு அழைப்பை கருணாமூர்த்தி எப்படி நிராகரிப்பார்? அவர்கள் அழைப்புக்கிணங்கி செல்லும் போதெல்லாம் சுவாமிகளுக்கு உணவை படைக்கப்பட்டதென்னவோ அந்த ஏழைகள் வழக்கமாய் உண்ணும் மீனும், இறைச்சியுமே. ஞானிக்கு ஏது விருப்பு வெறுப்பு? அவர் அனைத்தையும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.

சுமார் முப்பது ஆண்டுகள் சுவாமிகள் இவ்வாறு யாழ்ப்பான மக்களுக்கு தமது அருள்மழை பொழிந்தார். அவர் மிச்சம் வைத்த உணவை உண்டவர் நோய் தீர்க்கபெற்றனர்.  தொழில் விருத்தி பெற்றனர். புகழ்பெற்றனர். புயல்மழையில் நடுக்கடலில் தத்தளித்த அடியவரை சுவாமிகள் மீட்டு உயிர்கொடுத்தார்.

இலங்கையின் சித்தர் ஞான பரம்பரைக்கு வித்திட்ட இப்பெரும் மகான் தமது பணியை பூரணமாய் நிறைவு செய்து, ஒரு புரட்டாசி மாதம் பூர, பூரட்டாதி நட்சத்திரம் பொருந்திய வேளையில் வண்ணார்பண்ணை நீராவியடி என்னுமிடத்தில் மகாசமாதி அடைந்தார்.

"ஞாலமதின் ஞான நிட்டை யுடையோருக்கு
    நன்மையொடு தீமையிலை நாடுவதொன்றில்லை
சீலமிலைத் தவமில்லை விரதமோடாச்சிரமச்
    செயலில்லை தியானமிலை சித்தமலமில்லை,
கோலமிலை புலனில்லை கரணமில்லைக்
    குணமில்லைக் குறியில்லை குலமுமில்லை
பாலருடன் உன்மத்தர் பிசாசர் குணமருவிப்
    பாடலினோடாடலிவை பயின்றிடினும் பயில்வர்"
என்னும் பாடலுக்கு முழு இலக்கணமாக திகழ்ந்தார் கடை சுவாமிகள்.

திருவடி சரணம்🙏🏽
[5/27, 18:21] Dr. Pal Pandian Ayya Tharsarbu: ஆதி என்னும் தொடக்கம்
கடை என்னும் இறுதி

இரண்டின் நாயகர்...ஆதி தமிழ் தாந்திரீக மரபின் பெரும்  சிம்மமாய் தமிழகத்திலிருந்து இலங்கை சென்று அன்பர்களின் அருள் வாழ்விற்கு வித்திட்டவர்...

சுவாமிகளின் திவிய சரிதம், மனதின் கர்மம் கழற, சிறப்பாய் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.🙏🏻

திரு ஆதி கடையிர் சுவாமிகளின் திருவடி சரணம்🙏🏻🙏🏻
[5/28, 13:07] +91 96770 68557: ஐயா வணக்கம்.
1. ஒரு சில நாட்கள், அறிதுயில் செய்யும் பொழுது உடல் முழுவதும் ஊறுவது போல் இருக்கிறது.அதை சரி செய்வது எப்படி ?2.ஒப்படைப்பு செய்யும் பொழுது, நிலையாக ஒரு கடவுளிடமும் ஞானியிடமோ நம்பிக்கை ஏற்படுவதில்லை. யாரிடமும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. இதற்குத் தீர்வு தர வேண்டுகிறேன்.
நன்றி.
[5/28, 18:40] Dr. Pal Pandian Ayya Tharsarbu: வணக்கம் சார்

இப்போதைக்கு உங்கள் முதல் கேள்விக்கான பதில்....

நமது நரம்பு தொகுதி இரு பிரிவுகளை கொண்டது...
என்பது உங்களுக்கு தெரியும்.

மத்திய நரம்பு மண்டலம் ( Central nervous)
புற சுற்றியல் நரம்பு மண்டலம்...( Peripheral nervous)

இந்த புற சுற்று நரம்பு மண்டலம் இச்சை மற்றும் தானியங்கி பிரிவு கொண்டது... உணர்ச்சிகளை உள்ளுக்கு எடுத்தும், சமிக்ஞைகளை இயக்கமாய் வெளிப்படுத்தியும் வேலை செய்யும்...

மனிதன் உலகில் தொடர்பு கொள்வது என்பது ...இந்த அகம் ஏற்றல் ( உணர்தல்  sensory) வெளிப்படுத்துதல் ( இயக்குதல் motor) இரண்டின் பிணைப்பின் மூலமே சாத்தியம்.

நமது பாது காப்பு உணர்வின் காரணமாய் இந்த புற சுற்று நரம்பு மண்டலம்  எலும்புகளுக்கு உள்ளே மத்திய நரம்பு  மண்டலம் போல ( central nervous system) இருக்காது. விழித்திரை நரம்பு மற்றும் மண்டையோட்டு நரம்பு என்பனவும் புற நரம்பு மண்டலத்தையே சாரும். மண்டையோட்டு நரம்புகளின் நரம்புத் திரள் (ganglia) மூளையினுள் இருந்தாலும், அவற்றின் நரம்பிலைகள் (axons) மூளைக்கு வெளியாக அமைந்திருப்பதனால், இவை புற நரம்பு மண்டலத்தையே சாரும்.

நமது அறி துயில் என்னும் அசைவற்ற நிலையில்...

இந்த புற நரம்பு மண்டலம் உடன் பட மறுக்கும்போது.  ...அதாவது மனம் தான் தனித்து விடப்பட்ட நிலையை ஏற்று கொள்ளாமல்  பாதுகாப்பு உணர்ச்சி மேலிட்டு இந்த புற நரம்பியல் (, PNS)  மண்டலம்  ஓய்வு கொள்வதை மறந்து செயல்பாட்டில் பொருத்தமற்றது தொழில் புரிவதே   அறிதுயிலின் போது அசைவுகள்...

இந்த அனுபவங்கள்...

தோலில் ஊறுவது போன்று
ஏதோ சத்தம் கேட்டல்,
சிறிய சத்தமும் பெரிதாய் கேட்டல்,
எறும்பு ஊர்வது போல இருத்தல்,
திடீரென உடலில் நமைச்சல்,
கண்களின் விழித்திரை ஓய்வு பெற மறுத்து இமை மூடிய நிலையிலும் ஒன்றை பார்த்து கொண்டிருத்தல்....

உலகின் நிகழ்வுகளில் பங்கேற்காத போதும் அமைதியின்றி இந்த நரம்பு சமிக்ஞைகள் வேலை செய்வதற்கு காரணம்...பாதுகாப்பின்மை உணர்ச்சியே....

கண் மூடி இருக்கிறோம்...வேலை எவ்வளவோ இருக்கிறது என்ற அக பதட்டம்.

நாம் ஓய்வு எடுத்து விட்டால் ( அரை மணி நேரம் தான்) வீட்டின் வேலைகளை யார் செய்வது என்ற அதீத் பொறுப்புணர்ச்சி,

  கடந்த காலத்தில் எதிர்பாராத விதமாய் வாழ்வில் திடீரென்று ஏற்ப்பட்ட  விரும்பத்தகாத, அதிர்ச்சி கொண்ட நிகழ்வுகள்...

எந்த காரணமும் இதன் பின்னணியில் இருக்கலாம்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது...

அறிவின் அடையாளம் பொருந்த வாழ்தல்...

கால தேச, சூழலுக்கு பொருத்தமாய் இருத்தலும், செயல் படுதலும் நம் உடல் மன நலத்தை பொறுத்தது.

இந்த அறிவு மேம்பாட்டிற்கு உதவுவதே அக வாழ்வு.

தியானம், அறிதுயிலின் சாரம் உலகின் தூண்டல் நிறுத்தி தன்னில் நிலை கொள்வது..

அந்த சூழலில் புற நரம்பு இயக்கம் இதை புரிந்து ஓய்வு கொள்ள கால அவகாசம் தேவையாய் இருக்கிறது...காரணம் புறத் தூண்டலே வாழ்க்கை என்றே சமூகம் சொல்லி கொடுத்த படியே வாழ்ந்து விட்டோம் சிறு வயதில் இருந்தே....

அக சார்பு என்பது தூக்கத்தில் விழிப்பின்றி மட்டுமே நடந்து வந்துள்ளது...

விழிப்பு உலகின் நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம்..

.இந்த இரண்டும் முரண்பாடா உள்ள நிலையில்...
அக சார்புக்கு விழிப்புடன் பயணிக்கும் செயல் ...
மிக புதிதாய் மனதிற்கு தெரிய...

அது தனக்கு ஏற்கனவே தெரிந்த பாதையை எடுத்து கொள்ள முயல்கிறது....

ஒன்று தூக்கத்திற்கு விழுதல்...

அல்லது

இரண்டாவது புறத்தில் கவனம் கொள்ளல்...

அதாவது உடலின் நமைச்சல்,
எரிச்சல்,
ஏதோ ஊறுவது போல,
காட்சிகள்,
யாரோ பேசுவது போல இருத்தல்...
  போன்றவற்றை சித்தத்தின் துணையுடன் கடந்த கால பதிவுகளில் இருந்து எடுத்து அவற்றை புறத்தில், வெளியில் ஏற்படுவது போல அனுபவத்தை கொடுத்து விழிப்புணர்வை தொடர்ந்து வைத்து கொள்ள செய்யும் முயற்சி...

ஆனால் அரிதுயில்    தியான நிலையே... இந்த இரண்டையும் இணக்கம் கொள்ள செய்வதே...

தன்னிலை உணர்வு பெறல்...எதையும் சாரா நிலையில் , உண்மையான  அமைதி தன்னிலேயே உள்ளது என்று கலக்கம் ஓய்ந்த நிலை.

அறி துயிலின் போது பாது காப்பு அற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருக்குமானால் இந்த புற தூண்டல்கள் மேலிடலாம்...
அதற்குத்தான் ஒப்படைப்பு என்ற உடன்படும் மன நிலையை வலியுறுத்தினோம்...

ஒப்படைப்பு ஏற்பட்டு உடன் பட்ட நிலையில்...
நான் தனித்து இல்லை..என்னை தாங்கி கொண்டிருக்கும் சத்தியத்துடன் ஒருமித்து இருக்கிறேன் என்ற உணர்வு இந்த தூண்டலகளை தவிர்க்க செய்து பேரமைதியை சுவைக்க வழி செய்யும்...

அறிதுயில் பயிற்சியும் தொடர்ந்தே செய்ய வேண்டும் சார்...  ஊறல் வருகிறதே என்று பயிற்சியை  நிறுத்த கூடாது....
ஒன்றை தொடர்ந்து இடை வெளியின்றி செய்யும்போது மனதின் பழைய  தாக்கத்திலிருந்து நாம் வெளிவருகிறோம்.

சாய் நாதர் அருளினால் இது எளிதாய் அனுபவமாகும்...அவரிடம் ஒப்படைத்து பயில...
தொடருங்கள் ....

🙏🏻நன்றி ... அனுபவ கேள்வியை பகிர்ந்து கொண்டதற்கு...பிறருக்கும் பயனாகும் என்பதால்  விளக்க வேண்டியதாயிற்று...

அருணாச்சல சிவ🙏🏻
28,  May, 2019.
[5/28, 20:21] +91 96770 68557: தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.. நீங்கள் சொல்லும் அறிகுறிகள் பல எனக்கு உள்ளன. நான் நீங்கள் சொல்வது போன்ற வாழ்வியல் சூழ்நிலையில் இருந்து வந்தவன் தான். கட்டாயம் நம் பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்ய முயற்சி செய்வேன். இப்பொழுது
எனது முதல் கேள்வியும் இரண்டாம் கேள்வியும் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறது தயவுசெய்து இதை விளக்க வேண்டுகிறேன்.
[5/29, 15:52] Dr. Pal Pandian Ayya Tharsarbu: வணக்கம்

எதில் நம்மை அடையாளப்படுத்தி உள்ளோமோ ( Identified,)  அதில் நாம் நிறைவாய் உள்ளோம் என்ற மனப்பாங்கு இருக்கும்...

எதில் நாம் பற்றாக்குறை உணர்ச்சியால் தாக்கம் கொள்கிறோமோ அதில் நாம் அடையாளப்படாமல் இருக்கிறோம்....

சச்சின் டெண்டுல்கர் அவர்கள் இங்கிலாந்தில் நமது அணியினருக்காக விளையாடி கொண்டிருந்த போது ..    பருவ சீதோஷ்ன மாறுபாட்டினால1  உடல் வலியும், சுரமும் கொண்டு அவதிப்பட்டார்...அங்கே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்...

