Friday, 27 July 2018

ராபர்ட் ஹூக் (Robert Hooke)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரும், கணித அறிஞரும், கண்டுபிடிப்பாளருமான ராபர்ட் ஹூக் (Robert Hooke) பிறந்த தினம் - சூலை 28:

* இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் என்ற இடத்தில் பிறந்தார் (1635). சிறுவயது முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிச் செல்லவில்லை. வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. ஓவியம் தீட்டுவதில் சிறந்து விளங்கினான் சிறுவன்.

* 1648-ல் தந்தை இறந்துவிடவே, தனக்குக் கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் சென்று, ஒரு பள்ளியில் தானாக சேர்ந்து கொண்டார். அங்கு கிரேக்கம், லத்தீன், இயந்திரங்கள், அறிவியல், கணிதம் கற்றார். 1655-ல் பிரபல விஞ்ஞானி ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

* இயந்திரங்கள் வடிவமைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். இயந்திரவியலில் அடிப்படையில் கோள்களின் இயக்கங்களை ஆராய்ந்தார். புவியீர்ப்பு விதியுடன் தொடர்புடைய பல விதிகளையும் உருவாக்கினார். நடைமுறையில் பயன்படுத்த முடிகிற வகையில் தந்தி முறையை உருவாக்கினார்.

* முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் இவர்தான் வடிவமைத்தவர். ஸ்பிரிங்கின் நீள் தன்மையை விவரிப்பதற்கான ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்தார். இது ‘ஹூக் விதி’ எனக் குறிப்பிடப்படுகிறது. உயிர்வாழ் இனங்கள், சிறு, சிறு பூச்சிகள், தாவரங்களை ஆராய விரும்பினார். அப்போது நுண்ணோக்கி ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தாலும் மிகவும் அரிதாகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது.

* அதில் ஒரு பொருளை நூறு மடங்கு அதிகமாக்கி ஃபோகஸ் செய்து காண்பதும் மிகவும் கடினமானதாக இருந்தது. அதை ஆராய்ந்து தன்னால் அதை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி, 1662-ம் ஆண்டு அதை முன்னூறு மடங்கு பெரிதாக்கிக் காட்டும் வகையில் வடிவமைத்தார். அதன் வழியாக தேனீக்களின் கண்கள், வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் என அனைத்தையும் ஆராய்ந்தார்.

* ஒரு தக்கையை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதில் தேன்கூட்டில் இருப்பது போல சிறு சிறு அறைகள் இருப்பதைக் கண்டார். அவற்றுக்கு ‘செல்கள்’ எனப் பெயரிட்டார். ‘மைக்ரோஸ்கிராவியா’ என்ற நூலை எழுதினார். இதில் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றி எழுதியுள்ளார்.

* நுண்ணோக்கி வழியாகப் புதைபடிவங்களை முதன்முதலில் ஆராய்ந்தவரும் இவர்தான். வானியல் குறித்து ஆராய்வதற்காக ‘ரிஃப்ளெக்டிங் டெலஸ்கோப்பை’ உருவாக்கினார். செவ்வாய், வியாழன் கிரகங்களை ஆராய்ந்து, படங்களை வரைந்து விளக்கங்களையும் எழுதினார். இவை 200 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிரகங்கள் சுழலும் வேகத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டன.

* இதுவரை வாழ்ந்தவர்களிலேயே அதிக விஷயங்களைக் கண்டுபிடித்த ‘புதுமைப் புலி’ எனப் போற்றப்பட்டார். ‘டாக்டர் ஆஃப் ஃபிசிக்ஸ்’ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. ‘ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன்’ அமைப்பில் அறிவியல் ஆராய்ச்சிகளின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

* இன்றைய மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் ஜாயின்ட், கேமராவின் அமெச்சுர் அளவை மாற்றி அமைக்க உதவும் ஐரிஷ் டயாஃபரம், கடிகாரங்களில் இருக்கும் பேலன்ஸ் வீல் ஸ்பிரிங் கன்ட்ரோல், காற்றடிக்கும் பம்ப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சாதனையாளர் ஆவார்.

* இயற்பியலாளர், வேதியியலாளர், உயிரியியலாளர், புவியியலாளர், கட்டிடக்கலை வல்லுநர், வான் ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ராபர்ட் ஹூக், 1703-ம் ஆண்டு தமது 68-வது வயதில் மறைந்தார்.

- கணக்கதிகாரம் -1

*ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?*

தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

குண்டலினி விழிப்படைய எவ்வளவு காலம் பிடிக்கும் ?

கேள்வி - குண்டலினி விழிப்படைய எவ்வளவு காலம் பிடிக்கும் ?

இராம் மனோகர் - நீங்கள் தூங்கினால் அது விழிக்கும் ஐயா.

