Tuesday, 10 April 2018

கேள்வி பதில்கள் - சகஜ மார்க்கம்

*கே: திருமணத்திற்குப் பிறகும் கூட நாம் ஏன் காதலிக்க வேண்டும்?
ப: மனிதர்கள் அன்பை-காதலை செயற்கையான விதத்தில் அளவுக்கு மீறி உணர்ச்சிமிக்கதாக மாற்றி விட்டார்கள் என்று நான் யூகிக்கிறேன். இதன் உடன் விளைவாகத்தான் திருமணத்திற்கு முன்பு நம்மால் காதலிக்க முடிகிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு காதலிக்க முடிவதில்லை. நாம் யாரை நேசித்தாக வேண்டுமோ அவரை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி இந்த முக்கியமான விஷயத்தில் கட்டுப்பாடற்றுப் போகக் கூடாது. இதன் பொருள் என்னவென்றால் நமக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யாரோ, அவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அதாவது மேலை நாடுகள் போல காதல் வழியினால் இருந்தாலும், கீழைநாடுகள் போல பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவரை நேசிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வெண்டும் என்பதேயாகும்.

கே: அறிவும் செயலும் எவ்வாறு சம்பநப்பட்டுள்ளன?
ப: செயல் (கர்மா) என்பது ஜீவிதத்தின் வெளித்தோன்றும் வடிவத்தின் பயன்பாட்டுப் பகுதி அல்லது நடைமுறைப் பகுதியாக இருக்கிறது. அறிவு அதன் இன்றியமையாத அம்சமாக இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் மனித இதயமாகிய நடுப்பகுதியான இணைப்புடன் சேர்ந்து இணைந்துள்ளன. இந்த இதயம் தான் தனது ஆற்றலை ஜீவிதத்தின் ஸ்தூலமான (திடத்தன்மை உடைய) பகுதிகளுக்கு அனுப்பி, அங்கே செய்யப்படவேண்டிய மற்றும் பயிற்சி செய்யப்பட வேண்டிய செயலுக்குக் காரணமாகிறது. அது இவ்விதமாக தன் ஜீவிதத்தின் வெளிப்பாட்டுக்கு (தன் இருப்பை வெளியே தெரிவிப்பதற்கு) ஏற்பாடு செய்கிறது.

.கே: ஆசைகளை நிறைவேற்றும் படி எது ஒருவரைக் கட்டாயப்படுத்துகிறது?
ப: நாம் மனம் மற்றும் அறிவு சார்ந்த செயல்திறன்களை அடையப் பெற்றிருக்கிறோம். அவை அனைத்தும் செயல் வேகத்துடன் இயங்குகின்றன. நம் மனம் உடம்பின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. நாம் பார்க்கிறோம், ஒலிகளைக் கேட்கிறோம், உணர்கிறோம், பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். நாம் அவற்றை விரும்பவோ வெறுக்கவோ ஆரம்பிக்கிறோம். இப்படி ஆசைகள் படிப்படியாக நமக்குள் நுழையத் துவங்குகின்றன. அவை நம் செயல்களை பாதிக்கின்றன. இந்த வளையங்கள் பல மடங்காகப் பெருகிக் கொண்டே போகின்றன. அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நம்மை நாம் சிரமப்படுத்துகிறோம்.

கே: துன்பங்கள் எவ்வாறு நம் வாழ்க்கைகுள் வந்தன?
ப: பிரபஞ்ச சிருஷ்டியை உண்டாக்குவதற்காக கடவுளின் சித்தத்தின் ஒரு விளைவாக ஆன்மா உணர்வுறுநிலையை தனது உடைமையாகப் பெற்றுள்ளது. பிரபஞ்ச சிருஷ்டியைப் போலவே ஆன்மாவும் தனது சிறிய சிருஷ்டியை உண்டாக்க ஆரம்பித்தது. தனது சொந்த சிருஷ்டியின் விஷயங்களை தன்னைச் சுற்றிலும் சேகரித்துக் கொண்டது. ஒரு கலக்குதல், ஒரு அசைவு (அதாவது அமைதியின்மை அல்லது இடையூறு) தான் பிரபஞ்ச சிருஷ்டியை உண்டாக்குவதில் முக்கிய அம்சமாக இருந்தது. அதேபோல ஆன்மாவின் சிறிய சிருஷ்டியிலும் கூட அமைதியின்மை, அல்லது இடையூறு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நாமும் கூட சங்கல்பத்தின் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம். நமது இந்த சிருஷ்டியை உருவாக்கி அமைப்பதற்குத் தேவைப்படுகிற அம்சங்களுக்கு அந்த சங்கல்பத்தைக் கொண்டு சக்தி அளிக்கிறோம். அவை நம் முன்னே இன்பம் அல்லது துன்பமாக, நிம்மதி அல்லது துயரமாக அந்த வடிவில் தோன்றுகின்றன. எப்போதும் செயல் வேகத்துடன் இருக்கின்ற மனமும் கூட, ஒன்றின் மீது விருப்பம், இன்னொன்றின் மீது வெறுப்பு என்பதை நமக்குள் சிருஷ்டித்து ஒரு விஷயத்தின் இரண்டு கடைக் கோடிகளையும், (மிதமிஞ்ரிய நிலைகளையும்) நம்முள் அறிமுகப்படுத்துகின்றன. இந்த விதமாகவே துன்பங்கள் நம் ஜீவிதத்திற்குள் வருகின்றன.

