Tuesday, 20 November 2018

*கணித மேதை* *சகுந்தலா தேவி

நவம்பர் 4

*கணித மேதை* *சகுந்தலா தேவி பிறந்த தினம்*

     🔣 கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன. ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர், கணித மேதை சகுந்தலா தேவி.

    🔣 1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி, கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா. இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில் வேலைபார்த்து வந்தார்.

     🔣  சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு, தன் வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.

     🔣 சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட,  அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும் கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு, தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

     🔣  'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை. இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.

     🔣 வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும் வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.

      🔣 கணிதப் புதிர்களுக்கு கம்ப்யூட்டர், கால்குலேட்டர் இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமை பெற்றிருந்தவர் சகுந்தலா. தன் கணிதத் திறமையை உலகறியச் செய்ய, அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

     🔣 1977-ம் ஆண்டு 201-க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இரண்டு 13 இலக்க எண்களைப் (7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  பெருக்கி, 28 விநாடிகளில் விடை கூறி, உலகையே வியக்கவைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்டது.  இதுவே அவரது  உலக சாதனையானது.

       🔣 அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு வந்தபோது, சகுந்தலாவின் வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா தெரியவில்லை. சோதித்துப்பார்த்துவிடலாம் எனக் களம் இறங்கினர். 

    🔣 அவர்கள் கொடுத்த
91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள். கம்ப்யூட்டர், 13,000 கட்டளைகளுக்குப் பின் ஒரு நிமிடத்தில் பதில் சொல்லத் தயாரானபோது, சகுந்தலா, 546372891 என
10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.

     🔣 ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.

     🔣 கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராக இருந்தார் சகுந்தலா. பின்வரும் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் வகையில், கணிதவியலைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங்கள் பல.

     🔣 ‘புக் நம்பர்ஸ்’, ‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’, ‘இன் தி வொண்டேர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ்’, ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ என அந்த நூல்கள் அவர் திறமையின் சான்றுகளாக, நமக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன.

      🔣 உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 3-ம் தேதி காலமானார் சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை, மறக்கமுடியாத ஆளுமை.

Sunday, 18 November 2018

கணினி

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது.

கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன. அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.

பொதுவாக கணினி இயந்திரம் - வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான்.

கணினி வன்பொருள் சாதனங்கள்

கணினி வன்பொருள் சாதனங்கள் எனப்படுவது, உங்கள் திரையகம் (monitor), விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse), அச்சுப்பொறி (printer), மற்றும் பிற வன்பொருள் (hardware) உபகரணங்கள். இந்த வன்பொருள் சாதனங்கள் ஆனது கணினியில் நிறுவியுள்ள கணினி இயக்கமுறைமையை (computer operating system) தொடர்புக்கொண்டு கட்டளைத் தரவுகளைப் பறிமாறிக்கொள்கின்றன. எனவே இயக்கமுறைமை (operating system) இல்லாமல் வன்பொருள் சாதனங்கள் கணினி அமைப்பில் செயல்படுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.

கணினி மென்பொருள் கோப்புகள்

மென்பொருள் (software) என்பது, வன்பொருளுக்கு (hardware) வேலை கொடுக்கும் கட்டளைகளை (instruction sets ), அல்லது நிரல்களை (programs), குறிக்கிறது. உங்கள் கணினியில் கடிதங்கள் எழுதப் பயன்படுத்தும் சொற்செயலி ( word processing program ) ஒரு வகை மென்பொருள்தான். இயக்க முறைமை (Operating system) என்பது உங்கள் கணினியையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களையும் நிர்வகிக்கும் மென்பொருள். Windows -உம் Mac OS -உம் பரவலாக அறியப்பட்ட இரண்டு இயக்க முறைமைகள் (operating systems).

கணினியின் வரலாறு

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் (burned out) தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக்  கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

கணினியின் வகைகள்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இணையம்

இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.

கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்தி பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் ஆழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது

இணையத்திற்குத் தேவையானவை

பேரூர் முதல் சிற்றூர் வரை இணையத்தள வசதிகள் கிடைக்கின்றன. இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்களாவன.

1. கணினி

2. தொலைபேசி

3. இணையச் சேவை வழங்குநர்

4. மாற்றி (network interface card)

5. தொடர்பு மென்பொருள்

இவற்றைக்கொண்டு இணையத் தொடர்பைப் பெறலாம். இணையத்தைப் பயன்படுத்த, இணையச் சேவைக்கு உரியவரிடம் தனிக்கணக்குத் தொடங்குதல் வேண்டும். பின்பு, கணினியை இணையத்தளத் தடத்தில் இணைத்தல் வேண்டும்.

இணைய இணைப்பு வகைகள்

தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி இணைப்புச் சேவையாகும். இம்முறையில் விரைவும் வசதியும் குறைவாக இருந்தமையால், புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. வையக விரிவு வலை செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகையில் கிடைக்கின்றது. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, கம்பி வடமாற்றி, செயற்கைக்கோள் சேவை, கண்ணறைச் சேவை என்பன ஆகும்
கணினிவழிக் கல்வி

கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியே கணினிவழிக் கல்வி. வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினிவழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.

இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் முதலியவற்றுக்கான தீர்வுகளைப் பெறவியலும். தீர்வுகளைப்பெற மின்னஞ்சல் முகவரி உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே நேருக்குநேர் தொடர்புகொண்டு கற்கும் வாய்ப்பும் இன்று கிடைக்கின்றது.

கணினிவழியாக மொழிக்கல்வியும் பெறவியலும். மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம். சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கறக இயலும்.

உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழறய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது
கணினியின் பயன்கள்

கணினி, நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய,  பல்துறைகளில் பயன்பட்டு வருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள், கணிதத் தேற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது.

பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.

உள்ளங்கையில் உலகம். தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக் காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு  வந்துள்ளன.

Monday, 15 October 2018

ஆரா பழ உணவுத் திட்டம்

முதல் நாள் மாலை வாங்கவேண்டியது

நெல்லிக்காய் பெரியது - 10 Nos
கருப்பு திராட்சை கொட்டை உள்ளது 1 Kg.
கருவேப்பிலை 10 ரூபாய்க்கு.

*வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது.*

தேங்காய் 5
இளநீர் 6
பச்சை வேர்கடலை 250g
கருப்பு சுண்டல் 250g
பாசி பயறு 500g
இயற்கை கருப்பு பேரிட்சை 250g
பாதாம் 100g
பாதாம் பிஸின் 100g
முந்திரி 100g
அக்ரூட் பருப்பு 100g
பிஸ்தா பருப்பு 100g
சிகப்பு கைகுத்தல் அவுல் 500g
நாட்டு சர்க்கரை 500g
கருப்பட்டி 250g
காய்ந்த கருப்பு திராட்சை கொட்டை உள்ளது.100g
கருஞ்சீரகம் 100g

*தேவைபடும்போது வாங்கவேண்டியது*

*பழங்கள்*

Fridge ல் வைத்து பயன்படுத்தக் கூடாது.

சாத்துக்கொடி
கேஷ்மீர் ஆப்பிள்
நாட்டு வாழைப்பழம்
கொய்யா பழம்
பப்பாளி
தர்பூசணி
நாட்டு மாதுளை
நேந்திரம் வாழை
செவ்வாழை

வாங்கிவிட்டு Photo எடுத்து பதிந்து தெறியப்பபடுத்துங்கள்.
15 ஆம் தேதி முதல் பயிற்சிகள் துவங்கும்.

நன்றி
உங்கள் நண்பன்
*வேதா*
www.aurayogacenter.com
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: *ஆரா ஜூஸ்*

ஆரா ஜூஸ் என்றாள் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை.

ஒரு நெல்லிக்காய்

1 இன்ஞ் அளவு இஞ்சி தோல் சீவி.

பாதி Lemon தோலோடு.

அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்து இளநீரில் கலந்து குடிக்கவும்.

தண்ணீர் கலந்தும் குடிக்கலாம். தண்ணீரில் கலக்கும் போது நாட்டுசர்க்கரை  கலந்து பருகவும்.

இதை தினமும் காலை 7.30 மணிக்கு அனைவரும் குடித்துப்பாருங்கள். உங்கள் உடல் அற்புதமாக மாறும் மாற்றத்தை உணருங்கள்.

நன்றி
வேதா
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: *நலங்கு மாவு*

கடலை பருப்பு
பச்சை பருப்பு
வசம்பு
ரோஜா மொக்கு
சீகக்காய்
வெட்டிவேர்
அரப்புத்தூள்
விளமிச்சை வேர்
நண்ணாரி வேர்
கோரை கிழங்கு
பூவிழங் கிழங்கு
கஸ்தூரி மஞ்சள்

மஞ்சள் - தனியாக அரைத்துவைத்துக் கொள்ளவும்.

ஆவாரம் பூ
வெந்தயம்
பூவந்திக் கொட்டை.

அனைத்தும் 50 grm
வெயிலில் 3 நாட்கள் காய வைத்து அரைத்துக் வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.

ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்.

நன்றி
வேதா
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: குடிநீர் மன்பானை
தேத்தான் கொட்டை - 100g
நன்னாரி வேர் - 100g
வெட்டி வேர் - 100g
[9/23, 7:32 PM] balathandapanivelukudi: நாள் - 1

*காலை*

குளிர்ந்த நீரில் குளியல்.

4 to 5am தேவக் குளியல்,
5 to 6 மணிதக்குளியல், after 6 அசுரக் குளியல்.
இதில் நீங்கள் யாராக விருப்பமோ அந்த நேரத்தில் குளித்துக் கொள்ளுங்கள்.

7.30 மணிக்கு நெல்லிக்காய் ஜூஸ்

8.30 மணிக்கு அரைமூடி 
தேங்காய் துருவியோ, பத்தையாகவோ சாப்பிடவும்
அதோடு 2 நாட்டு வாழைப்பழம் (அ) உங்களுக்கு பிடித்த வாழைப்பழம், கண்டிப்பாக கொஞ்சம் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சாப்பிடவேண்டும்.