கேள்வி - ஐயா என்ன சொல்கிறீர்கள் ? புரியவில்லை ! நான் கேட்பது குண்டலினி யோகம் சித்திக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்று.

இராம் மனோகர் - நான் மட்டும் என்ன சொன்னேன் !!? நானும் அதைத்தான் சொல்கிறேன். மனம் என்கிற கருவி ஒடுங்கி நிற்குமிடத்து குண்டலினி விழிக்கும். அது கண்ணிமைக்கும் நேரமாக இருந்தாலும் சரி, பல மணித்துளிகளாக இருந்தாலும் சரி, அது நிகழும். எனவேதான் மனம் உறங்கும் பொழுது குண்டலினி விழிக்கும். மனம் விழிக்கும் பொழுது குண்டலினி உறங்கும் என்பார்கள். இதை நாம் நம் அன்றாட வாழ்வில் ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது குண்டலினி உறங்குகிறது. அதாவது செயல்படுவதில்லை. எனவே நம் சக்திகள் அனைத்தும் விரையாமாகி விடுகின்றன. பிறகு நாம் ஆழ்ந்து உறங்கும் நிலையில் குண்டலினி விழித்துக் கொள்கிறது. இதனால் நம் உடலெங்கும் நாடி, நரம்புகளுக்குள் சக்தி ஓட்டம் நடைபெறுகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது, இறந்த செல்களனைத்தும் உயிர்ப்படைகின்றன. நாடி நரம்புகளில் தடைகள் இருக்குமாயின், ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த இடங்களுக்கு சக்தி ஓட்டம் கிடைப்பதில்லை. இது முதுமை எனப்படுகிறது. எவரொருவர் நாடிகளை சுத்தி செய்து தடைகளின்றி வைத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு திகழ்வார்கள்.

இது அன்றாடம் நம் உடலுக்குள் ஏற்படும் நிகழ்வு. இனி மற்றொரு அதிசயமும் உண்டு. அது என்னவென்றால், மனிதன் மூச்சு விடும் பொழுது மனம் வேலை செய்கிறது. மூச்சு நின்றவிடத்து மனமும் நின்று விடுகிறது. மூச்சு நிற்பது என்றால், நாம் வலிய நிறுத்தி வைக்கும் கும்பகம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், அதுவல்ல. அதை விட உயர்வான கும்பகம் ஒன்று ஒவ்வொரு மூச்சிற்கிடையிலும் நமக்குள் நிகழ்கிறது. அதைத்தான் கேவல கும்பகம் என்பார்கள். அந்த கேவல கும்பகம் நிகழும் பொழுதுதான் மனம் ஒடுங்கும். அதாவது நாம் ஒரு மூச்சை உள்ளே இழுத்த பிறகு அதை வெளியே விடுவோம். இந்த இரண்டு செயல்களுக்கும் இடையே ஏற்படும் இடைவெளிதான் கும்பகம் எனப்படுகிறது. இந்த கும்பகம் உள்ளே நிகழும் பொழுது நமது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பியிருக்கும். அதே சமயம் மூச்சை வெளியே விட்டு விட்ட பிறகு, மீண்டும் இழக்க வேண்டுமல்லவா ? அப்படி இழுப்பதற்கு இடையே ஏற்படும் கால அவகாசத்தில் நிகழ்வதுதான் பஹிர் கும்பகமாகிய கேவல கும்பகம். இது நிகழும் பொழுது மனம் ஒடுங்கும். இப்படி நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 25,000 முறை கேவல கும்பகம் நமக்குள் நிகழ்கிறது.

இந்த க்ஷண நேரத்தில் மனம் ஒடுஙகுவதால் ஓரளவு குண்டலினி சக்தி நமக்கு விழித்திருக்கும் பொழுதும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால், அது போதாது. சரி இனி விஷயத்திற்கு வருவோம். இந்த கேவல கும்பகத்தில் கால அளவை நீட்டிப்பதுதான் குண்டலினி யோகம். அதாவது மனதை நீண்ட நேரம் ஒடுக்க நிலையில் நிறுத்துவது. இதற்கு முதலில் கும்பகத்தை உள் முகமாகப் பழகி வரும் பொழுது, அது வெளியில் பஹிர் முகமாகவும் இயல்பாகவே நிகழ்ந்து வலுப்பெற்று வரும். தியான யோகத்தில் இது நிகழ்வதை யோகி அறிவதில்லை. தியானத்தில் வசப்பட வசப்பட மூச்சும் வசப்பட்டு கேவல கும்பகம் நிகழும் பொழுது யோகி சமாதி நிலையை அடைந்திடுவார். ஆனால், அதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதோடு, மனம் அவ்வளவு எளிதில் வசப்படுவதில்லை. பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறபடியால், அதற்கு மாற்றாக, தந்திர யுக்தியாகக் கண்டறியப்பட்டதே இந்த குண்டலினி வாசி யோகம். இதில் ப்ராணாயாமம், மூலபந்தம், உட்டியான பந்தம், ஜலந்திரபந்தம், கேவல கும்பகம் போன்ற கூறுகள் அடக்கம். இதனால் ப்ராண சக்தி வலுப் பெற்று சூக்கும தேகம் ப்ராகசிப்பதோடு, மனமும் எளிதில் ஒடுக்க நிலையை அடையும்.