அவர் மருத்துவமனை சென்று வருவதை அனைத்து இந்திய தொலைக்காட்சிகளும் காண்பித்தன...
வைத்தியத்திற்கு மருத்துவ நிலையம் செல்பவர் தனது கையில் கிரிக்கெட் மட்டையை ( BAT,) வைத்து கொண்டே சென்றார்..  அது அவருக்கு ஒரு  prop, துணை அங்கம் போல்....

இப்படி இருப்பவர் எப்போதும் நினைக்க மாட்டார் ," நம்மால் நல்ல விளையாட முடியுமா என்று?"....மாறாய் இப்படி தான் களம் இறங்குவார்.. இன்று ஒருநாள் ஆட்டம் ஆடி விட்டு வரலாம் என்று...

ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் இப்படி ஒரு காட்சி...
வில்லன் நம்பியார் நாயகன் MGR ய்  சண்டைக்கு ஆக்ரோஷமாய் கூப்பிடும்போது...
காதலி ஜெயலலிதா தடுக்க, MGR இப்படிதான் கூறுவார் " கொஞ்சம் பொறு, பூங்கொடி, சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று 😊"....

இந்த இடத்தில் சண்டையில் வெற்றி கொள்ள வேண்டும் என்று போகிறவன்...தனது உள்ளத்தில் இல்லாமை எழுச்சியில் இருப்பான்...

விளையாடி விட்டு வருகிறேன் என்பவன் ,  என்னிடம் இருப்பதை வெளிப்படுத்தி விட்டு வருகிறேன் என்பான் ..  இந்த வெளிப்படுத்துதல்  , Manifestation, என்பது... இந்த உடனடி விளைவு கருதாத செயல் நிலை வெளிப்பாட்டில் மட்டுமே  சாத்தியமாகும்...

இல்லாமை உணர்ச்சியில் வருந்துபவன்...தோல்வியை தன்னை நோக்கி கவர்கிறான்...

அடையாளம் என்பது ஒன்றி இருத்தல்...

எதில் நாம் ஒன்றி இருக்கிறோமோ அதுவே நம் அடையாளம் ஆகிவிடும்.. அந்த அடையாளமே அதற்குரிய நிகழ்வுகளை நம் வாழ்வில் கொண்டு வரும்...

உலக கோப்பை தொடங்கு முன்பு கேப்டன் தோனியிடம் பேட்டி கேட்டனர்...
உங்கள் அணி உலக கோப்பையை வெல்லுமா?

அதற்கு தோனி.... யார் அதைப்பற்றி பதட்டமடைந்தது!!
கோப்பை எங்களுக்கு என்பது ஏற்கனவே தெரியும்...நாங்கள் வந்தது அதை வாங்கி காட்ட அல்ல...மாறாக கோப்பை வெல்லும் அணி எப்படி விளையாடும் என்பதை வெளிப்படுத்தி காண்பிப்பதற்காக என்றார்...அந்த முறை கோப்பையை வென்றோம்....

ஒரு நிகழ்ச்சி.....

சைன தேசத்தில் ஒரு குறிப்பிட்ட  சாவ்லின் புத்த மடாலயத்தில்   ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது.

அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது.

பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை விழிப்பூணர்வாய் ஆக்கிக் கொள்கிறார்கள்.

ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது.

ஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன் மீது திரும்பிச் சீறிப் பாய்ந்தன. இந்தச் செயலால் சில கண்ணாடிகளை உடைத்து, காயப்பட்டு, இந்த நாய் மற்ற நாய்களுடன் போராட முடியாமல் விரைவில் ஆற்றலை இழந்து, குருதியில் தோய்ந்து இறந்தது.

ஒரு சில மணி நேரம் கழித்துத் துறவிகள் வந்த போது கண்ணாடிகள் நொறுங்கி, நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து மிரண்டு போயினர். அவர்கள் மண்டபத்தைச் சுத்தம் செய்து பழுதுபார்த்தனர்.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு நாய், ஒரு சிறிய நாய்க்குட்டி, அந்த மண்டபத்திற்குள் நுழைந்து விட்டது. இதற்கு முன்பு வந்த நாயைப் போலவே, இதுவும் அதனைச் சுற்றி ஆயிரம் நாய்க்குட்டிகளைப் பார்த்தது. சந்தோஷம் தாளாமல் நாய்க்குட்டி தனது வாலை ஆட்டியது. ஆயிரம் குட்டிகள் தங்களது வாலை ஆட்டின. ஆயிரம் நண்பர்களைக் கண்டு கொண்டதால் நாய்க்குட்டி குட்டிக்கரணம் அடித்தது. அழகான ஆயிரம் நாய்க்குட்டிகள் அன்பாக அதையே திரும்பச் செய்தன.

ஒவ்வொரு முறையும் இந்த நாய்க்குட்டி எதாவது ஒரு நாய்க்குட்டியை நோக்கி ஓர் அடி நகர்ந்தால், கண்ணாடியில் உள்ள நாய்க்குட்டி இதை நோக்கி இரண்டு அடிகள் நகர்ந்தது. இந்தச் சிறிய நாய்க்குட்டி தனது மென்மையான கண்களால் அன்போடு பார்த்த போது, கண்ணாடியில் இருந்த ஒவ்வொரு நாய்க்குட்டியும் அதே அன்போடு இதைப் பார்த்தது.

நமது உலகம் இந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது அல்ல. நீங்கள் உறுமினால் ஆயிரம் பேர் உங்களை நோக்கித் திரும்பி உறுமுவார்கள். நீங்கள் சிரித்தால் ஆயிரம் பேர் திரும்பிச் சிரிப்பார்கள்.

நாம் ஒவ்வொருவரும் அவரவரது சொந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

அங்குச் சிரிப்பதோ, சிடுசிடுப்பதோ அவரவரது விருப்பமாகும். என்னவாக இருந்தாலும், நமக்குத் திரும்பக் கிடைப்பது மிகப் பெரிய அளவான, 1000 சதவிகிதம் ஆகும்.

நமது மண்டபம் நமது உலகமே ஆகும். இது நமது சொந்தப் பிரதிபலிப்பே ஆகும்.

நன்றி  கேள்விக்கு🙏🏻

29, May, 2029.
[6/3, 17:13] Dr. Pal Pandian Ayya Tharsarbu: இது நம் இடமில்லை என்றால்
இது நமக்கான நேரமில்லை என்றால்
எது செய்தாலும் நாம் வெல்வதற்கில்லை
அதனால் நாம் தாழ்ந்து போவதில்லை
கண்ணாடியில் மலை
கடுகாய்த் தானே தெரிகிறது!
துறவு என்பது ஒரு மனப்பான்மை; மனத்துறவே துறவு என்பதை நெஞ்சில் தைப்பது போல் பாடிய யோகி வேமன்னாவின் அருள் சரிதம் அரிதானது.

இரண்டும் எதிர்மறையான விஷயங்கள்.....  ஆனால் ஒன்றின் உச்சத்தை அடையும்போது பயணிக்கும் நபர் அதன் அடுத்த பக்கத்தை சென்றைந்து விடுகிறார்.   எப்படி சூனியத்தின் ஆரம்பமும் முடிவும் ஒன்றோ அதை போன்ற விஷயம் இங்கும் ஏற்படுவது உண்டு (similar to the belief of infinity is equal to zero). உச்சத்துக்கு செல்லும் பொது எதிர்மறையான விஷயங்கள் இணையும் வாய்ப்புகள் அதிகம் ஆகும் (similar to attraction of north and south poles). உச்சத்தை வேறு  திசையில் தொட்ட அருணகிரி நாதர், வேமன்னா போன்றோர் வாழ்கை சன்மார்க்கம் சென்றதற்கு எடுத்து காட்டாகும்.ஆதலால்  அரிதாய் சில எதிர்மறையான வேற்றுமைகள் நல் வழிக்கும் கொண்டு செல்கிறது.

ஆரம்பமும் முடிவும் அறியாத சமயத்தில் பிரதானமாக உள்ளது நிகழ் காலம். காணும் இன்று என்பது தான் நம் முன்  நிற்பது, இதனை தான் நிதர்சனம் என்கிறோம்.

யோகி வேமன்னாவின் அருள் நிதர்சனம் சிறப்புடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்🙏🏻
[6/5, 18:29] +91 96770 68557: நன்றி ஐயா🙏🏻🙏🏻. நீங்கள் சொல்வது உண்மை, நிறைய செயல்களை பாதியில் விட்டுள்ளேன்.  இனி செயல்களை முழுமையாக செய்து முடிக்க பழகுவேன். இதை முயற்சி செய்துவிட்டு சந்தேகம் இருந்தால் உங்களிடம் கேட்கிறேன். 🙇🏻🙇🏻🙇🏻
[6/6, 02:42] +91 99406 72520: Dear All, The above song 👆by Saint Muthuswamy Dikshithar is supposed to bring rains...🙏prayer for rains...this summer is becoming more and more unbearable...all creatures are suffering....
[6/6, 02:42] +91 99406 72520: ஆனந்தா ம்ருதாகர்ஷிணி அம்ருத வர்ஷிணி ஹராதி பூஜிதே சிவே பவானி

ஸ்ரீ நந்தனாதி ஸம்ரக்ஷிணி ஸ்ரீ குருகுஹ ஜனனி சித்ரூபிணி
ஸானந்த ஹ்ருதய நிலையே ஸதையே ஸத்யஸ் ஸுவ்ருஷ்டி ஹேதவே த்வாம்
ஸந்ததம் சிந்தயே அம்ருதேஷ்வரி ஸலிலம் வர்ஷய வர்ஷய
[6/6, 07:54] Dr. Pal Pandian Ayya Tharsarbu: மிக்க நன்றி சார்....உங்கள் பரிந்துரைக்கு...

தமிழில் மேக ராக குறிஞ்சி பண் உண்டு...அதனுடன் ஓத்துசைந்தாலே மழை வந்து விடும்...

அனுபவத்தில் சாய் ஸத் சரிதம் நூல் வாசித்து வருகிறார்கள் தற்சார்பு அன்பர்கள்...  சாய் நாதர் அருளில் அதற்கு பயன் ஏற்படுகிறது...
அறி துயில் பயிற்சி செய்வதும் இதற்கு வழி முறை...

இப்படி தெரிந்த வழி முறைகள் பல ஏற்கனவே உள்ளன.
ஒரு புரியாத மொழியை தான் படித்து பாடி என்னும் முயற்சியை விட தெரிந்த எளிமையான வழிகளே போதும்...

அது போக இந்த குழுவில் மழை பற்றிய கலந்துரையாடல் வரவில்லை....
இது தற் சார்பு பயிற்சிக்கான குழு மட்டுமே....

நன்றி.
[6/10, 15:17] Dr. Joseph Sidda: இன்றைக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்...

தற்போது காட்டுமன்னார்கோவில் என்றழைக்கப்படும் வீரநாராயணபுரத்தில் எழுந்தருளி இருக்கும் மன்னார் என்ற பெருமாளை வணங்க கன்னட தேசத்தில் இருந்து வந்த சில வைணவ அடியவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் இயற்றிய "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாடினர்.


அதைக் கேட்ட உள்ளம் உருகி மெய் சிலிர்த்து தன்னை இழந்த உள்ளூர் அடியவர் ஒருவர் மனதில் பத்து பாடல்கள் கொண்ட அப்பதிகத்தின் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்ற இருந்த வார்த்தைகள் ஒரு வினாவை எழுப்பின.

அவர் வந்திருந்த அடியவர்களிடம் “பத்து பாடல்கள் மட்டும் பாடினீர்களே... இந்த பிரபந்தம் முழுதும் உங்களுக்கு தெரியுமா? ஆயிரம் பாடல்களில் மீதி பாடல்கள் எங்கே?” என்று வினவ அவர்கள் தெரியாது என்று கூறி சென்றுவிட்டனர்.

ஆனால் வினாவை கேட்டவருக்கோ மீதி உள்ள முழுப்பாடல்களையும் தெரிந்துகொள்ளவேண்டும், திருவாய்மொழி முழுதுமே பாட, கேட்க வேண்டும் என்ற ஆசை எழுந்து, நாட்செல்ல செல்ல அது பேராவலாக மாறி, பின்னர் அது ஒன்றே வாழ்நாளின் ஒரே ஆவல் என்றானது.

அதற்காக அவர் துவங்கிய தேடலும், பயணங்களும் வைணவ இலக்கியத்தின் அத்தனை பெரும்கொடைகளையும் மீட்டெடுத்து இன்றளவும் நமக்கு கிடைக்குமாறு செய்தது.

