Thursday, 23 November 2017

கணிதம் -6

🖌தெரியுமா உங்களுக்கு ? 🖌
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?*

தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

Tuesday, 7 November 2017

English3

• பள்ளி தகவல் பலகை...
• 7-11-2016 – செவ்வாய் கிழமை..

ஆங்கில இலக்க்ணம் – தொடர்ச்சி..

குறிப்பு:----This, That , இரண்டும் பேசுபவர் –
நிலையிலிருந்து இரு வேறு தூரத்தைக்
குறிக்கின்றன எனக் கண்டோம். இவை
இரண்டும் இடத்தைச் சுட்டும் Here, There
என்ற சொற்களுடனும் தொடர்பு உடையவை.
தன்மை முன்னிலையான I, you ஆகிய
சொற்களுக்கும் இவைகளுக்கும் உள்ள
தொடர்பையும் காண்க.
This, That, These, Those  ஆகியவை சுட்டிக்
காட்டுகின்றன.. அதாவது ஒரு குறிப்பிட்ட
பொருளையோ அல்லது அதன் தொகுதியையோ
அல்லது அதே போன்ற மற்றவற்றிலிருந்து
பிரித்துச் சுட்டிக் காட்டுகின்றன. எனவும்
கொள்ளவேண்டும். இச் சொற்களால் –
தூரத்தை மட்டும் தான் சுட்ட இயலும்
எனக் கருதிவிடக்கூடாது.
This is the God I worship என்பதில் நான்
வணங்கும் தெவம் இதுதான் ( மற்றவை
அல்ல ) என்பது பிரித்துச் சுட்டுகிறோம்.
இருப்பினும் சில வாக்கியங்களில்
இவ்வாறு பிரித்துச் சுட்டுவது நிகழ்வதில்லை.
The climate of Kodaikkanal is like that of Ootacamund
என்பதில் ‘ that’ வாக்கியத்தில் முன்பே –
பேசப்பட்ட ‘the climate of Kodaikkanal என்பதைக்
குறிக்கின்றதே ஒழிய எதையும் பிரித்துச்
சுட்டுவதில்லை:  இது போன்ற வாக்கியங்களில்
வரும் ‘That’ சுட்டும் பிரதிப் பெயர்ச்சொல் என்ற
விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாகாது.

INDEFINITE PRONOUNS
பொதுப் பிரதிப் பெயர்சொற்கள்.
எ.கா.
All were in danger.
எல்லோரும் அபாயத்தில் இருந்தனர்.

Do good to others.
மற்றவர்கட்கு நன்மை செய்.

Nobody came to see me.
யாரும் என்னைப் பார்க்க வரவில்லை.

Some are wise.
சிலர் புத்திசாலிகள்.

In the above sentences the bold letter words
are pronouns. They refer to person / thing in a
general way but do not refer to person / thing
in particular. So they are called “ INDEFINITE PRONOUNS”.
மேற்கண்ட வாக்கியங்களில் தடித்த எழுத்தில் உள்ள
பிரதிப் பெயர்சொற்கள் யாரையும் குறிப்பிடாது பொது
வாகக் குறிப்பிடுவதால் “ பொதுப் பிரதிப் பெயர்ச் சொற்கள்”
ஏனப்படும்.

Genl

• பள்ளி தகவல் பலகை...
• 8-11-2017 – புதன் கிழமை..

1. What are the bones of the human arm ?
  Radius, Scapula,  Humerus, Ulna, Carplas,
  Metacarpals, Phalanges.
2. What is meant by insulin ?
   It is a very useful drug for diabetes and
   Was discovered by Dr.F.G.Banting in
   1922. It is product of unknown nature
   Derived from the percentage of animals.
   It regulates the percentage of sugar in blood.
   If the percentage is too high a converts the
   starch in liver, muscles and skin. With the help
   of insulin a diabetic patient leads a normal
   healthy life. It is generally injected into the
   patient.
3.  தடவியல் துறையில் கதிர்கள் எவ்வாறு பயன் –
    படுகின்றன?
    குற்றங்களைத் துப்பறிதல், நகைகளை வயிற்றுக்குள்
    மறைத்துக் கடத்துதல், போதைப் பொருள் கடத்துதல்
    முதலியவற்றைக் கண்டுபிடித்தல்.
4.  கள்ள நோட்டுகள், போலிப் பத்திரங்களைக் கண்டுபிடிக்க
    உதவுவது எது? கதிர்கள்.
5.  ஆப்ரிக்க கண்டத்தில் தன் காலணியை நிறுவிய முதல்
    நாடு எது?  பெல்ஜியம்.
6.  பச்சேந்திரிபால் எதனால் புகழ்பெற்றார்?
    எவரெஸ்டையடைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற
    முறையில்.
7.  அமெரிக்க அதிபர்களில் தேர்ந்தெடுக்கப்படாமல் பதவி
    வகித்தவர் ஒரே ஒருவர்தான் அவர்தான் –
    ஜெரால்ட் ஃபோர்ட்.
8.   அடிமை வியாபரத்தை ஒழித்த முதல் நாடு எது ?
     இந்தியா அல்ல – இல்லை – அதுதான் டென்மார்க்.
9.   காலத்தால் முற்படது இரமாயணமா – மகாபரதமா ?
     இராமாயணம்.
10.   வடதுருவத்தில் நிலப்பரப்பே கிடையாது என்பது –
      உண்மையா? உண்மை.

