மதங்களிடையே வெறுப்புணர்வும்
சமூகத்தில் அதிக ஏற்றதாழ்வும்
உச்சபட்ச
கலாச்சார குழப்பங்களும் நிலவிய சூழலில் மானுடத்தின் அவசியம் கருதி மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீதத்தர் எடுத்த ஓர் அவதாரமே ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ்.
சமூகத்தில் அதிக ஏற்றதாழ்வும்
உச்சபட்ச
கலாச்சார குழப்பங்களும் நிலவிய சூழலில் மானுடத்தின் அவசியம் கருதி மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீதத்தர் எடுத்த ஓர் அவதாரமே ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ்.
ஆம்...
ஆன்ம சாதகர்கள் கூட வழியறியாது திகைத்து நின்ற அந்த காலத்தில் ஸ்ரீ தத்தரின் பிறந்த நாளான 22 டிசம்பர் 1817 ல், அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் லட்வந்தி கிராமத்தில் அவர் பிறந்தார். பெற்றோர் அவருக்கு மாணிக் என்று பெயரிட்டனர்.
ஆன்ம சாதகர்கள் கூட வழியறியாது திகைத்து நின்ற அந்த காலத்தில் ஸ்ரீ தத்தரின் பிறந்த நாளான 22 டிசம்பர் 1817 ல், அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் லட்வந்தி கிராமத்தில் அவர் பிறந்தார். பெற்றோர் அவருக்கு மாணிக் என்று பெயரிட்டனர்.
ஊரே கொஞ்சும் குழந்தையாக, குறும்புகள் நிறைந்து, இயற்கைக்கு நெருக்கமாய் மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள் மேல் நேசம் கொண்டு வளர்ந்தான் குழந்தை.
அதே சமயம் தம் தெய்வீகத் தன்மையை அவ்வப்போது வெளிக்காட்டவும் தவறவில்லை. தினம் உடன் வந்து விளையாடும் நண்பன் கோவிந்தா சில நாட்களாக வராதது கண்டு, அவன் வீட்டுக்கு மாணிக் செல்ல, கோவிந்தா சிறிது காலம் காய்ச்சலால் அவதிப்பட்டு அன்றுதான் இறந்ததை அறிந்தான் சிறுவன் மாணிக்.
பெருந்துயரால் அவதிப்பட்ட நண்பனின் தாயாரிடம் 'கவலை வேண்டாம் அம்மா. கோவிந்தா உயிரோடுதான் இருக்கிறான். அவனைக் கூப்பிடுங்கள்' என்று வலியுறுத்தி அழைக்கச்செய்ய, கோவிந்தா உயிர்மீண்டான். இச்செய்தி வேகமாக பரவி விரைவில் மாணிக் பற்றி அந்த பகுதி முழுதும் மக்கள் வியப்போடு பேசத்துவங்கினர்.
எவ்விதக் கவலையும் இன்றி விளையாட்டாய் குழந்தையின் வாழ்க்கை இருப்பதைக் கண்டு அக்கறை கொண்ட பெற்றோர் அவருக்கு உபநயனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அவ்விழாவில் எல்லாம் அறிந்த குழந்தை காயத்ரி மந்திரம் உட்பட அனைத்து மந்திரங்களையும் யாருடைய துணையும் இன்றி மிக சரளமாக உச்சரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.
பள்ளிக்கு சரியாக செல்லாமல் காடுகளில் திரிந்த மாணிக் வேலைக்கு அனுப்பப்பட்டால் சரியாகி விடுவார் என்று கணக்கு போட்ட உறவினர் அவரை ஒரு வேலையில் சேர்த்தனர். ஆனால் இயற்கையோடு முழுதும் ஒன்றிய, பாதையற்ற பாதையில் அவரது பயணம் முழுவீச்சில் அங்குதான் துவங்கியது.
பணியிடத்தில் இயற்கைக்கு மிக நெருக்கமான சூழல் நிலவ, மாணிக் தம் அகத்துள் வெகுவாய் ஆழ்ந்துபோனார். இயற்கையோடு பூரணாமாய் ஒன்றினார். உலகமும், ஒவ்வொரு உயிரும், பொருளும் எல்லாம் ஒன்றாய், இறையம்சமாய் உணர்ந்தார்.
யாருக்கும் சொல்லாமல் வேறுவேறு இடங்களுக்கு செல்லத்துவங்கினார். செல்லும் இடமெல்லாம் அவர் மரியாதையுடன் நடத்தப்பட்டார். எனினும் பெரும்பாலும் தனிமையில் தவம் செய்வதையே அவர் நாடினார்.