கேள்வி கேட்டவர் – ஸ்ரீமன் நாதமுனிகள்.
வைணவ ஆசாரியர்களில் முதன்மையானவர்.

ரங்கநாதன் என்ற இயற்பெயருடன் 823 ஆம் ஆண்டு வீரநாராயணபுரத்தில் பிறந்தார். அவரது ஞானப்புதல்வர் ஈஸ்வரமுனி. பெரும் அறிவுமிக்க ஈஸ்வரமுனி மணம்முடித்து வெகுசிறிது காலமே வாழ்ந்து அகாலமரணம் அடைய, மனமுடைந்த நாதமுனிகள் இல்வாழ்வைத் துறந்து துறவறம் பூண்டார்.
அச்சமயத்தில் ஒருநாள் நடந்தது தான் மேலே கூறப்பட்ட கேள்வி எழுந்த ஒரு நிகழ்ச்சி.

மீதி பாடல்களை தேடி நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார் நாதமுனிகள். அங்கு  குருகூர் பராங்குசதாசரிடம் வந்து தமது தேடலை சொன்னார். பராங்குசதாசர் தமக்கு பெரிதாக இதைப்பற்றி தெரியவில்லை எனினும் இவை அனைத்தையும் இயற்றியது நம்மாழ்வாரே என்று உறுதிபடச் சொன்னார்.
நம்மாழ்வாரின் அடியவர் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரின் மாணவரே பராங்குசதாசர். மதுரகவி ஆழ்வார் ஒரு புளியமரத்தடியில் அமர்ந்து தவம் செய்து நம்மாழ்வார் மீது பதினொரு பாடல்கள் பாடி அதன் பலனாக நம்மாழ்வார் அவர்முன் தோன்றினார். அதே புளியமரத்தடியில் தான் நம்மாழ்வாரும் முன்னர் பதினாறு வருடங்கள் தவம் இயற்றினார்.
அதே பதினொரு பாடல்களை பன்னிரண்டாயிரம் முறை பாட நம்மாழ்வார் தரிசனம் தரலாம் என்ற பராங்குசதாசரின் யோசனையை ஏற்று, நாதமுனிகள் தவம் இயற்ற, பன்னிரண்டாயிரம் முறை பாடியபின் நம்மாழ்வார் இறுதியில் தரிசனம் அளித்தார்.

அப்போது திருவாய்மொழியுடன், பன்னிரு ஆழ்வார்களின் படைப்புக்கள் முழுதையும் நம்மாழ்வார் நாதமுனிகளிடம் வழங்கினார் என்று ஒரு கூற்று இருக்கிறது.  அவ்வாறாகவோ, அதன் பின் மற்ற இடங்களிலும் தேடியோ ஆழ்வார்கள் பலர் இயற்றிய ஆயிரக்கணக்கான பாசுரங்கள் நாதமுனிகளுக்கு கிடைக்கக்கருணை கொண்டார் இறைவன். 3776  பாடல்கள் தொகுக்கப்பட்டு நாதமுனிகளின் பெருமுயற்சி ‘நாலாயிரம் திவ்விய பிரபந்தமாக’ உலகத்துக்கு பெரும்கொடையாக கிடைத்தது. அனைத்து வைணவத் தலங்களிலும் இனிமையாய் ஒலிக்கின்றன.

நாதமுனிகள் யோகக்கலையில் மிக உன்னதம் பெற்று விளங்கியதால் யோகேந்திரா என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

நாதமுனிகளின் ஆன்மீக வாரிசாக அவரது பேரன் யமுனாச்சாரியரும் அதன்பின் அவ்வழிவந்த ஸ்ரீ ராமானுஜரும் அதனைத் தொடர்ந்து பல ஆசிரியர்களும் வைணவத்தை மிகுஉயரத்துக்கு எடுத்துச் செல்ல இறைவனின் கருவிகளாக இயங்கினர்.
நாதமுனிகள் திவ்விய பிரபந்தத்தை தொகுத்ததோடு நிற்காமல் தமது மருமக்கள் - மேலை அகத்து ஆழ்வார் மற்றும் கீழை அகத்து ஆழ்வார் – இருவருக்கும் அப்பாடல்களை பிரித்து, பண் மற்றும் தாளத்தோடு பாடும்வகையில் கற்பித்து இனிமைக்கு இனிமை சேர்த்தார். அதனாலேயே அவை காலத்துக்கும் அழியாமல் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நமது செவிக்கும் மனதுக்கும் உயிருக்கும் இனிமை அளித்துக்கொண்டே இருக்கின்றன.
பின்னாட்களில் ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோவிலில் நிர்வாகியாகவும் பணியாற்றிய நாதமுனிகள் நியாய தத்துவம், யோக ரகசியம், புருஷ நிர்ணயம் என்னும் நூற்களையும் இயற்றியுள்ளார். அவர் வைணவ திவ்ய தேசங்கள் பூரி, மதுரா, பிரிந்தாவன் அனைத்துக்கும் விஜயம் செய்துள்ளார்.

நிறைவாய் வாழ்ந்து கடைமைகளை முடித்த ஸ்ரீமன் நாதமுனிகள் 917 ஆம் ஆண்டு இறையுடன் கலந்தார்.

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

திருவடி சரணம்🙏🏽
[6/17, 21:50] +91 98400 16290: *சித்தர்களின் எழுச்சியை* குறிக்கும் விதமாக வரும் *ஜூன் 22&23*(சனி&ஞாயிறு)
*மதுரை தமுக்கம் மைதானத்தில்* உலக சித்தர்கள் ஞானபிடம் நடத்தும் *உலக சித்தர்கள் மாநாடு 2019*

*கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சாதுக்களின் தரிசனம் சாப விமோசனம் இதைக் குறிக்கும் விதமாக 1000 தெற்கும் மேற்பட்ட சாதுக்கள் சிவனடியார்கள் மற்றும் சித்தர் அடியார்கள் இம் மாநாட்டில் பங்கு கொள்கின்றனர்*

*1000008 ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் ஸ்தாபிக்கப்படவுள்ளது*

*உலக நன்மை வேண்டி 108 யாக குண்டம் அமைத்து சித்த முறைப்படி வேள்வி நடைபெற உள்ளது*

*மக்கள் நலன் வேண்டி 1008 மகளிர் பங்கு பெறும் சித்தர் திருவிளக்கு பூஜை*

*வரும் அனைவரின் கண்களுக்கும் நாசிக்கும் இலவச மூலிகை மருந்து வழங்கப்படும்*

*தமிழ் கலாச்சாரத்தை மீண்டும் புனரமைக்கும் விதமாக தமிழ் கிராமபுற கலை நிகழ்ச்சிகளும், சித்தர் ஆய்வு பட்டிமன்றம், மூலிகை கண்காட்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறும்*

*விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் அன்னதானம் வழங்கப்படும்*

*இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்வதே நாம் செய்த மகா வாக்கியம் அப்படி இவ்விழாவில் கலந்து கொள்வதால் வாழ்வில் உள்ள அனைத்து சாப பாவ தோஷங்களிலிருந்து விமோசனம் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன் வாழலாம்*
[6/21, 09:42] Dr. Pal Pandian Ayya Tharsarbu: நலம் ( Wellness) என்றால் ....

இந்த கேள்விக்கு பதில் மருத்துவ விஞ்ஞானத்தால் கூட கூற முடியாது......

ஒளியை பற்றி பேச முடிந்த விஞ்ஞானம் இருளை பற்றி விவரிக்க இயலாமல் தோற்று போனது.

ஆனால் நோய் என்னென்ன

அதன் அறிகுறிகள் என்ன என்று தான் கூற முடியும்

நலம் என்பது

மனிதனில் மறைந்து இருக்கிறது

இன்னும் சொல்லப் போனால்

மறைக்கப்பட மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது சமுதாயத்தால்

நோய் வெளியில் இருந்து வருகிறது

எனவே அதை விவரிக்க முடியும்

நலம் என்பது மனிதனுக்குள் இருப்பது

அதை விவரிக்க முடியாது

நலம்  நாம் உருவாக்க வேண்டியது இல்லை

நலம் நமது இயல்பு

நாம் நலமாய் இருக்கிறோம் என்று நினைத்தாலே போதும்

ஆரோக்கியம் நம்மை ஆராதிக்கும்
நலம் நம்மை தன்னிலை படுத்தும்

ஆனால்

தாம் நலமற்று இருப்பது போல இருந்தால் தான்

தனக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மனம் பழக்கத்தால் சிக்குண்டு இருக்கிறது

தனக்கு இன்ன நோய் இருப்பது பெருமையாவும்

அதை மெத்தப் படித்த மருத்துவர் கொண்ட பெரிய மருத்துவ மனையில் சிகிச்சை பெருவது இன்னும் பெருமையாகவும் நினைப்பதே

இன்றய நாகரீகமாகவும் ஒரு கலாச்சார சூழல் உருவாகிவிட்டது

முதலில் நோய் என்பது நம் எண்ணத்தால் தானே தவிர

உடலால் வருவது என்பது மிக மிக குறைவே

நாம் அனுமதித்தால் அன்றி நோய் ஒருவரை தாக்குவதிலை

நோய் என்பது முழுக்க முழுக்க மனவியல் சார்ந்த ஒன்று

நலம் என்பது ஆற்றல் சார்ந்த ஒன்று

மனதிற்கு முன்பே ஆற்றல் தோன்றியது

ஆக நலம் என்பது இருப்பில் உள்ளது

நோய் இடையில் சேர்ந்தது

இடையில் வந்ததை தூரத் தள்ளி விட்டு

இருப்பில் உள்ளதைக் கொண்டு

இன்புற்று இருப்போம் .

🙏🏻
[6/23, 09:27] Dr. Pal Pandian Ayya Tharsarbu: கந்தக சுடுநீர் ஊற்று ---

மகாராஷ்டிரம் தானே அருகில் கணேஷ்புரி  என்னும் இடத்தில் கந்தக சுடுநீர் ஊற்று உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒன்பது கந்தக சுடுநீர் ஊற்றுகளுள் இதுவுமொன்று.

சுவாமி நித்யானந்த மகராஜ் என்னும் மகான் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆசிரமம் அமைத்து பக்தியைப் பெருக்கி அகம் வழி, பக்தர்களின் ஆன்ம சாந்திக்கு குருவாய் வழி நடத்தி வந்தார்...

இன்றும் அவரது சாநித்யம்  பயன் துய்ப்பாய் அருள்பாலித்து கொண்டு உள்ளது...

முன்னர் நமது குழுவிலும் ஒரு முறை சுவாமிகள் பற்றிய சரிதம்  டாக்டர் ஜோசப் சார் ( திங்கள் கிழமை அருளாளர்கள் பற்றிய குறிப்பில்)  பகிர்ந்து இருந்தார்.

  சுவாமிகளின் கணேஷ்புரி ஆசிரமத்தில் இந்த கந்தக சுடுநீர் ஊற்று உள்ளது.

சிறிய ஊற்று. 63 பாகை செல்சியஸ் முதல் 70 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உடைய இவ்வூற்று தற்பொழுது மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

சுடுநீர் நந்தியின் வாயிலிருந்து வருவதைப்போல அமைக்கப்பட்டு உள்ளது. முதல் தொட்டியில் உள்ள நீரில் கால் வைத்தாலே மிகவும் சுடுகிறது. இரண்டாவது தொட்டி நீர் வெப்பநிலை குறைந்து குளிக்க ஏதுவாக உள்ளது.

கந்தக சுடுநீர் ஊற்று முன் சிவப்பரம்பொருளுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது.

ஆசிரமத்தாரால் நன்கு பராமரிக்கப் படுகிறது.

நன்றி🙏🏻
[7/11, 19:12] Dr. Pal Pandian Ayya Tharsarbu: புரியாத ஒன்று:-

அந்த  மடாலயத்தின் தலைமை குருவாக இருந்தவருக்கு வயோதிகம் வந்துவிட்டது. தனக்குப் பிறகு இந்த மடாலயத்தை நிர்வகிக்க சிறந்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அவரை உந்தித் தள்ளியது. தன்னுடைய சீடர்களில் சிறந்தவர்களாக விளங்கிய மூன்று பேரை அழைத்தார் அந்த குரு.