*கே: ஆசைகளை நிறைவேற்றும் படி எது ஒருவரைக் கட்டாயப்படுத்துகிறது?
ப: நாம் மனம் மற்றும் அறிவு சார்ந்த செயல்திறன்களை அடையப் பெற்றிருக்கிறோம். அவை அனைத்தும் செயல் வேகத்துடன் இயங்குகின்றன. நம் மனம் உடம்பின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. நாம் பார்க்கிறோம், ஒலிகளைக் கேட்கிறோம், உணர்கிறோம், பல விஷயங்களைப் புரிந்து கொள்கிறோம். நாம் அவற்றை விரும்பவோ வெறுக்கவோ ஆரம்பிக்கிறோம். இப்படி ஆசைகள் படிப்படியாக நமக்குள் நுழையத் துவங்குகின்றன. அவை நம் செயல்களை பாதிக்கின்றன. இந்த வளையங்கள் பல மடங்காகப் பெருகிக் கொண்டே போகின்றன. அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நம்மை நாம் சிரமப்படுத்துகிறோம்.

1610. கே: துன்பங்கள் எவ்வாறு நம் வாழ்க்கைகுள் வந்தன?
ப: பிரபஞ்ச சிருஷ்டியை உண்டாக்குவதற்காக கடவுளின் சித்தத்தின் ஒரு விளைவாக ஆன்மா உணர்வுறுநிலையை தனது உடைமையாகப் பெற்றுள்ளது. பிரபஞ்ச சிருஷ்டியைப் போலவே ஆன்மாவும் தனது சிறிய சிருஷ்டியை உண்டாக்க ஆரம்பித்தது. தனது சொந்த சிருஷ்டியின் விஷயங்களை தன்னைச் சுற்றிலும் சேகரித்துக் கொண்டது. ஒரு கலக்குதல், ஒரு அசைவு (அதாவது அமைதியின்மை அல்லது இடையூறு) தான் பிரபஞ்ச சிருஷ்டியை உண்டாக்குவதில் முக்கிய அம்சமாக இருந்தது. அதேபோல ஆன்மாவின் சிறிய சிருஷ்டியிலும் கூட அமைதியின்மை, அல்லது இடையூறு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நாமும் கூட சங்கல்பத்தின் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம். நமது இந்த சிருஷ்டியை உருவாக்கி அமைப்பதற்குத் தேவைப்படுகிற அம்சங்களுக்கு அந்த சங்கல்பத்தைக் கொண்டு சக்தி அளிக்கிறோம். அவை நம் முன்னே இன்பம் அல்லது துன்பமாக, நிம்மதி அல்லது துயரமாக அந்த வடிவில் தோன்றுகின்றன. எப்போதும் செயல் வேகத்துடன் இருக்கின்ற மனமும் கூட, ஒன்றின் மீது விருப்பம், இன்னொன்றின் மீது வெறுப்பு என்பதை நமக்குள் சிருஷ்டித்து ஒரு விஷயத்தின் இரண்டு கடைக் கோடிகளையும், (மிதமிஞ்ரிய நிலைகளையும்) நம்முள் அறிமுகப்படுத்துகின்றன. இந்த விதமாகவே துன்பங்கள் நம் ஜீவிதத்திற்குள் வருகின்றன.

1605. கே: பாபுஜியின் கருத்தின்படி, அவரது குருத்துவநிலை – மாஸ்டராக விளங்கும் தன்மை – என்பது என்ன?

