திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம் மெய்யுணர்தல்
குறள் 355:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
விளக்கம்:
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
பொன்மொழி :
1) மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி
2) கல்வி ஆபரணமல்ல, ஆடை....
பழமொழி :
Art is long and life is shot
கல்வி கரையில, கற்பவர் நாள் சில
பொது அறிவு :
இந்திய ஓவியத்தின் தந்தை யார் ?
விடை : நந்தலால் போஸ்
முக்கியச் செய்திகள் :
மாநிலச்செய்தி:
நம் மாணவர்களின் கல்விக்காக செய்யும் திட்டங்களை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்நாட்டுச்செய்தி:
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து
உலகச்செய்தி:
நாளை டிரம்ப்புடன் சந்திப்பு; அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு
விளையாட்டுச்செய்தி:
துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் போட்டிகளின் 2வது சுற்றுப் போட்டிகளில் நேற்று மாரின் சிலிக், பெலிக்ஸ் அகர் அலியாஸிமே அபார வெற்றி பெற்றனர்...