மூவரும் அவர் அருகில் வந்து நின்றனர். அவர்கள் எவ்வளவு சிறந்த சீடர்கள் என்பது அவர்களின் பணிவிலேயே தெரிந்தது. மூவரையும் உற்று நோக்கிய குரு, ‘எனக்கு வயதாகி விட்டது. நான் ஓய்வுபெற விரும்புகிறேன். நீங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் கற்றுவிட்டீர்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும் தர்க்க அறிவுக்கும், அனுபவ அறிவுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. அதுபோலவே தத்துவமும், யதார்த்தமும் வேறு வேறு.


மனிதனாக பிறந்தவர் இறையுணர்வு பெற வேண்டும் என்பது முக்கியமானது. எனவே நீங்கள் மூவரும் தனித்தனியாக செல்லுங்கள். பல திசைகளிலும் ஓராண்டுக்கு பயணம் செய்யுங்கள். பின்னர் திரும்பி வந்து உங்களுக்கு ஏற்பட்ட மெய்ஞான அனுபவங்களைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்’ என்றார்.

குருவின் கட்டளைப்படி மூவரும் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பிட்ட ஓரிடத்தில் இருந்து அவர்கள் மூவரும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கினர். அந்த பயணத்தில் அவர்கள் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தனர். அவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. அவர்கள் மூவரையும் பலவிதமான சம்பவங்கள் எதிர்கொண்டன.

அவர்கள் மூன்று பேரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்கு ஓராண்டுக்கு மேலாகவே ஆகிவிட்டது. பயணம் முடிந்து மூன்று பேரும் ஒன்றாகவே குருவைப் பார்க்கச் சென்றனர்.

ஒருவர் தன்னுடைய பயணத்தில் கிடைத்த இறை அனுபவத்தைச் சொன்னான். ‘குருவே! நான் இறைவனைக் கண்டுவிட்டேன். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும் இறையானது பரவியிருக்கிறது’.

அவனைத் தொடர்ந்து இரண்டாவது ஒரு சீடர் பேசினான். ‘குருவே! இறைவனுக்கு உருவம் இருக்கிறது. அவன் ஒளி வடிவமானவன். மனக் கண்ணால் மட்டுமே இறைவனைக் காண முடியும். மனம் உருகிப் பிரார்த்தித்தால், அவர் பலவிதங்களில் ஓடி வந்து உதவுவார்’ என்றான்.

கடைசியில் ஒரு சீடன் தலைகவிழ்ந்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வருத்தம் இழைந்தோடியது. அவனை நோக்கி ‘என்னவாயிற்று?’ என்பது போல் பார்த்தார் குரு.

உடனே அந்த சீடன், ‘குருவே! எனக்குள் இதுவரை குழப்பமே எஞ்சியிருக்கிறது. எதுவும் புரியவில்லை. திட்டவட்டமாக இதுதான் இறைவன் என்று எண்ணால் ஊகிக்கவோ அல்லது முடிவு செய்யவோ இயலவில்லை. அதற்கு என் அறிவு போதவில்லை என்று நினைக்கிறேன்.... உணர்ந்த இந்த ஒன்றை ஏற்று கொள்ளவே விரும்புகிறேன்’ என்றான் பனிவாய்..

அவனது வார்த்தையைக் கேட்ட மற்ற இரண்டு சீடர்களும் கேலியாக பார்த்தனர்.

ஆனால் குருவின் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது. ‘உண்மை.. நீ சொன்னது தான் உண்மை. அறிவுக்கோ, விவாதங்களுக்கோ எட்டாதது இறை ஞானம். தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக ஏமாற்றி கொள்ளாதே என்பதுதான் எளிமை.  கண்ணின்றி ஒன்றை காண தெரியவில்லை...மனமின்றி ஒன்றுடன் உறவாட தெரியவில்லை மனிதருக்கு...

நீ அதில் உறவாட கற்றுவிட்டாய்.

புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்று உறவாடி கொண்டு இருப்பதே பணிவு.,  நித்ய தியானம்,, தொடர் உருக்கம்....

எனக்குப் பின் இந்த மடாலயத்தை நீயே நிர்வகித்து வா’ என்று இதயம் திறந்தார்....

"
   கடவுள் நீ தேடும் அளவிற்கு அவர் தொலையவும் இல்லை  

நீ தேடி அலைந்து அவரை அடையும் அளவிற்கு அவர் தூரமுமில்லை        

நீ புறத்தில் கண்டு உணரும் அளவிற்கு அவர் அன்னியருமில்லை

உனக்குள் ஒன்றாக ஒன்றி இணைந்து இருக்கும்
ஓர் அற்புத சக்தி...

கருணை தழுவலாய் உன் உள்ளொளியை
இயக்கி கொண்டிருக்கும் சுயம்... "

🙏🏻அருணாச்சல சிவ.
[7/17, 00:21] Dr. Pal Pandian Ayya Tharsarbu: வணக்கம்

சுமார் 149 வருடங்களுக்கு முன்பு  இதே போல  குரு பூர்ணிமா நன்னாளும் சந்திர கிரகணமும் இருந்துள்ளது....அன்று வள்ளல் பிரான், சாய் நாதர் தூல இயக்கத்தில் இருந்த சிறப்பு நிலை...

இன்று மீண்டும் அதே சிறப்பு நாள்...
அனைத்து ஞானிகள், மகரிஷிகள், சித்த குருமார்களின் ஆசிகளை எல்லா உயிர்களும் பெற்று மண்ணில் நன்மை வித்துகள் தளிர்த்து விருட்சமாய் வளர்ந்து அருள் கனிகள் பெருகட்டும்....🙏🏻
அதற்கு வேண்டுவோம்....

வாத்துக்கள் பகிர்ந்த அன்பர்களுக்கு நன்றி🙏🏻

உவகையும் , பிரியமும் கொண்டு திருவருணை வந்த அக அன்பினர்க்கு  உளமார்ந்த நன்றிகள்....

அருணை சாய் நாதா🙏🏻திருவடி போற்றி.
[7/22, 23:01] +91 99425 44172: ஐயா வணக்கம் நான் வேர் கண்ணு தூண்டல் பயிற்சி செய்யும்போது சில நாட்களில் இடுப்பிற்கு மேல் சிறிது வலிப்பது போல் தோன்றுகிறது நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை இதற்கு ஏதாவது ஒரு வழியை சொல்லுங்கள் ஐயா
[7/22, 23:04] Dr. Pal Pandian Ayya Tharsarbu: வணக்கம்    சார்...
வயிற்றை இறுக்கமாய் வைத்து வேர் கனல் பயின்றால்...இது நிகழும்...

சுவாசத்தை மெதுவாய் தளர வெளிவிட்டு இடுப்பினை மெதுவாய் அசைய அனுமதியுங்கள்...மிக குறைந்த அளவு அசைவு போதும்...
நன்றி🙏🏻
[8/2, 19:00] Dr. Pal Pandian Ayya Tharsarbu: பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு
காலையில் சென்று தூரத்தில் உள்ள ஒரு மலையை பார்த்து
கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு
பெரிய பொக்கிஷம் உள்ளது, என்று ஒருவன் கேள்விப்பட்டான்.

உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான்.
மணலின் மீது அவனது நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.
பொக்கிஷத்தை பெற அவன் மணலை தோண்ட ஆரம்பித்தான்.

அவன் தோண்ட தோண்ட சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது.
அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது,அவன் தோண்டி
கொண்டே இருந்தான்.நண்பகலில் அவன் நிழல் அவன்
காலடிக்குள் நுழைந்து கொண்டது.

நிழலே இல்லை.
அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவனது செயல்
கண்டு சிரித்தார்.அவன் அவரை பார்த்தான்.அவர் கூறினார்:

இப்போதுதான் உன் நிழல் பொக்கிஷம்
இருக்கும் சரியான இடத்தை காண்பிக்கிறது.
அது உனக்குள்ளே இருக்கிறது என்றார்.
[8/12, 15:06] Dr. Joseph Sidda: ஹஸ்ரத் தாவூத் ஷா என்ற அந்த அலுவாலியா அரேபியாவில் இருந்து சுமார் 625 ஆண்டுகளுக்கு முன்னர்  இந்தியா வந்தார். வேணாடு கிராமம் வந்து சேர்ந்த அவர், அதுவே இவ்வுலகில் தமது நோக்கம் நிறைவேற ஏற்ற இடம் என்பதை அறிந்து அங்கேயே தங்கினார்.

அங்குள்ள மக்களுடன் ஒன்றாகி உறவாடியவர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். தமது சக்தியால் நோய்களை நீக்கியும் அற்புதங்கள் நிகழ்த்தியும் அம்மக்களுக்கும் தம்மை நாடிவந்த அனைவருக்கும் அன்பான துணையாய் நின்றார்.

தம்மோடு அவர் அழைத்து வந்த அவரது தங்கை வாகிதாவும் அண்ணனோடு சேர்ந்து மக்களுக்கு உதவியாய் இருந்தார்.

குறித்தகாலம் பணிகளை செய்தபின்னர்,
இந்த உலகில் தமது கடமைகள் நிறைவுற்றதை அறிந்த அந்த அவதூதர், உடலை உதற எண்ணி, ஒரு குழி தோண்டி அதில் தாம் படுத்துக்கொண்டார். எப்போதுமே குழந்தைகளை நேசிக்கும், குழந்தைகள் நேசிக்கும் அவர், அன்று தம்மோடு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அந்த குழியை தாம் படுத்த பின்பு மூடிவிடுமாறும், அதற்கு பரிசாக அவர்கள் தமது மண் பானையிலிருந்த பேரீச்சம் பழங்களையும், பொட்டுக்கடலையையும் எடுத்துக்கொள்ளுமாறும் சொன்னார்.

குழந்தைகளும் அந்த குழியை மூடிவிட்டு, பரிசை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். வீட்டில் இருந்தவர்களிடம் விபரம் சொல்ல, அவர்கள் பதறிப்போய், தங்களோடு இவ்வளவு நாள் அன்பாய் இருந்த மகானை தேடி விரைந்தனர். அந்த குழியை தோண்டி அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் ஒருபக்கம் தோண்ட தோண்ட மறுபக்கம் அந்த சமாதி நீண்டு கொண்டே சென்றது. அவ்வாறு 144 அடிகள் நீண்டது. மக்கள் இறை சித்தத்தையும், அதன் முன்னர் தங்கள் இயலாமையையும் உணர்ந்தவர்களாக, தங்கள் முயற்சியை கைவிட்டனர். சமாதியை தங்கள் வழிபடும் தலமாக ஏற்றுக்கொண்டனர்.

இன்றும் அந்த சமாதி ஆந்திராவில் ஸ்ரீ ஹரிகோட்டா அருகில் உள்ள வேணாடு கிராமத்தில் உள்ளது.

மண்ணால் ஆன சமாதி பல சமயங்களில் கடலில் இருந்து வீசும் பெரும்காற்றினால் சற்று சிதைந்தாலும், அடுத்த நாள் யாருடைய முயற்சியும் இன்றி தன்னைத்தானே சீர்செய்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.

சமாதியின் இன்னொரு விசேஷம் ஒவ்வொரு அமாவசை அன்றும் நள்ளிரவுக்கு மேல், சமாதி மனிதர்களை போல மூச்சு விடும். அதைக்காண பல்லாயிரம் மக்கள் அமாவாசை தினங்களில் வேணாடு கிராமத்துக்கு வந்து பெருமானின் ஆசிகளை பெற்று திரும்புகின்றனர்.

வேண்டும் மக்களுக்கு உதவி செய்வதையே வாழ்வின் நோக்கமாக கொண்ட மகான், இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து தரிசனம் செய்யும் மக்களின் வேண்டுதல்களை இன்றும் நிறைவேற்றி வருகிறார்.

திருவடி சரணம்🙏🏼
[8/16, 23:06] +91 73738 87398: ஐயா அறிதுயில் காலையில் விழித்தவுடன் தொடர்ந்து செய்து வருகிறேன். தூக்கநேரம் குறைந்துள்ளது. ஆனால் அறிதுயிலில் முதல் இருபது நிமிடங்கள் மனம் அலைபாய்ந்து, பின் ஒடுங்கிய நிலையில் ஒரு வித அதிர்வு ஏற்படுவது போல் உள்ளது இது பிரமையா           அல்லது சரியானதா தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி ஐயா.
[8/16, 23:37] Dr. Pal Pandian Ayya Tharsarbu: வணக்கம்

இது பிரமை அல்ல....

தளர்வு என்பது இறுக்கம் நீங்கி ஒரு வெற்றிடம் உருவாகும் அனுபவம்...

அறி துயிலின் நிறைவில் ஏற்படும் ஒப்படைப்பின் போது அளப்பரிய அருள் ஆற்றல் நம்மை ஆட்கொண்டு எழுச்சி பெறும்....