Saturday, 21 October 2017

General

*🔥உலக விஞ்ஞானிகளையே வியக்கவைத்த தமிழர்கள் : இன்று வரை விளங்காத மர்மம்..,*🔥

👉🏼தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இதோ தமிழனுடைய கண்டுபிடிப்புகளின், சாதனை பட்டியல்கள்….😇

*🕍தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்*

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

🌋 *கல்லணை*

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

🏛 *மாமல்லபுரம்*

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனெசுகோ அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம்  பயின்றனா ?

🌇 *அங்கோர்வாட் கோயில்*

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

🌉 *திருநள்ளாறு கரி ஈசன் கோயில்*

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால்கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

*🎇கடல் நடுவே ராமேசுவரம்*

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

🎈 *தொல்காப்பியமும்‪ ‎திருக்குறளும்‬*

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கிலமொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

📡 *அணு*

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை …அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே”-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து… என்று பாடி உள்ளார்.

📌 *சித்தர்கள்*

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள்,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே எனதமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியானதமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

*♥வானியல் அறிஞர்கள்*

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

➕ *பூம்புகார் உலகின் தொன்மையான நகரம்*

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

✔ *உலகை ஆண்ட தமிழர்*

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழிவர்மன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழிவர்மனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாத்து அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன்..

நிறைய பகிருங்கள் நமதுவரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்

Sunday, 1 October 2017

English2

English Grammar
THE NOUN – CASE – cont....
The Objective Case ( The Accusative Case ).
இரண்டாம் வேற்றுமை ,.......
Rama killed Ravana...
இராமன் இராவணனைக் கொன்றான்.
Krishna threw a book.
கிருஷ்ணன் புத்தகத்தை எறிந்தான்.
In sentence 1 the answer for the question
Whom did Rama kill? – is – Ravana.
In sentence 2 the answer for the question
What the Krishna throw? Is – book.
The nouns Ravana and book are objects of
the Transitive verb. “ killed “ and “ threw “
respectively. So the nouns are said to be
in the Objective case.
மேற்கண்ட வாக்கியங்களில்  யாரை ?
ஆல்லது எதை? என்று வினாவின் பதில்
கிடைப்பது இராவணன், புத்தகம் ஆகும்.
இப்பெயற்சொற்கள் வாக்கியத்திலுள்ள
வினைச்சொல்லிற்குச் செயப்படுபொருளாக
உள்ளது. ஆகையால் அவை இரண்டாம் வேற்றுமை
ஆகும். ( தமிழில் இதன் உருபை தெரிந்துகொள் ).
When a noun is the object of the transitive verb –
It is said to be in the Objective case. “ The
Objective case is also called the Accusative case.
It is the case of the objective.
ஒரு வாக்கியத்தில் பெயர்ச்சொல் செயப்படுபொருளாக
இருப்பின் அது இரண்டாம் வேற்றுமை எனப்படும்.
இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருளுக்கிரிய
வேற்றுமையாகும்.
The book is on the table. புத்தகம் மேசை மீது –
உள்ளது.    Rama met Sita in the garden.
இராமன் சீதையைத் தோட்டத்தில் சந்தித்தான்.
In the above sentences the table and the garden
are nouns in the objective case, governed by the
prepositions “ on “ and “ in “ respectively .
A noun which comes after a preposition is also
said to be in the objective case. The noun
is then said to be governed by the preposition.
மேற்கண்ட வாக்கியங்களில் மேசை, தோட்டம்
என்ற பெயர்சொற்கள் on, in  என்ற வேற்றுமை
உருபு களுடன் முறையே சேர்க்கப்பட்டருக்கின்றன.
இம்மாதிரி உருபிடைச் சொல்லால் (  PREPOSITION )
சேர்க்கப்பட்டு இருக்கும். பெயர்ச்சொல் இரண்டாம்
வேற்றுமையில் வந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவேண்டும்.
-by ACSMani

Wednesday, 13 September 2017

English 1

Difference between cloth and clothes

🅺🅽🅾🆆 🆈🅾🆄🆁 🅴🅽🅶🅻🅸🆂🅷

Difference between cloth and clothes:

🅒🅛🅞🅣🅗:

       - a length of fabric used to make garments, blankets, and pants and shirts.

       - Unstitched dress materials.

🔎 Examples:

📌 Many cloth centres in Karur have started Deepavali sales.

📌 He needs three metres of cloth .

🅒🅛🅞🅣🅗🅔🅢: 

        - garments worn to cover the body.

        - stitched dress materials.

🔎 Examples:

📌 Her son  needs new clothes for school every term because he grows so quickly.

📌 The old beggar's clothes were ragged.

📌 He has fashionable clothes in his cupboard.