ப: லட்சியத்திற்கான வழியை நன்கு அறிந்திருப்பதில் தான், தனது குருத்துவ நிலை – அதாவது மாஸ்டராக விளங்கும் தன்மை இருக்கிறது என்று பாபுஜி மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். கண்கள் கட்டப்பட்ட நிலையில் கூட அவர் எத்தனையோ முறை அப்பாதையில் சென்று வந்திருப்பதால், உங்களை அவர் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியும். இப்போது நாம் அனைவரும் அப்படி ஒரு வழிகாட்டியை விரும்புகிறோம். ஆனால் ‘மாஸ்டர்’ என்ற வார்த்தைக்கு நாம் பயப்படுகிறோம்.

1606. கே: கீழ்ப்படிந்து நடப்பது எவ்வாறு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் முக்கியமானதாக இருக்கிறது?

ப: ஞானம், அனுபவம், மற்றும் ஓர் உயர்நிலை எய்துதல் சம்பந்தமான ஆன்மிகப் பயிற்சி முறைகளைப் பொறுத்தவரை அதன் முதல் போதனையாக இருப்பது கீழ்ப்படிந்து நடப்பதேயாகும். கீழ்ப்படிந்து நடத்தல் என்ற இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யாமல் எந்த போதனையும் இருக்க முடியாது. கீழ்ப்படிந்து நடப்பது மாணவன் மட்டுமல்ல; ஆசிரியரும் கூட கீழ்ப்படிந்து நடக்கிறார். ஆசிரியர் வேறு ஒருவருக்கு தன் கடமை உணர்வுக்காக, தன் அறிவை மற்றவர்களுக்குக் கடத்த வேண்டிய தேவைக்காக, தன் சாதனைகளுக்காகக் கீழ்ப்படிந்து நடக்கிறார். தானறிந்ததை இடம் மாற்றி அனுப்புவதற்கு தனது உள்ளார்ந்த உணர்வுத் தூண்டுதலுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் அது பெருந்தன்மை (தாராள குணம்), கனிவு, இவையனைத்துக்கும் மேலாக மனிதகுலத்துக்காக அன்பு என்ற விதத்தில், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதைச் செய்ய அவரைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு உணர்வுத் தூண்டுதலே ஆகும். அது தவிர அவருக்கு வேறு கட்டாயம் ஏதுமில்லை.

1599.கே: அப்யாசத்தை-ஆன்மீகப் பயிற்சியை எவ்வாறு செய்ய வேண்டும்?
       ப: பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்யுங்கள் என்று உங்களை வற்புறுத்துவேன். ஏனெனில் இது குறுகிய கால யோகப் பயிற்சி அல்ல. ஒரு ஆயுட்காலப் பயிற்சி. அப்யாசிகள் ஆரம்பத்தில் எதையும்  உணராமல் இருப்பதற்குக் காரணங்கள் உள்ளன. சில சமயங்களில் அதற்கு பல வருடங்கள் கூட ஆகலாம். ஆகையால் பொறுமையாக இருப்பது மிக அவசியம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால்  உள்முக மாற்றங்கள் மிகவும் நுட்பமானவை. ஒருவர் போதுமான அளவு கூருணர்வுத்திறனை வளர்த்துக் கொள்ளாவிட்டால் அந்த மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போகின்றன மற்றொரு பொதுவான காரணம் என்னவெனில் தனக்குள் என்ன பார்க்க வேண்டும் என்பது அப்யாசிகளுக்குத் தெரியாமல் இருக்கிறது. உதாரணமாக உடற்பயிற்சிகளில் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்பது அதாவது அதிக எடை குறைவது இடுப்பில் அதிகப்படியான சதை குறைவது மற்றும் இது போன்றவை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆன்மீக வழிமுறையில் இவ்வாறு மதிப்பிட்டுக் கணக்கிடுவது சாத்தியமல்ல.
1600.கே:பலத்தின் நிரூபணம் பலத்தை வெளிப்படுத்துவதில் இல்லை.எவ்வாறு?
ப: இல்லை, பலத்தின்  நிரூபணம் பலத்தை  வெளிப்படுத்துவதில் பயன்படுத்துவதில் இல்லை. பாபுஜி கூறியுள்ளார்:” பலம் எப்போதுமே. இருக்கவேண்டும், ஆனால் ஒரு போதும் பயன்படுத்தப்படக் கூடாது. அறிவைப்போல. நாம் எப்போதுமே அறிவைப் பயன் படுத்துவதில்லை. பார்வைக்கு  புத்தகங்களின் நூலகம் இருக்கிறது.

1597.கே: நம் தரிசனம் எங்கே திசை திரும்பி இருக்க வேண்டும்?
       ப: பாபுஜி மகரஜ்:யாருக்குக் கண்கள் உள்ளனவோ அவர் உலகியல் வாழ்க்கை என்ற மேலோட்டமான திரையின் பின்னே என்ன இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.என்று எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பார். எனவே அந்த பார்வைத்திறனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்......தரிசனம் என்றால் வெறுமே பார்ப்பது அல்ல. தரிசனம் என்றால் உட்புறமாக அங்கே இருக்கின்ற ஜீவனின் தரத்தினை கவனித்துப் பார்ப்பது என்று பொருள்.