இதன் தொடக்க நிலையே இந்த அதிர்வு அனுபவம்...

இது ஏற்படும்போது மனம் தோன்றி இதை பற்றி எடை போடாமல், கணிக்காமல், மேலும் உடன் பட்டு ஒருங்கிணைய   ஆழ்நிலை அருள் அனுபவம் விழிப்புக்கு  எட்டும்....

நன்றி...தொடருங்கள் அக வழியில்...
திருவடி சரணம்🙏🏻
[8/18, 23:07] Dr. Pal Pandian Ayya Tharsarbu: பகவான் ரமணரின் வாழ்வில் -

அன்னை சாந்தம்மாள்
=======================
சாந்தம்மாள் அறையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை வர்ணித்தார்.

"ஒருமுறை யாரோ ஒரு ஐரோப்பியர் ஆஸ்ரமத்திற்கு குதிரை வண்டியில் வந்திறங்கினார். நேரே அறைக்குள் சென்றார். ஒரு துண்டுச் சீட்டில் தான் எழுதியதை பகவானிடம் கொடுத்தார். பகவான் அதைப் படித்துவிட்டு அவரைப் பார்த்தார். உடனே அந்த மனிதர் கண்களை மூடிக்கொண்டு அமைதியானர். சிறிது நேரத்தில் பகவானும் கண்களை மூடிக்கொண்டு இருவரும் சேர்ந்தே அமைதியாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த சிலரும் அந்த அமைதியில் மூழ்கினார்கள். பதினோறு மணிக்கு மதிய உணக்கான மணி அடிக்கப்பட்டது. ஆனால் பகவானும் அந்த ஐரோப்பியரும் நகரவேயில்லை. பன்னிரெண்டு மணிக்கு இருவரும் கண்களைத் திறந்தார்கள். அந்த ஐரோப்பியர் ஆனந்தமாக வெளியே சென்றார்"

பகவான் ஒருமுறை சொன்னார்.

"எந்தப் பாத்திரத்தை எடுத்துண்டு சமுத்திரத்துக்குப் போறோமோ அவ்ளோதான் தண்ணி எடுத்துண்டு வரமுடியும். சின்ன கிண்ணமா இருந்தா அவ்ளோதான் தண்ணி கொண்டு வரலாம். வாளியாயிருந்தா ஒரு வாளி தண்ணி கிடைக்கும். போ.... போயி அந்த சமுத்திரத்தைக் கொள்ளையடி"

இந்த ஐரோப்பியர் சமுத்திரத்தைக் கொள்ளையடிக்க வந்திருந்தார். பகவானின் அருளை வாங்கிக்கொண்ட அந்த ஐரோப்பியர் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்த மனிதர் என்று சாந்தம்மாள் என்னிடம் சொன்னார்.

         *****************************

ஒரு  துறவியைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் சாந்தம்மாள் பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை வயதான வடக்கிந்திய துறவி ஒருவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து சில வாரங்கள் தங்கினார். கடைசி நாளன்று பகவான் முன் வந்து நின்றார்.

"பகவான்! ரமணாஸ்ரமத்தின் எல்லாமும் எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. நான் இப்போது கிளம்ப சித்தமாயிருக்கிறேன். என்னுடைய இதயத்தின் ஆசையை நிறைவேற்றுங்கள்"

பகவான் இதுவரையும் இதற்கு அப்புறமும் செய்யாத ஒன்றைச் செய்தார். எழுந்திருந்தார். அந்தத் துறவியருகில் நடந்து சென்றார். அவரைத் தொட்டார்.அந்தத் துறவி கண்ணீர் மல்க பகவானின் திருவடிகளில் விழும் வரை  இருவரும் இதே போல் கொஞ்ச நேரம் நின்றார்கள். முகத்தில் நிறைவான ஒரு சிரிப்புடன் அந்தத் துறவி எழுந்தார். பகவான் பார்த்துக்கொண்டிருக்க வெளியே சென்றார்.

          *****************************

மைசூர் மஹாராஜா பற்றிய ஒரு செய்தி வேறெந்த புத்தகத்திலும் இல்லாததை சாந்தம்மாள் பகிர்ந்திருந்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒவ்வொரு தனிப்பட்ட ராஜா, ராணி, அரண்மனை, இராணுவம் என்று நிர்வகிக்கப்படும் முன்னூறுக்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்தன. இவைகளில் ஹைதராபாத்தும் மைசூரும் மிகப்பெரியவை. மைசூர் மஹாராஜா பண்டிதர். கலைகள் மற்றும் கலாசார போஷகர். ஒரு நாள் இரவு வெகு நேரம் கழித்து பகவானிடம் வந்தவர் மறுநாள் அதிகாலை வரை தங்கியிருந்தார். பகவானை தனியாகப் பார்க்க விரும்பினார். ஆனால் அதற்குமுன் பகவான் யாரையும் அதுபோலப் பார்க்க அனுமதித்ததில்லை. அறையில் எப்போதும் பக்தர்கள் இருப்பார்கள். மலை மீது ஏறும் போதும் பக்தர்கள் இருப்பார்கள்.

ஆகையால் அவர் குளித்த எட்டிக்கு எட்டடி இருக்கும் குளியலறையில் மஹாராஜாவைப் பார்க்க அனுமதியளித்தார். பகவானின் திருவடியில் விழுந்து மஹாராஜா கதறினார். ராஜாவின் கண்ணீர் தனது பாதங்களை நனைத்தது என்று பகவானே சொன்னதாக சாந்தம்மாள் எழுதுகிறார். மஹாராஜா பின்னர் எழுந்திருந்து சொன்னார்.

"பகவான், அவர்கள் என்னை ராஜாவாக்கி அரியணையில் அமரவைத்துவிட்டார்கள். இந்தக் காரணதினால்தான் என்னால் இங்கே வந்து உங்களோடு தங்கி உங்கள் முன்னால் இருக்க முடியவில்லை. என்னுடைய வாழ்நாளில் இந்த சில மணித்துளிகள்தான் பொக்கிஷம் போன்றது. இதற்குப்பின்னால் என்னால் வர முடியாது. என்னை ஆசீர்வதியுங்கள்"

சாந்தம்மாள் மஹாராஜவைப் பற்றி பகவானிடம் கேட்டபோது பகவான் சொன்ன ஒரே வரி.

"அவர் ஒரு பழுத்த பழம்"

            *******************************

ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை தீபத்திருநாள் பத்து நாள்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். அருணாசலேஸ்வரர் நகரெங்கும் வீதிகளில் ஊர்வலமாக வருவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அற்புத தரிசனத்தைக் காண கூடுவார்கள். இந்த பக்தர்களில் பெரும்பாலும் பிச்சைக்காரர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் போன்றோர் ரமணாஸ்ரமத்திற்கு சாப்பிட வருவார்கள். எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட வருஷத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. சாப்பாடு போடுவதை நிறுத்திவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவெடுத்த ராத்திரி சாந்தம்மாள் ஒரு சொப்பனம் கண்டார்.

பகவானுடன் அறையில் சாந்தம்மாளும் அமர்ந்திருக்கிறார். ஏதோ ஒரு பூச்சி அவரருகே பறக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பூச்சி பெரிதாக ஆரம்பித்து கடைசியில் இறக்கைகள் உடைய ஒரு பெரிய சிகப்புக் குதிரையாக உருமாறிவிடுகிறது. அது முதலில் பகவானை பிரதக்ஷிணம் செய்தது, பின்னர் ஆஸ்ரமம் முழுக்க வலம் வந்தது, கடைசியாக மீண்டும் பகவானிடம் வந்து பின்னர் மறைந்துவிட்டது. அடுத்த நாள் காலையில் இந்த கனவின் பலனை அறிவதற்காக மிகவும் ஆர்வத்துடன் பகவானை அனுகினார் சாந்தம்மாள்.

"கார்த்திகைத் திருநாளின் போது தேவர்களும் கடவுளர்களும் சாதுக்களாவும் பிச்சைக்காரர்களாகவும் திருவண்ணாமலைக்கு வருவா. அவாளுக்கு சாப்பாடு போறது நம்மளோட பாக்கியம்" என்றார் பகவான்.

அடுத்த நாள் காலையில் இதை சின்ன ஸ்வாமியிடம் சாந்தம்மாள் சொல்ல அவர் உடனே கூட்டம் வரும் அடுத்த பத்து நாள்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் சாதுக்களுக்கும் ஆஸ்ரமத்தில் உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பகவான் முன்னிலையில் பிரகாசமான சில வெளிச்சங்களை சாந்தம்மாள் காண்பார்.

"முதலில் நான் பகவானிடம் வந்த போது சூரியனைப் போன்ற பிரகாசமான வெளிச்சத்துக்கு நடுவில் பகவான் இருப்பதைப் பார்த்தேன். பின்னர் இந்த வெளிச்சம் எனது இரு புருவங்களுக்கு மத்தியில் தெரியும். ஒருமுறை பகவானின் சிரசிலிருந்து பெரும் விளக்கொன்று எரிந்து அறை முழுவதையும் பிரகாசத்தால் நிரப்பியது. அந்த வெளிச்சத்தில் பகவானுடன் சேர்த்து எல்லாம் மறைந்துவிட்டது. ஆனால் அங்கே "நான்" என்ற ஒளிரும் ஒன்று மட்டும் மிதந்துகொண்டிருந்தது. இதை பகவானிடம் நான் தொடர்புபடுத்திச் சொன்னபோது அவரும் இப்படி சில திருஷ்டாந்தங்கள் ஏற்படும் என்று ஆமோதித்தார்." என்று சாந்தம்மாள் சொல்கிறார்.

"ஒருவர் தான் எப்படியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியைப் பார்க்கணும். ஆனாலும் அதில் தெரியும் பிம்பம்தான் தான் என்று கொள்ளவேண்டாம். புலன்களாலும் மனதினாலும் என்னவெல்லாம் அறியப்படுகிறதோ அவையெல்லாம் உண்மையில்லை. பார்க்கப்படுபவை எல்லாமே மனது உருவாக்குபவைதான் அதை உண்மையென்று நம்ப ஆரம்பித்தால் ஆன்மிக வளர்ச்சி நின்றுவிடும். யாருக்கு இவை தெரிகின்றது என்பதை ஆராய வேண்டும். யார் இதைப் பார்க்கிறார் என்று கண்டுபிடிக்கவேண்டும். எல்லா நினைவுகளையும் விட்டு அந்தப் பரிபூர்ண உணர்தல் நிலையில் அசையாமல் இருக்கவேண்டும்"

           *******************************

ஒருமுறை வடக்கே ஒரு கோடியில் இருந்து ஒருவர் ஆஸ்ரமத்திற்கு வந்து சில வாரங்கள் தங்கினார். கிளம்பும் நாளன்று பகவான் முன்னால் வந்து நின்றார்.

"பகவான், நான் செல்கிறேன். திரும்பவும் எப்போது வருவேன் என்று தெரியாது. உங்களோடேயே நித்யமும் இருந்து பலனடைபவர்களைக் காட்டிலும் நான் துரதிர்ஷ்டசாலி. நீங்களாக என்னை நினைக்காமல் வெகு தூரத்தில் இருக்கும் இந்த பாவிக்கு நீங்கள் எப்படி உதவிசெய்வீர்கள்? உங்களது மனதில் எனக்கொரு இடம் அளிக்க வேண்டுகிறேன்" என்றார்.

"ஞானிக்கு மனசுன்னு ஒண்ணு கிடையாது. மனசுங்கிற ஒண்ணே இல்லாதவன் எப்படி ஞாபகம் வச்சுண்டு உன்னை நினைப்பான்? இந்த பிரார்த்தனையெல்லாம் நான் எப்படி நினைவுல வச்சுப்பேன்? உன்னோட பிரார்த்தனைகளை நான் இந்த பிரபஞ்சத்தோட கடவுளுக்கு அனுப்பறேன். அவர் உன்னைப் பார்த்துப்பார். இது அவரோடு லோகம்" என்று அந்தப் பக்தருக்குச் சொல்லி வழியனுப்பிய பின்னர் பகவான் எங்களிடம் திரும்பிச் சொன்னார்.