*மதியம்*

3 சாத்துக்கொடி பழத்தை
 உரித்து அப்படியே சாப்பிடவும். அதோடு 
100gm ஊரவைத்த பச்சை வேர்கடலை சாப்பிடவும்.

பச்சை வேர்கடலையை 
இன்று இரவே ஊரவைத்து விடுங்கள்.

*இரவு*

4.00 மணிக்கு கருப்பு திராட்சை கொட்டை உள்ளது, அல்லது பண்ணீர் திராட்சை ஜூஸ். 
(Audio) கேட்கவும்.

8.30 மணிக்கு 2 கேஷ்மீர் ஆப்பிள்களை தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடவும்.

இடையே பசிக்கும்  போதெல்லாம் அண்ணாசி, மாதுளை, மாம்பழம், Lemon juice without sugar, நீரையும் குடியுங்கள்.

*நாள் - 2*

அதிகாலை 5 மணிக்கு அலாரம் இல்லாமல்  கண்விழிப்பு, 5.30 மணிக்கு குளியல், சூரிய  வணக்கம்,  தோப்புக்கரண பயிற்சி 20 முறை.

7.30 மணிக்கு வெண்பூசனிஜூஸ்

*காலை*

8.30 மணிக்கு தேங்காய்அரைமூடி,வெல்லம், சேர்த்து சாப்பிடவும். நாட்டு வாழைபழம் 2
பேரிட்சை 4

*மதியம்*

கருப்பு பேரிச்சம் பழம்  10.
வெள்ளரிக்காய் 150  கிராம் சாப்பிடுங்கள்.

*இரவு*

 கொய்யா பழம் மூன்று மட்டும்.

இடையில் தேவையான போது

சாத்துக்குடி, ஆப்பிள்,
பப்பாளி எடுத்துக்கொள்ளளாம்.

 இடைவெளி விட்டு,  தேவையான நீரும் குடிக்கலாம்.!

கான்கா பயணம்

இன்று (15.10.18) அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து காலை கடன்கள் முடித்து விட்டு 4.00 மணிக்கு கமலாயம் குளம் வட மேற்கு முலையில் டாக்ஸியில் மயிலாடுதுறை பயணம்.  5.40 க்கு விழுப்புரத்திற்கு பாசஞ்சரில்  பயணம்.  காலை உணவு இட்லி கடலூர் தாண்டியதும் இரயிலேயே இரவி சகோதரர் அளித்தார்.  பின்னர் சென்னைக்கு விழுப்புரத்தில் வைகை அதிவிரைவு வண்டியில் 11.50 க்கு ஏறினோம்.  வண்டியில் செல்வராஜ் உடன் பயணம்.

Sunday, 23 September 2018

தொலைநிலை படிப்புகள் நடத்த பல்கலைகளுக்கு புது கட்டுப்பாடு

தொலைநிலை படிப்புகள் நடத்த பல்கலைகளுக்கு புது கட்டுப்பாடு

தொலைநிலை கல்வியில் படிப்புகளை நடத்த, 

பல்கலைகளுக்கு, புதிய கட்டுப்பாடுகள்

விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 தொலைநிலை கல்வியில், பல பல்கலைகள், விதிகளை மீறியும், சரியான உள் கட்டமைப்பு வசதி இன்றியும், படிப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

  இதையடுத்து, சீர்திருத்த

நடவடிக்கைகளை, பல்கலை கழக மானிய

குழுவான, யு.ஜி.சி., மேற்கொண்டுள்ளது.


  அதனால், இந்த கல்வி ஆண்டில்,தொலைநிலை கல்வியில் படிப்பை நடத்துவதற்கான அனுமதி, பலபல்கலைகளுக்கு, ரத்து செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், அண்ணா பல்கலை, சென்னை பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், சில குறிப்பிட்டபாடங்களுக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.

 இந்நிலையில், தொலைநிலை கல்வியில் படிப்புகளை நடத்துவதற்கு, யு.ஜி.சி., புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

*அதன் விபரம்*

  தொலைநிலை கல்வியில் படிப்புகளை நடத்தும் பல்கலைகள், 'நாக்' அமைப்பின் 3.26 அல்லது 4 அளவிலான குறியீடுகளை பெற வேண்டும்.

  2019 - 2020ம் கல்வி ஆண்டுக்குள், இந்த இலக்கை அடையாவிட்டால், தொலைநிலை கல்வி நடத்த அங்கீகாரம் கிடைக்காது.

  திறந்தநிலை பல்கலைகள், 'நாக்' அங்கீகாரம் பெறும் நிலையை ஓராண்டுக்குள் எட்ட வேண்டும். சுயநிதி நிகர்நிலை பல்கலைகள், அவர்களுக்கான விதியை பின்பற்றி, தொலைநிலை படிப்பு நடத்தலாம்.

  படிப்பு மையங்களின் கண்காணிப்பாளர் பதவியில், குறைந்த பட்சம், உதவி பேராசிரியர்கள் அந்தஸ்தில் உள்ளவர் பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.