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

Compiled by,

R.Chinnasamy

Sunday, 30 July 2017

உள்ளம்தோறும் வள்ளுவம்

அதிகாரம்:84; பேதைமை 04

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்

Saturday, 22 July 2017

கணிதம்-5

*கணித வரலாறு கற்பிக்கப்படுவது - அவசியமா? - விழியன்*

வரலாறு அவசியமான ஒன்றா? எதற்கு ஆண்டுகளை நினைவு வைத்திருக்க வேண்டும்? அதனை வாழ்கையில் எங்கேனும் பயன்படுத்துகின்றோமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால் யோசித்துப்பாருங்கள் சென்னை 2017 என்றதும் ஒரு மனச்சித்திரம் உருவாகும், சென்னை 1966 என்றதும் ஒரு மனச்சித்திரம் உருவாகும், சென்னை 1947 என்றதும் சுதந்திர நாட்களை நினைவுபடுத்தும். இடமும் வருடமும் உடனே அந்த காலகட்டத்தில் இருந்த சமூகம், மனிதர்கள், கட்டமைப்பு, சிக்கல்கள் என எவ்வளவு வாசித்திருக்கின்றோம், அறிந்திருக்கின்றோம் என்பதைப் பொருத்து விரியும்.

சரி கணித வரலாற்றின் அவசியம் என்ன? ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒவ்வொரு அடுத்தகட்ட முயற்சிக்கும் காரணம் தேவைகள் மட்டுமே. நைல் நதிக்கரையோரம் மனிதர்கள் வந்து வாழ்கையை அமைத்துக்கொள்கின்றார்கள். நதி வரமாக இருக்கும் போது அது சாபமாகவும் விளைகின்றது. எப்போது வெள்ளம் வரும் ஊரை அடித்துச்செல்லும் என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல நாட்காட்டியை உருவாக்குகின்றான். சீர் செய்கின்றான். நிலத்தினை பங்கு போட விழைகின்றான், வரி வசூலிக்க நினைக்கின்றான் அப்போது கணிதம் மேலும் வலு பெறுகின்றது. இது எந்த நாகரீகம் புரிகின்றதா?

எண்களின் வரலாற்றினை வாசிக்கும் போதே நாகரீகத்தின் வரலாறும் கூடவே வாசிப்போம். ஆடு மேய்பவர்கள் Number theoryக்கு எப்படி அடித்தளம் இட்டார்கள். கணித முன்னேற்றம் என தனியே பிரித்துவிட முடியாது அதன் கூடவே அறிவியல் முன்னேற்றமும் ஒட்டிக்கொண்டே வருகின்றது ஒவ்வொரு காலகட்டத்திலும்.

பிரமிட்டுகளை எகிப்த்தியர்கள் உருவாக்குகின்றார்கள் என்று வாசித்தால் மட்டும் போதுமா? ஏன் கட்டிட நினைத்தார்கள்? கட்ட நினைத்த போது அவர்கள் முன்னர் இருந்த சவால்கள் என்ன? இந்த கேள்விகள் முக்கியமாகின்றது. இது கணித முன்னேற்றங்களுக்கு மட்டுமல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளை வாசிக்கும் போதும் எழ வேண்டும்.

பையின் மதிப்பினை மதிப்பிட என்ன முறைகளை எல்லாம் கையாண்டார்கள்? அந்த அந்த காலகட்டத்தில் இருந்த வளர்ச்சிகள் என்ன என்று கதை வடிவில் அவர்கள் கேட்கும் போது பை பற்றிய விஷயமும் ஆழமாக பதியும். (இன்று 22/7 - ஆரம்பத்தில் இதுவும் பையின் தோராயமான மதிப்பு என்று கருதப்பட்டது).

வரலாற்றினை படிக்கும் போது நிறைய கேள்விகள் எழும், எழனும். இந்தியா கணிதத்தில் சளைத்தவர்கள் அல்ல, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார்கள் ஆனாலும் வழி நெடுகிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே கணிதவியளாலர்கள் அறியப்படுகின்றார்கள்? ஏன்? சமகாலத்தில் நாம் என்ன பங்களிக்கின்றோம்? என்ன முன்னேற்றங்கள் கண்டுள்ளோம்? எதை நோக்கிச் செல்கின்றது? அவர்கள் தற்காலத்தில் சந்திக்கும் சவால்கள் என்ன? என்ற கேள்விகள் எழுந்தால் அதுவே கணித வரலாறு சரியாக கற்பிக்கப்படுகின்றது என்பதற்கான அர்த்தம்.

நமக்கான சவால் என்பது கணித வரலாற்றினை ஒரு சோர்வான பாடமாக்காமல் எப்படி சுவாரஸ்யமாக இத்தனை விஷயங்களையும் உள்ளடக்கி கணிதம் ஒரு சுவையான பாடமாக மாற்றப்போகின்றோம் என்பதில் இருக்கின்றது.

பாடதிட்டம் முழுதையும் சொல்லிக்கொடுத்துவிட முடியாது ஆனால் ஒரு வெளியை, ஒரு சன்னலை திறந்துவிட வேண்டும். அங்கிருந்து மாணவன் தனக்கான வெளியை தேர்வு செய்துகொள்வான்.

- விழியன்