"ஞானியிடம் சூழ்ந்து இருக்கிற பக்தர்களுக்கு ஸ்பெஷல் கவனிப்புக் கிடைக்கும்ணு மனுஷாள்ளாம் நினைக்கிறா. குரு பாரபட்சமா நடந்துண்டா அவர் எப்படி ஞானியா இருக்கமுடியும்? மனுஷாளோட உபசாரத்திலேயும் கவனிப்புலேயும் குளிர்ந்து போறத்துக்கு அவரென்ன அவ்ளோ முட்டாளா? தூரமா இருக்கறது பிரச்சனையா? தன்னோட அகங்காரத்தை விட்டுட்டு முழுசுமா அர்ப்பணிச்சுக்கறவாள்ட்டே குரு திருப்தியடையறார். அப்படிப்பட்ட மனுஷன் எங்கேயிருந்தாலும் குருவால பாதுகாக்கப்படறான். அவன் தொழ வேண்டாம். அவன் கேட்காமலேயே கடவுள் அவனைப் பார்த்துக்கிறார்"

இதற்கு பின்னர் பகவான் தண்ணீரில் இருக்கும் தாமரைத் தண்டில் வாழும் தவளை பற்றிய உதாரணம் சொன்னார். தவளை அந்த தாமரையின் அருகாமையில் இருந்தாலும் தேனீக்குதான் தேன் கிடைக்கிறது. தூரத்திலிருந்து பறந்து வந்து தேனைக் குடித்துவிட்டு திரும்பவும் பறந்துவிடுகின்றன். அவைகள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவை.

          ****************************

சாந்தம்மாளின் நேர்த்தியான பதிவுகள் இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தேடுபவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

அருமையான சமையல்காரராக இருந்த சாந்தம்மாள் நல்ல திடகாத்திரமானவர். ஒரு நாள் பெரிய பானை ஒன்றில் சாம்பார் கொதித்துக்கொண்டிருந்தது. பகவான் திடீரென்று சமையலறைக்குள் நுழைந்தார். மூன்று ஆள்கள் தூக்கும்படியான பெரிய பானை அது. சாம்பார் ரொம்பவும் கொதித்துவிட்டதால் நெருப்பிலிருந்து அதை எடுத்துக் கொட்டும்படி சொல்லிவிட்டு பகவான் சென்றுவிட்டார். யாரும் அருகில் இல்லையென்றாலும் சாந்தம்மாள் தனியொரு ஆளாக அதை இறக்கி வைத்துவிட்டார். இதைச் செய்து முடித்தவுடன் அதிசயப்பட்டுப்போனார்.

"இது பகவான் செய்த அற்புதம். சாதரணமா ஒரு தனி பொம்பளையால அந்தப் பானையைத் தொடக்கூட முடியாது. பகவான் சொன்னதால என்னால அந்தப் பானையை இறக்கிவைக்க முடிஞ்சுது" இப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை அவர் பகவான் மீது வைத்திருந்தார்.

       **********************************"

பலாக்கொத்தில் வசித்த சாதுக்களுக்கு சாந்தம்மாள் அன்போடு பல உதவிகள் செய்திருக்கிறார். அவர்கள் தங்களது உணவை தாமே சமைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு முடியாத பொருள்களான ஊறுகாய் போன்றவைகளும் ஆஸ்ரமத்தில் சில நாள்கள் செய்யப்பட்ட இனிப்புகளையும் அவர்களுக்குப் பகிர்வார். இவையெல்லாமே பகவானுக்குத் தெரிந்துதான் செய்தார். ஒருமுறை ஆஸ்ரமத்தில் அவியல் செய்தார்கள். முருகனார் பலாக்கொத்தில் வசித்தார். பகவான் சாந்தம்மாளைக் கூப்பிட்டு..

"முருகனாருக்கு அவியில்னா ரொம்பவும் பிடிக்கும். அவருக்கு யார் அவியல் தருவா?" என்று கேட்டார். சாந்தம்மாள் உடனே முருகனாருக்காக அவியல் எடுப்பதற்கு சமையலறைக்கு ஓடினார். அவியலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு பலாக்கொத்திற்குச் என்றால் முருகனார் தனது உணவை பிச்சையெடுப்பதற்கு நகரத்திற்குச் சென்றிருந்தார். வீதியில் ஓடிச்சென்று முருகனாரைப் பிடித்து பகவான் அவருக்காக அவியல் கொடுத்ததாகச் சொனார். முருகனார் பகவானின் பெரும் கருணையை எண்ணி கதறி அழுதார்.

        ************************************

வயோதிகம் வந்தவுடன் ஆஸ்ரமத்திற்காக தேக உழைப்பை தன்னால் தரமுடியாது என்று சாந்தம்மாள் உணர்ந்தார். ஆஸ்ரமத்திற்கு சுமையாக இல்லாமல் கிளம்பிவிட உத்தேசித்தார். அன்றிரவு பகவான் அவரது சொப்பனத்தில் வந்தார்.

"நீ எங்கே போவே சாந்தம்மா? உனக்கப்புறம் யார் என்னைப் பார்த்துப்பா?" என்றார்.

மறைமுகமாக பகவான் தான் அவரைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். தனது இறுதி நாள்கள் வரை சாந்தம்மாள் நிம்மதியாக ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார்.

தனது முழுவாழ்வை தான் நேசித்த குரு நாதருக்கே அர்ப்பணித்து பிரதிபலன் கருதாது வாழ்ந்த அன்னை சாந்தம்மாவின் அருள் உள்ளம் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்

அருணாச்சல குரு ரமணாய🙏🏻

-------------------------------------------------------
[8/19, 18:44] Dr. Joseph Sidda: அவரது பெயர் வள்ளிமலை சுவாமிகள். அவருக்கு ‘திருப்புகழ் சுவாமிகள்’ என்றொரு பெயரும் உண்டு. அதனின்றே திருப்புகழைப் பாடியதும் பரப்பியதுமே அவரது வாழ்வில் அவருக்கு இறை இட்ட பணி என்பது புரியும்.

ஈரோடு மாவட்டம் பவானியில் 1870 நவம்பர் 25 ஆம் நாள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அருளால் பிறந்தவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அர்த்தநாரி. கல்விச்சாலைக்கு செல்ல வீட்டில் வசதியில்லை, இளம்வயதிலேயே திருமணம், உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் மைசூர் அரண்மனையில் சமையல் வேலை, என்றவாறு அவரது வாழ்க்கை மிகவசதியாக இல்லாவிட்டால் கூட, சராசரி வசதிகளுடன் சென்று கொண்டிருந்தது.

திடீரென துயரங்கள் அரங்கேறின. மனைவியும், மகள்களும் நோயினால் மரணமடைய, இருந்த ஒரு மகனும் தூரதேசம் போய்விட்டான். அர்த்தநாரிக்கும் எம்மருந்தினாலும் தீராத வயிற்றுவலி.

அனைதுகதவுகளும் மூடப்பட, அவருக்காக திறந்த கதவுகள் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணியின் கோவிற்கதவுகள். அங்கு சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தவருக்கு வழியில் ஒரு பெண்மணி பாடிக்கொண்டிருந்த திருப்புகழ் உள்ளத்தில் பதியுமாறு முருகப்பெருமான் லீலை செய்தார்.

சிறிது நாளில் வயிற்றுநோய் அவரை விட்டகன்றது. ஆனால் திருப்புகழ் அவர் நெஞ்சைவிட்டு நீங்கவே இல்லை.

தமிழ் கற்றார். திருப்புகழின் பொருள் கற்றார். முருகப்பெருமான் மீது தீராத காதலுற்றார். முருகன் அபிஷேகத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர்கொண்டு வருவார்.

அவ்வாறு ஒருமுறை வந்தார் திருவண்ணாமலைக்கு. ஸ்ரீ பகவான் தரிசனம் பெற்றார். இடுப்பில் கோவணத்துடனும், கையில் கோலுடனும் நின்ற பகவான் அர்த்தநாரியை உற்றுநோக்க, அர்த்தநாரி அங்கு தரிசித்ததோ பழனி தண்டாயுதபாணியை. மெய் சிலிர்த்தார். அளவிடவியலா ஆற்றல் தன் உடம்பில் பாய்வதை உணர்ந்தார். பேரானந்தத்தில் கண்ணீர் வழிந்து அவர் உடலை நனைத்தது. சிறிது காலம் ஆசிரமத்தில் அவர் தங்க அவர்களிருவரிடையே ஓர் ஆழமான உறவு உருவானது.

தமிழகம் மட்டுமின்றி இமயம், காஷ்மீர். நேபாளம், பண்டரிபுரம் என பல தலங்களுக்கு யாத்திரை சென்றார் அர்த்தநாரி. இமயத்தில் ஓர் மகான் அவருக்கு தீட்சை அளித்து, சச்சிதானந்த சுவாமிகள் என்ற பெயரும் தந்தார். எனினும் தாம் இன்னும் முழு ஆன்ம விழிப்பு அடையவில்லை என அவர் உணர்ந்தார். உணர்ந்தபோது மீண்டும் அவருக்கு பகவான் நினைவு வந்தது. மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து பகவானுடன் தங்கினார். சில நாட்கள் கழித்து புறப்பட்டவரை பகவான் ‘செல், தொடர்ந்து தேடு, உனது தேடல் நிறைவடையும்’ என்று வாழ்த்தி அவரை  அனுப்பிவைத்தார்.

செல்லும் வழியில் சேஷாத்ரி சுவாமிகளை தரிசித்தார் சச்சிதானந்தர். சேஷாத்ரி சுவாமிகள் அவரைக் கண்டதும், ‘திருப்புகழ் தானே உனது தாரக மந்திரம்?’ என விசாரிக்க, சச்சிதானந்தர் ஆச்சரியப்பட்டார். தொடர்ந்த சேஷாத்ரி சுவாமிகள், ‘உலகில் அனைத்து வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள இறைநிலை பற்றிய பேருண்மைகள் திருப்புகழில் எளிய வார்த்தைகளில் உள்ளன. அதனியே உனது வேதமாகக் கொண்டு, வள்ளிமலைக்கு சென்று  சாதனை செய். நானே உன்னை அங்கு வந்து சந்திக்கிறேன்’ என்று அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்.

பெருமகிழ்வுடன் வள்ளிமலை சென்றார் சச்ச்தானந்தர். திருப்புகழை இன்னும் ஊன்றிக்கற்றார். அதற்கு இசைவடிவமும் தந்தார். சாதிமத பேதம் கடந்து தம்மிடம் வந்த அனைவருக்கும் திருப்புகழ் கற்பித்தார். அவரது ஞானத்தால் கல்லாதோரும், பார்வையற்றோரும் திருப்புகழில் தேர்ச்சி பெற்று ஞானமடைந்தனர். திருப்புகழ் மீதான ஆர்வம் சமூகத்தில் அவரால் மேலும் மேலும் அதிகரிக்க ஒரேசமயத்தில் 150 மாணவர்கள் அவரிடம் திருப்புகழ் கற்றனர்.

‘திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை’ என அவர் திருப்புகழ் பாராயணத்தை ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆன்ம வழியாக்கினார். அதே தலைப்பில் ஒருநூலும் இயற்றினார். மெய்க்காவல், அனுஷ்டான திருப்புகழ், மார்கழி பாராயண திருமுறை என்ற பிறநூற்களும் அவரது படைப்பே.

புத்தாண்டு அன்று திருத்தணியில் ‘படி விழா’ என்ற பெயரில் அங்குள்ள 365 படிகளையுள் படிக்கொரு திருப்புகழ் பாடல் பாடி ஏறும் வண்ணம் செய்தார். அவ்விழா முருகப்பெருமானின் பிற கோவில்களுக்கும் பரவியது.
அவரது பணிகளால் மனநிறைவு அடைந்த சேஷாத்ரிசுவாமிகள் சச்சிதானந்தருக்கு ஞானம் மற்றும் சித்திகளை அளித்தார். இதன்மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் சித்தியையும் அடைந்தார் சுவாமிகள்.

தம்மை நாடி துயரங்களுடன் வந்தோருக்கு ஆறுதல் மொழி அளித்தார். உலகியல் பிரச்சனைகளில் வழிகாட்ட வேண்டிவந்தோருக்கும், ஆன்ம முன்னேற்றம் தேடி வந்தோருக்கும் வழிகாட்டினார். ‘உன் கர்வத்தை விட்டுவிடு. கடமைகளை ஒருபோதும் விட்டுவிடாதே’ என்பது சுவாமிகள் நமக்கு வழங்கிய முக்கியமான பாடம்.

திடீரென ஒருநாள் சேஷாத்ரி சுவாமிகளிடமிருந்து திருவண்ணாமலைக்கு வருமாறு அழைப்பு வர குருநாதரை சந்திக்க புறப்பட்டவர் 1929  ஜனவரி 4 அன்று சேஷாத்ரி சுவாமிகள் சமாதி அடையும் வரை உடனிருந்தார். மீண்டும் வள்ளிமலை வந்தவர் பெரும்பாலும் தவத்திலும் மௌனத்திலும் கழித்தார். அடியவர்கள் பெருக ஆசிரமம் வளர ஆரம்பித்தது.