இப்படிப் பயிற்சியில் முன்னேறிய சாதகருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் குண்டலினி விழிப்பு பெற்று சுழுமுனையை திறந்து கொண்டு, சீறிப் பாய்ந்து மேலேறும். யோகி தன் நிலையை, தனக்கு குண்டலினி விழிப்பு பெற்றதை உணர்வார். கால அவகாசம் என்பது அவரவர் முயற்சியின் தீவிரத்தைப் பொறுத்தது. இனி மேலேறிய குண்டலினி மறுபடியும் கீழிறங்கி வந்து மூலாதாரத்தில் அமர்ந்து கொள்ளும். இனி யோகி செய்ய வேண்டியதெல்லாம். அப்படிக் கீழிறங்கிய குண்டலினியை ஒவ்வொரு ஆதாரத்திலும் 4140 நாழிகைகள் நிறுத்தி, சுவாதிட்டானம் முதலாகிய ஐந்து ஆதாரங்களிலும் மொத்தம் 20700 நாழிகைளகள் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்த வல்லவர்க்கு, அது யோகத்தில் ஓராண்டு ஆகும். இப்படி பன்னிரண்டு யோக ஆண்டுகளைக் கடந்தவர்கள் பூரண யோகியாவார்கள் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் ஆதி சங்கரர் ஆறு ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சகஸராரத்தை அடைந்தாலே யோகி அமநஸ்க அவத்தையை அடைந்து, நிர்விகல்பம் பெற்றிடுவார் என்று கூறுகிறார். அதாவது பூரணமாக யோகத்தில் சாதனை புரிய பன்னிரண்டு ஆண்டுகள் விடா முயற்சியுடன் சாதனங்களை கை கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் 12 பிராணாயாமம் ஒரு பிரத்தியாகாரம் என்றும், 12 பிரத்தியாகாரம் ஒரு தாரணை என்றும், 12 தாரணை ஒரு தியானம் என்றும், 12 தியானம் ஒரு சமாதி என்றும் சொல்வார்கள். 1 தியானம் என்பது 5 மணி நேரம் 45 நிமிடம் 36 நொடிகள் என்பர். அப்படியானால் மற்றதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். சித்தர் பாடல் ஒன்று இரண்டு மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தாரணை என்றும், 24 மணி நேரம் மூச்சை அடக்குவது ஒரு தியானம் என்றும், 12 நாட்கள் மூச்சை அடக்குவது சமாதி என்றும் சொல்கிறது. இதில் இன்னுமொரு ஐயப்பாடு உண்டு. அது என்னவெனில், மூச்சை அடக்கினால் உயிர் பிரிந்து விடாதா ? என்ற கேள்வி எழுகிறது. மூச்சை அடக்கி விடுவது என்றால் மெதுவாக மூச்சு விடுவதுதான். இதைத்தான் ''அடக்கி வாசி(மூச்சு)'' என்று சொல்வார்கள்.

சாதாரணமாகப் பார்க்கும் பொழுது மூச்சு நடைபெறுவது தெரியாது. பொதுவாக ஒரு நிமிடத்திற்கு அதாவது நாலு நொடிகளுக்கு ஒரு சுவாசம் நடைபெறும் பொழுதுதான் மார்பு விரியும், வயிறு புடைக்கும், உடல் அசைவு கண்ணுக்குப் புலப்படும். அதே ஒரு சுவாசத்தை நாம் ஒரு நிமிட கால அவகாசத்தில் மெதுவாக இழுத்து, மெதுவாக விடுவோமேயானால் அசைவு பார்பவர்கள் கண்களுக்குப் புலப்படாது. மூச்சு நடைபெறவில்லை என்றே கருதுவார்கள். எனவே இப்படிப்பட்ட கடினமான, உயர்ந்த யோக நிலையை அடைய 12 ஆண்டுகள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட வேண்டும் என்பதுதான் கோட்பாடு. குருவருளாலும், ஜென்மாந்திரத் தொடர்பாலும், விடா முயற்சியாலும் சிலருக்கு விரைவாகவும் நிகழ்ந்து விடுவதுண்டு. விபத்து மற்றும் அதிர்ச்சியாலும் கூட குண்டலினி எழும்பிய கதைகள் உண்டு.

மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும்

மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.
1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு 5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து ‘மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி’ என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.
1.

ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா

2.

கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.

சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள்

1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
7.மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.

Wednesday, 25 July 2018

மேட்டுர் அணை வரலாறு :

மேட்டுர் அணை வரலாறு :

நமக்கும் நம் தலைமுறைக்கும்
சம்பந்தமே இல்லாத மண்
இது என்று தெரிந்தும் ஒருவர்
தமிழகம் செழிக்கும் வண்ணம்
பிரம்மாண்டமான மேட்டூர்
அணையை கட்டி கொடுத்துச்
சென்றுள்ளார் ராயல்
என்ஜீனியர் கர்னல்
டபுள்யூ.எம்.எல்லீஸ்.

இன்றைக்கு 48 ஆயிரம்
கோடி ரூபாய் கொட்டினால்
கூட கட்டமுடியாத
பிரம்மாண்டத்தை கொண்டுள்ள
இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய்
திட்டத்தில்
கட்டி முடித்துள்ளனர்.

மலைக்க
வைக்கும் மாபெரும் திட்டம்.
யாவரும் வியக்கும் மதி நுட்பம்.
மேட்டூர்
அணையை இதுவரை இரண்டு
முறை மின்னல் தாக்கியது.
இருப்பினும் அணைக்கு எந்த
பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில்
காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம்
செய்யக் கூடிய ஆட்களும்
இருந்தும் போதிய நீர்ப்பாசன
வசதி இல்லாததால் விவசாயம்
சரிவர செய்ய முடியவில்லை.
இதை உணர்ந்த
ஆங்கிலேயே அரசு
காவிரியின்
குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை
தேடியது. 15 ஆண்டுகள்
கழித்து அன்றைய ஆங்கிலேய
அரசின் சென்னை மாகாண
கவர்னர் ஸ்டான்லி காவிரியின்
குறுக்கே அணைக் கட்ட உத்தரவிட்டார்.

இந்த உத்திரவை போட்ட
கவர்னர் ஸ்டான்லியின்
பெயரால் மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும்
அழைக்கப்படுகிது.
இந்த அணையில் கடல் போல
காட்சியளிக்கும்
அளவுக்கு தண்ணீர்
தேக்கப்பட்டது.
அணையை கட்டிய பொறியாளர்
டபிள்யூ.எம்.எல்லீஸ்
ராயலை மேட்டூர் அணையின்
சிற்பி அன்றும், இன்றும்
புகழப்படுகிறார் இனி என்றும்
புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய
அணைகளில் ஒன்றான இதன்
உச்ச நீர் மட்ட அளவாக 120
அடி வரை நீரைத் தேக்கலாம்.

அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல்
நிரம்பாமல்
தானாகவே வெளியேறிச்
செல்லும் அற்புதமான
இயற்கையுடன் இணைந்த
கட்டுமானப்பணி, எந்தக்
காலத்திலும்
அணைக்கோ அணை சார்ந்த
கட்டுமான அமைப்புகளுக்கோ
ஒருக்காலும்
ஊறு விளைக்கமுடியாத
தன்மைகளுடன்
அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின் அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு உயரம் 120 அடி
அணையின்
நீர்பிடிப்பு பரப்பளவு 59.25
சசதுர மைல்
2,71,000 ஏக்கர் பாசன
வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின்
உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு,
திருச்சி, தஞ்சை, திருவாரூர்,
நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப்
பகுதி மாவட்டங்களுக்கு
மேட்டூர் தண்ணீர் போகிறது.
மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன
வசதி பெறுகின்றன.

அது
மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர்
அணையிலிருந்து வெளியே
வரும் காவேரி அதே பெயரில்
106, கிலோ மீட்டர் தூரம்
செல்கிறது. இதன்
கிளை நதிகளாக கொள்ளிடம்,
பொன்னியாறு,
கல்லணை கால்வாய்,
வெட்டாறு, வெண்ணாறு,
குடமுருட்டி என்ற பெயரில் பல
நதிகளாக 694 கிலோ மீட்டர்
தூரம் செல்கிறது.

இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன
வசதியை கொடுக்கிறது.
இப்படி தமிழகத்தை
நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும்
வகையிலும் ,கிட்டத்தட்ட
பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள்,
உறவு மறந்தும், உணவும்
தூக்கமும் துறந்தும் மேட்டூர்
அணை என்ற
பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல்
டபுள்யூ.எம்.எல்லீசை,
அணையும் நம் மனசும்
நிறைந்துள்ள இந்த நேரத்தில்
நினைவு கூர்வோம்..