மகனின் நடவடிக்கைகள் குறித்து கலக்கம் கொண்ட பெற்றோரிடம் ஒருநாள், "குழந்தை வேண்டும் என்ற உங்கள் வேண்டுதலை ஏற்று ஸ்ரீ தத்தர் அருளால் நான் உஙகளுக்கு மகனாய் பிறந்தேன். உங்களோடு எனது பணி முடிந்தது. எனக்கிடப்பட்ட பிற பணிகளை நிறைவேற்ற நான் போகவேண்டும். என்னை அனுமதியுங்கள். உங்கள் தேவையின் போது என்னை நினைத்தால் உங்களிடம் உடனே வருவேன்" என்று விபரம் கூறி, வாக்களித்து புறப்பட்டார் மாணிக் பிரபு.
தவம், யாத்திரை என்று நாட்கள் நகர்ந்தன. ஸ்ரீ தத்தர் இருந்த கிர்னார், கங்கோத்ரி, ஹரித்வார், கேதார்நாத், வாரணாசி, திருப்பதி, கனகாபூர் என தம் யாத்திரையை தொடர்ந்த பிரபு, தம்மை நாடி வந்த ஆயிரக்கணக்க்கான அன்பர்களுக்கு தம் ஆசியையும், அவர்கள் கேட்ட வரங்களையும் வாரிவழங்கினார்.
ஒருமுறை தமது அடியார் சிலருடன் சென்று கொண்டிருக்கையில் இரு நதிகள் சேரும் சங்கமத்தில் ஓர் அத்தி மரத்தடியில் அமர்ந்து தவமியற்றினார். அப்போது தமது அமைப்பை நிறுவ அவ்விடமே உகந்தது எனக்கண்டார். அதுவே இன்று மாணிக் நகர் என்றழைக்கப்படும் ஆன்மீகத் தலமாகும். அப்போதில் இருந்து குறிப்பாக இந்துக்களையும் முகம்மதியரையும் சம அளவில் ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது.
முதலில் அங்கு பிரபுவுக்கு ஒரு குடிலும், அதில் அடியவர்களுக்கு பிரபு தரிசனம் வழங்க வசதியாக அவருக்கு ஓர் ஆசனமும் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் நாட்டின் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சந்தேகம், பிரச்சனைகள் தீர்க்க வந்தனர். சிலரிடம் கேட்டும், பலரிடம் கேட்காமலேயும் பிரபு அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். அடியவர்கள் அனைவரையும் சமமாக நடத்திய பிரபு, 'நம்பிக்கை' என்ற ஒரே தட்சிணையை தவிர வேறெதையும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.
தம் அவதார நோக்கம் நிறைவேறியதையும், தம் பூவுலக நாட்கள் முடிவுக்கு வருவதையும் உணர்ந்த பிரபு, தம் அடியவர்கள் சிலரை மட்டும் அழைத்து தாம் புறப்பட இருப்பதையும், அதற்கு பின் அவர்கள் எவ்வாறு தம் பணியை தொடர வேண்டும் என்பதையும் விளக்கினார்.
சிலநாட்களில் பிரபுவின் முதுகில் ஒரு கட்டி ஏற்பட்டது. தம் சமாதி இடத்தை தேர்வு செய்த பிரபு அங்கு சமாதிக்கான பள்ளம் தோண்ட செய்தார். எனினும் விஷயம் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டது. அந்த வருடத்துக்கான ஸ்ரீதத்த ஜெயந்தியும் வந்தது. அதேனாள் முகம்மதியருக்கும் ஒரு முக்கிய நாளாய் அமைந்தது. இருமதத்திலும் ஏராளமானோர் மாணிக் நகரில் கூடினர். பிரபுவுக்கு ஏற்பட்ட கட்டியும் துரிதமாக பெரிதாகி, வலிமிகுந்தது. அடுத்த நாள் ஏகாதசி, கீதை ஜெயந்தி என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள். 29.11.1865... பிரபு தம் சகோதரரின் இரு மகன்களை அழைத்து தமது ஆன்ம வாரிசுகளாக்கி, 'ஸ்ரீ மாணிக் பிரபு சம்பிரதாயம்: என்னும் பாரம்பரியத்தை உருவாக்கினார்.
பின்னர் பிரபு தம் சமாதிக்கு குழி வெட்டப்பட்ட குடிலை நோக்கி நடந்தார். வழக்கத்தை விட அவர் முகம் பேரொளி வீச, ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தார் பிரபு. பள்ளத்துக்குள் பத்மாசனத்தில் அமர்ந்த பிரபு, யோகமுறைப்படி மஹாசமாதி அடைந்தார். நெருங்கிய அடியவர்களால் அந்த குழி மெல்ல மூடப்பட்டது.
அவர் மீது நம்பிக்கை உள்ள அடியவர்களுக்கு இன்றும், என்றும் துணை நின்று, வரமளித்து வழிகாட்டுகிறார்.