முருகப்பெருமானை அடைய வள்ளி பயன்படுத்திய மார்க்கமான பக்தி, சேவை, சன்மார்க்கம் ஆகிய குணங்கள் கொண்ட ‘வள்ளி சன்மார்க்கம்’ என்னும் மார்க்கமே ஆன்ம விடுதலை அடையும் வழி என்பது சுவாமிகள் உலகுக்கு அளித்த முறை ஆகும். 

1950 நவம்பர் 22 ஆம் நாள், தாம் சென்னை கந்த கோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த கந்த சஷ்டி விழா முடிந்த சில நாட்களில் சுவாமிகள் முருகப்பெருமானை நினைத்தவாறு உடலை நீத்தார். வள்ளிமலையில் அவர் ஏற்கனவே நிர்ணயித்திருந்த இடத்தில் சுவாமிகள் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி கோவில் எழுப்பப்பட்டது.

திருவடி  சரணம்🙏🏽
[8/20, 23:14] Dr. Pal Pandian Ayya Tharsarbu: கி.பி 1671, சரியாக 348வருடங்களுக்கு முன்பு...

அதிகாலையிலேயே எண்ணற்ற பக்தர்கள் துங்கபத்ராவில் குளியல்.

மனதில் ஒரு விதமான துக்கம் பரவி இருந்தது அனைவரிடத்திலும். திவான் வெங்கண்ணா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார் பதட்டமாய்.

மூலராமர் பூஜைக்காக வந்த மலர்களில் நறுமணங்கள் கமழந்தது. காலை நேரத்து சிலு சிலுவென்ற சில்லென்ற காற்று மாஞ்சாலம் முழுவதும் அப்பியது.

ஆம் இதோ. ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இன்னும் சிறிது நேரத்தில் பிருந்தாவனத்தில் அமர போகிறார்.

இதோடு இந்த மகானை எப்போது காணப் போகிறோம் என கலக்கம் அனைவரின் விழிகளிலும்..

அனைவருக்கும் முன்பாகவே குரு ராயர் துங்கையில் குளித்து மூலராமர் பூஜைக்கு தயாரானார்.

அவருக்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார் யோகிந்திர தீர்த்தர். நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன.

ஸ்ரீ ராகவேந்திரர் அனைவரையும் ஆசிர்வதித்தார். பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாடினார்.

" உங்களையெல்லாம் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, உங்கள் கவலைகளை நான் மீட்பேன், நீங்கள் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், இந்த உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும், நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?, நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன். உண்மையான பக்தியோடு என்னை காண வரும் பக்தனுக்கு அவனுடைய கவலையை போக்குவேன், மாஞ்சாலம் வர முடியா விட்டாலும் இருந்த இடத்தில் தூய உள்ளத்தோடு வணங்கினால் கூட போதும் , இப்போது மூலராமர் பூஜை ஆரம்பமாக போகிறது. அனைவரும் அமைதியாக அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்" என பூஜையை ஆரம்பித்தார்.

பூஜைக்காக மூலராமர், விஜயராமர், ஜயராமர், சந்தான கோபாலர் போன்ற விக்கிரங்களை வரிசையாக வைத்தனர் சிஷ்யர்கள்.

வீணையை வாசித்து கொண்டே கிருஷ்ணரை பற்றிய பாடலை உருக்கமாக கண்ணீர் மல்க பாடினார். பக்தர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

திடீரென்று ஒரு பரவசம்.

ஆம் ......

ஸ்ரீ ராகவேந்திரர் பாடலை கேட்டு சந்தான கோபால விக்கிரகம் நாட்டியம் ஆடியது.

பக்தர்களும் ஓம் ஸ்ரீ ராகவேந்திரா... ஓம் ஸ்ரீ ராகவேந்திரா என விண்ணை மீண்டும் அளவிற்கு குரலெழுப்பினர்.

பூஜைகள் முடிந்த பின்னர் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க , வேத மந்திரங்கள் கணீரெண்று ஒலிக்க குரு பிருந்தாவனம் அருகில் சென்றார்.

கூடியிருந்த அனைவருக்கும் தீர்த்தமும், மங்கள அட்சதையும் வழங்கினார்.

பிரம்ம தண்டம், துளசி மாலையும் ஒரு கையில் மறு கையில் கமண்டலம். ஓம் நமோ நாராயணா என்று சொல்லியபடி பிருந்தா வனத்தை நோக்கி நடக்கலானார்.

சிரித்த முகத்தோடு மக்களை பார்த்த படியே தெய்வீக முகத்துடனே பிருந்தாவனத்தில் பிரவேசித்தார்.

யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார். பிரம்ம தண்டத்தை தோளில் சாய்த்தார். கமண்டலத்தை கீழே வைத்து துளசி மாலையை வலது கரத்தில் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

அனைவரின் கண்களும் துளசி மாலையையே பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று நிமிடத்தில் துளசி மாலை கீழே விழுந்தது.

அனைவரும் குரு ராகவேந்திரா....குரு ராகவேந்திரா என கரகோஷம் எழுப்பினர்.

அப்படி குரு பிருந்தாவனத்தில் அமர்ந்த நாள்தான் இன்று. அவர் அமர்ந்து 348 வருடங்கள் முடிந்து 349 வருடம் துவங்குகிறது.

இன்று ராகவேந்திரரை உளமார உணர்ந்து அறிதுயில் ஆழுங்கள்.... வாழ்வில் வசந்தம் வீசும்.

அறி துயில் இரவு அன்பர்கள் அனைவருக்கும்🙏🏻
[8/26, 16:36] Dr. Joseph Sidda: பகவான் ரமணரின் ஆசியாலும், தனது தவத்தாலும்  உலகெங்கும் எல்லாவற்றையும் ஸ்ரீ ராமராகக் கண்ட பரவசத்தில் அவர் தன்னைக்கடந்து சென்ற மனிதனை நோக்கி ஓடி அவனை இறுகக்கட்டிக்கொண்டார். அதிர்ச்சியடைந்து அவரை விட்டு ஓடத்துவங்கிய அந்த மனிதனை திரும்பவும் வலுக்கட்டாயமாக தன் குகைக்கு அழைந்து வந்து உபசரித்தார் அவர். அப்போது அந்த மனிதன் அவரை உற்று நோக்கினான். அவருக்கு பற்கள் இல்லை. நல்லவேளை. தான் பயந்தது போல இவர் தன்னை கடித்து தின்றுவிட மாட்டார் என அம்மனிதன் நிம்மதி அடைந்தான்...

***********
1884 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கேரளாவில் கஹன்காட்டில் பிறந்தார் விட்டல் ராவ். இளம்வயதில் நெசவுப்பணி. இருபது வயதில் திருமணம். குடும்பத்தில் நிரந்தர பிரச்னை. பொருளாதாரம் எப்போதும் பின்னடைவு. ஆறுதலுக்காக எதாவது பிடி கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். பகவான் ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ராமதீர்த்தர் ஆகியோரின் சொற்கள் அவருக்குள் தேவையான நன்மாற்றங்களை ஏற்படுத்த துவங்கின. பக்தி மற்றும் சரணாகதி என்னும் பாதை அவரை முழுமையாகத் தழுவிக்கொண்டது.

‘உலகியல் சார்ந்த முயற்சிகள் அனைத்தும் வீண். உண்மையனான, நிரந்தரமான ஆனந்தத்தை மனிதன் அடைவது சாத்தியமே, அதுவே அவனது ஒரே தேவை’ என விட்டல் ராவ் முடிவாக உணர்ந்தார். அவர் தம் தந்தையார் வழியாக கிடைத்த ‘ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்’ என்னும் மகாமந்திரத்தை உறுதியாகப்பற்றிக்கொண்டார். இல்லை இல்லை... அந்த மந்திரம் அவரைப் பற்றிக்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

மெல்ல மெல்ல உலகியல் பிடிப்புகளிலிருந்து விடுபட்டார். முப்பத்தெட்டாம் வயதில் வீட்டை அகன்றார். இங்குதான் செல்வதென்ற திட்டமேதுமில்லை. நிரந்தரமாய் உதட்டிலும் இதயத்திலும் ஒலித்த அந்த மந்திரம். நிகழ்வன எல்லாம் ஸ்ரீ ராமன் திருவுளம் என்ற நம்பிக்கை. இரண்டும் அவரை வழிநடத்தின.

ஸ்ரீரங்கத்தை அடைந்தார். காவிரியில் முழுகி எழுந்தார். காவியுடுத்தார். ராமரின் சேவகனாக மாறினார். ஆம்... ராமதாஸ் என்ற பெயர்மாற்றம். சந்நியாசம் ஏற்றார். சாதுக்களுடன் தொடர்ந்த பயணத்தில் சில நாட்களிலேயே திருவண்ணமலையில் பகவான் ரமண மகரிஷியை அடைந்து பணிந்தார் ராமதாஸ்.

தம் திருவிழிகளால் நோக்கினார் பகவான். சில நிமிடங்கள் அந்தப்பார்வை ராமதாஸ் மேல் நிலைத்துநின்றது. அவரை ஊடுருவி உட்கலந்த அந்த பார்வை ராமதாசிடம் விவரிக்கவொண்ணா பரவசத்தை ஏற்படுத்தியது. காற்றில் துளிர் இலை போல அவர் உடல் நடுநடுங்கியது.

பகவானை வணங்கி அகன்றார். அடுத்த இருபத்தொரு நாட்கள் திருவருணையின் குகை ஒன்றில் வாசம். கணமும் இடைவெளியில்லா தீவிர ராமநாமம். குகையை விட்டு வெளியே அவர் வருகையில் உலகமே மாறிப்போனது. இல்லை. உலகை அவர் பார்க்கும்விதமே மாறிப்போனது. எங்கெங்கு காணினும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தவிர வேறேதும் இல்லை அவருக்கு. எறும்பும் பசுவும், மரமும் மலையும், மனிதரும் மாக்களும் ...ஸ்ரீ ராமர் என்னும் ஒற்றைத் தன்மையில் உயிர்ப்புநிறைந்து அதிர்வாய் இயக்கமாய் நின்றாடின. ஆனந்தக் கூத்தாடினார். மரத்தைக்கட்டிக்கொண்டார். கடந்துசென்ற மனிதனைக்கட்டிக்கொண்டார். எல்லாம் ஸ்ரீ ராமரே. ஓர்மை. ஏகம். இதற்குத்தானே இத்தனை தவிப்பு. இந்தப்பிறப்பு.

திருவண்ணாமலையில் ஏற்பட்ட அந்த அனுபவத்துக்குப்பின் எட்டாண்டுகள் இந்தியா முழுதும் யாத்திரை செய்தார். மங்களூர் அருகே பஞ்சபாண்டவர் குகையில் தமது முதல் நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றார் ராமதாஸ். அவரது முயற்சிகள் மெல்ல மெல்ல அவரை நிரந்தர இறையானுபவத்துக்குள் அழைத்து சென்றன.

அன்பர்கள் கூட்டம் பெருகியது. வழி தெரியாமல் நின்றவர்கள் சுவாமி ராமதாசிடம் ஆன்ம முன்னேற்றத்துக்கான மிக எளிய வழியைப் பெற்றனர். உலகில் நிலவும் அனைத்து துயரங்களுக்கும் ராமநாமமே தீர்வு என்னும் தெளிவு பெற்றனர். தந்தை எனப்பொருள்படும் ‘பப்பா’ என்று அன்பர்களால் அன்புடன் அழைப்பட்டார் அவர். ஓரிடத்தில் நிரந்தரமாய் தங்க அன்பர்கள் வேண்டியதை தொடர்ந்து காசர்கோட்டில் அமைக்கப்பட்ட ஆசிரமத்தில் தங்கினார் ராமதாஸ். எனினும் 1931 ல் கஹன்காடில் அமைக்கப்பட்ட ஆனந்தாஷ்ரமே அவரது நிரந்தர இடமாயிற்று.

‘இறைநாமம் உலகனைத்தையும் வெல்லும் சக்தியை தன்னுள்ளே கொண்டது. இருளில் ஒளியும், வெறுப்பில் அன்பும் விளைய வைக்கும் அது. நாமமே இறைவன். மக்களுக்கு ராமநாமத்தின் வல்லமை தெரியவில்லை. ஆன்ம அனுபவத்தின் உச்சிக்கு செல்ல ராமநாமம் ஒன்றே போதும்’ என்பதே அவரது செய்தி.

மாதாஜி கிருஷ்ணாபாய், யோகி ராம் சுரத் குமார், சுவாமி சச்சிதானந்தா போன்றோர் சுவாமி ராமதாசின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்.

அன்னைக்கும் குழந்தைக்குமான உறவு போல, அன்பு எஜமானனுக்கும் சேவகனுக்குமான உறவு போல இறைவனுடன் உறவில் நிரந்தரமாய் திளைத்த சுவாமி ராமதாஸ் ஏராளமான இந்திய, அயல்நாட்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து தம் கடமைகளை முடித்து 1963 ஆம் ஆண்டு தமது ஆசிரமத்தில் மகாசமாதி அடைந்தார்.

ஆசிரமம் அருகேயுள்ள மக்களின் உலகியல் முன்னேற்றத்துக்கும், உலகெங்கும் உள்ள மக்களின்  ஆன்ம முன்னேற்றத்துக்கும் இன்றும் தீவிர செயலாற்றிவருகிறது.

திருவடி சரணம்🙏🏽
[9/2, 22:23] Dr. Joseph Sidda: சத்குரு ஸ்ரீ பாவுசாஹேப் மகராஜ் ...

ஸ்ரீ நிசர்கதத்த மகராஜ் பின்பற்றிய இஞ்சாகிரி சம்பிரதாயத்தின் நிறுவனர்.

1843 ஆம் ஆண்டில் ராமநவமி நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் உம்தி கிராமத்தில் பிறந்தார்.

இளம்வயது முதல் தினம்தவறாது ஆஞ்சநேயரை வழிபடும் பக்தராக விளங்கினார் மகராஜ்.

அவரது அடியவர்கள் அவரை ஸ்ரீ துகாராம் மகராஜ்ஜின் அவதாரமாக கருதுகின்றனர். தமது பதினான்காம் வயதில் தம் குருநாதர் நிம்பர்கி மகராஜ்ஜை சந்தித்தார். குருநாதர் மாணவருக்கு இறைநாமத்தை மந்திர தீட்சையாக அருள அப்போது துவங்கியது மகராஜ்ஜின் தீவிர சாதனை.  ஒவ்வொரு நாளும் அவரது சாதனையின் நேரமும் தீவிரமும் ஆழமும் அதிகரித்து ஆன்ம ஞானம் அளித்த பேரின்பத்தில் தம் மாணவர் திளைப்பது கண்டு தானுவகை கொண்டார் குருதேவர்.

தாம் உலகவாழ்வை விடும் போது, பாவுசாஹேப் மகராஜ்க்கு தமது பூரண ஆசிகளையும் சம்பிரதாயத்தை தொடர ஆணையையும் அனுமதியையும் விட்டுச்சென்றார் நிம்பர்கி மகராஜ்.

குருநாதர் நிம்பர்கி மகராஜ்ஜிடம் அவர் காட்டிய பேரன்மும், மதிப்புமே அவரது வாழ்வில் அவர் செய்த ஒரே சாதனை என்பதில் மகராஜ் பெருமிதம் கொள்வார். அவரது குருபக்தி இந்த பிரபஞ்சத்தின் அளவுக்கு பெரிது. குருதேவர் நிம்பர்கி மகராஜ்ஜையும், மாணவர் பாவுசாஹேப் மகராஜ்ஜையும் தங்கள் சம்பிரதாயத்தின் ஞானதேவர் மற்றும் துகாராம் என்று அடியவர்கள் கருதினர்.

குருநாதர் சமாதி அடைந்தபின்னர் பாவுசாஹேப் மகராஜ் இஞ்சாகேரி என்னும் இடத்தில் தமது ஆசிரமத்தை அமைத்து புதியதோர் பாரம்பரியத்தை குருவருளுடன் தொடங்கினார்.

ஞானமடைவதற்கான ஸ்ரீ மகராஜ்ஜின் வழிமுறையானது ‘நாம யோகம்’ என்று அழைக்கபடுகிறது. அதன் இன்னொரு பெயர் ‘எறும்பின் வழி’ என்பதாம். குருநாதரிடம் இருந்து அருளப்படும் மந்திரத்தையோ அல்லது குருநாதர் பரிந்துரைக்கும் இறைவனின் திருநாமத்தையோ தொடர்ந்து நம்பிக்கையுடன் ஓதி பயிற்சி செய்து வரும் ஒருவன் இறைவனுடன் இரண்டறக் கலந்து உலக வாழ்விலும் ஆன்மவாழ்விலும் பெருமகிழ்ச்சி எய்துவான் என்பதே அந்த மார்க்கம் ஆகும்.

பாவுசாஹேப் மகாராஜ்ஜின் திருமொழிகள் தொகுக்கப்பட்டு ‘நாம யோகம்’ என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. எனினும் மகாராஜ் அதற்கு இட்ட பெயர் ‘ஞான மார்க்கம்’ என்பதே ஆகும்.

ஸ்ரீ அம்புராவ் மகராஜ், ஸ்ரீ குருதேவ் ரானடே, ஸ்ரீ கிரிமல்லேஷ்வர் மகராஜ், ஸ்ரீ சித்தேஷ்வர் மகராஜ்  ஆகியோர் மகராஜ்ஜின் முக்கிய சீடர்கள் ஆவர்.

பூரண ஞானத்தில் எக்கணமும் திளைத்து, மாணவர்கள் மற்றும் அடியவர்களையும் வழிநடத்திய மகராஜ் 1914 ஆம் ஆண்டு தமது ஆசிரமத்தில் சமாதி நிலை அடைந்தார்.

’சீவன் ஒவ்வொன்றும் சிவனிடமிருந்தே வந்து மீண்டும் சிவனை அடைவதே நோக்கம். எனினும் இவ்வுலக வாழ்க்கைப்பயணத்தில் புலன்களின் ஆதிக்கத்தில் தனது மூலத்தை மறந்துவிடும் சீவன் உலகியல் வாழ்வில் மட்டுமே நோக்கம் எனக்கருதுகிறது. உடல் விழிப்புணர்வு இறையுணர்வாக மாற்றமடைய வேண்டும். அதுவே ஆன்ம விழிப்பு. இறைவனின் திருநாமத்தை கணமும் மறவாதிருப்பதே சீவனின் ஒரே கடமை’.

திருவடி சரணம்🙇🏼
[9/9, 22:17] Dr. Joseph Sidda: ‘கடவுள் மசூதியில் இருந்தால், மசூதிக்கு வெளியில் உள்ள உலகம் யாருக்கு சொந்தமானது?

இராமன் கோவில் சிலையில் இருந்தால், யாத்திரை சென்று நீ காண்பது யாரை?

ஹரி கிழக்கில் இருக்கட்டும்...

அல்லா மேற்கில் இருக்கட்டும்...

உன்னுள் தேடு நீ...

கரீம், இராமன் இருவரையும் அங்கு காண்பாய்’

****************

இதயத்தை வருடும், சிலிர்க்கவைக்கும், பரவசமூட்டும் கவிதைகளின் ஆசிரியர் அவர் ...

இரண்டே வரிகளில் நம்மை அவரது உலகுக்கு முழுமையாக அழைத்துச் செல்லும் திறன் பெற்ற புனிதர் ...

கடந்து செல்லும் மனிதனின் சொற்கள் போல எளிய வார்த்தைகள் கொண்ட, ஆனால் சட்டென்று கண்களில் நீரை வரவழைக்கும் அவரது இருவரிக் கவிதைகளுக்கு ‘தோஹா’ என்று பெயர் ...

கபீர் தாசர் ...

கபீர் என்ற சொல் ‘மிகப்பெரிய, எல்லையற்ற’ பொருள்படும். ‘தாசர்’ என்றால் கடவுளின் சேவகன் ...

தமது எல்லைகாணாத எளிமையாலும் பணிவாலும் பாரத தேசத்தின், உலகின்  மொத்த ஆன்மாக்களின் நெஞ்சம் நிறைந்த ஞானி ...

ஒருமுறை அவரது ஒரு கவிதையைப் படித்தால் வாழ்நாளெல்லாம் நாம் அவர் கவிதைக்கு அடிமை... 

1440 ஆம் ஆண்டில் ஜூன் 28ஆம் நாள் வாரணாசியில் பிறந்தார் கபீர். மிக இளம் வயதிலேயே இறைபக்தி மிகுந்தவராக தன்னை ஸ்ரீ ராமனின் குழந்தை எனவும், அல்லாவின் குழந்தை எனவும் அழைத்துக்கொள்வார் அவர்.

தமது இஸ்லாமிய வளர்ப்புத் தந்தையின் தொழிலான நெசவுத்தொழிலை கற்றுக்கொண்டார் கபீர். எல்லோரையும் பொறுத்தவரை இல்லறக் கடமைகள் தவறாத ஓர் எளிய நெசவாளி அவர்... ஆனால் இறை அவருக்கிட்ட உண்மைத் தொழிலோ தம் மீது பக்தி செலுத்துவதும், சகமனிதர்களின் ஆன்ம, உலகியல் சிரமங்களுக்கு தீர்வளிப்பதுமே...

குருதேவர் இராமனந்தருடன் இருந்த காலங்களில் முஸ்லிம் மற்றும் இந்து பெரியோர்களுடன் நடைபெற்ற சமய விவாதங்களில் உடன் இருந்து கபீரும் அந்தந்த தத்துவங்களில் மிகத்தெளிவு பெற்றார்.

சகமனிதனை அன்னியனாக்கும் மதத்தை முற்றிலும் நிராகரித்தார் கபீர். மானுடகுலம் முழுதையுமே நேசித்தார் அவர். உலகின் உயிர்கள் ஒவ்வொன்றின் மீதும் பேரன்பு கொண்டவர் அவர். அந்தக் கருணையின் வெளிப்பாடே அவரது கவிதைகள். இந்து மதம் மற்றும் சுபி தத்துவங்களை உள்ளடக்கிய கவிகள் அவை.

தோஹாக்களை தவிர கபீர் பிஜக், அனுராக் சாகர், கபீர் கிரந்தாவளி என பிற கவிதைகளையும் நூற்களையும் இயற்றியுள்ளார் கபீர்.

கபீர் பந்த் என்ற ஒரு தனி குழுமத்தை உருவாக்கினார் கபீர். பிஜக் அந்த குழுவின் முக்கிய நூல் ஆகும். இறையுண்மையைத் தேடும் சாதகர்கள் மயக்கங்களையும், முட்டாள்தனமான சடங்குகளையும் விட்டொழிக்க வேண்டும் என்பதை கபீர் பிஜக் எவ்வித சமரசமும் கொள்ளாமல் உறுதியாக எடுத்துரைக்கிறது. 

அவரது 217  கவிதைகள் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிபில் சேர்க்கப்பட்டுள்ளன.

புராணங்களும் குரானும் வெறும் வார்த்தைகளே என்று கூறும் தைரியத்தை அவரது அகஅனுபவம்  அவருக்கு தந்து இருந்தது. ‘கடவுளைத் தேடும் ஒருவர் எங்கும் தேட வேண்டியதில்லை. உங்களால் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற ஆவலுடன் அவர் எங்குமே நிறைந்து காத்திருக்கிறார். துணிதுவைக்கும் பெண்மணிக்கும், தச்சருக்கும் கூட எளிதில் தோன்றுகிறார் அவர்’ என்று உரக்க உரைத்தார் கபீர்.

1517 ல் கோரக்பூர் அருகே மகர் என்னுமிடத்தில் அவர் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார். அவரது இறுதிச்சடங்கு நடைபெற்ற விதம் குறித்து ஒரு குறிப்பு இருக்கிறது. அவரது முஸ்லிம் சீடர்கள் அவர் உடலை புதைக்க விரும்ப, இந்து சீடர்கள் எரிக்க ஆசைப்பட்டனர். கபீர் அவர்கள் கனவில் தோன்றி அவரது உடலை மூடியிருந்த துணியை விலக்கச்சொன்னார். துணியை விலக்கி பார்த்தபோது அங்கு கபீரின் உடல் இல்லை. ஒரு மலர்க்குவியலே இருந்தது. அதில் பாதியை முஸ்லிம் சீடர்கள் கொண்டு சென்று புதைத்தனர். இந்து மாணவர்கள் மீதி பாதியை எடுத்து சென்று எரித்தனர்,...

******

‘கெட்டதொரு மனிதனைத் தேடி அலைந்தேன்.

எங்கும் காணவில்லை.

என் இதயத்துக்குள் அவனைத் தேடினேன்.

என்னை விட மோசமான மனிதன் உலகில் எங்குமில்லை’

திருவடி சரணம்🙏🏽ய