1598.கே: தனது அன்றாட வழக்கமான காரியங்களைச் செய்யும்போது ஒருவர் என்ன நினைக்க வேண்டும்?
       ப: அனைத்தையும் மாஸ்டருக்கே அர்ப்பணித்துவிட்டு உங்கள் அன்றாட வாழ்வின் வழக்கமான காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால் காலப் போக்கில் அது உங்களுக்கு எவ்வளவு நன்மை செய்யும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.ஏதாவ்து ஒரு செயலைச் செய்யும் போது அல்லது எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை நீங்கள் உங்களுக்காகச் செய்யவில்லை உங்கள் மாஸ்டருக்காகச் செய்கிறீர்கள் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் மாஸ்டரே அதைத் தனக்காகச் செய்கிறார் என்று நினையுங்கள்.

இன்றைய கேள்வி பதில்கள்

04.08.2018 சனிக்கிழமை

1595.கே:’நிஷ்காம உபாசனா’ என்பது என்ன?
       ப: பகவத் கீதையில் கூறபட்டுள்ளவாறு ‘நிஷ்காம உபாசனா’ என்ற கோட்பாடு (ஆசையில்லாத பக்தி என்பது) எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் பக்தியுடன் இருப்பது பற்றி முக்கியத்துவம் அளிக்கிறது. எந்த ஒரு உலகியல் குறிக்கோளின் மீதும் நம் பார்வையை நிலை நிறுத்தாமல் அல்லது நம் ஆசைகளை திருப்திப் படுத்திக் கொள்வதில் அக்கறை கொள்ளாமல் நாம் பக்தியுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். ஆன்மீகப் பார்வையில் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுக்கு முற்றிலும் இன்றியமையாததாகிய நமது வாழ்க்கையின் லட்சியத்தின் மீது நம் மனத்தை நிலை நிறுத்துவதை அது தடை செய்வதில்லை.

1596.கே: வாழ்க்கையின் லட்சியம் என்ன?
      ப: நாம் கடைசியாக எங்கே சென்றடைகிறோமோ அந்தப்புள்ளி என்பதன்றி வாழ்க்கையின் லட்சியம் என்பது வேறல்ல. வேறு வார்த்தைகளில் சொன்னால் நாம் கடைசியாக எங்கே திரும்பிச் செல்ல வேண்டுமோ அந்த நமது சொந்த நாட்டுக்கு அல்லது நமது இப்போதைய திடத்தன்மை பெற்ற ஜீவிதம் ,முதலில் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு போக விரும்பும் ஒரு ஞாபகம் ஆகும்.

இன்றைய கேள்வி பதில்கள்

03.08.2018 வெள்ளிக்கிழமை

1593.:கே:மனிதனாக ஆகும் செய்ல்முறை எவ்வாறு மற்றும் எப்பொழுது துவங்குகிறது?
ப: ஆன்மிகம் வெளிப்புறத்தில் இருந்து அல்லது அறிவுரீதியாக உங்களை மாற்றுகின்ற கல்வியில் இருந்து வேறுபட்டதாக, தனி மனிதர்கள் உட்புறத்தில் இருந்து மாறுவதை உறுதிப்படுத்துகிற ஒரு வழியாக இருக்கிறது. ஆகவே மனிதர்களாகப் பிறந்தவர்கள் உட்புறத்தில் இருந்து மாற முடிபவர்களாக இருக்குபோது அதன் முதல்படி மனிதனாக ஆதல் ஆகும்.

1594.கே: மோட்சம் மற்றும் முக்தி  இர்ண்டிற்கும் இடையே உள்ள வேறு பாட்டினை மாஸ்டர் எவ்வாறு விளக்குகிறார்?
      ப:துன்பம் மற்றும் வேதனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமே நம் முன்னே இருக்கும் பிரச்னையல்ல. துன்பம் மற்றும் வேதனகளின் முடிவான காரணமாகிய பந்தத்தில் இருந்து விடுபடுவதேயாகும். பந்தத்தில் இருந்து விடுதலை பெறுவதே முக்தி நிலை. அது மோட்சத்தில் இருந்து வேறுபட்டது. மோட்சம் மறுபிறவி என்னும் செயல்முறையின் முடிவாக இருப்பதில்லை. மோட்சம் என்பது அந்த சுழற்சியில் தற்காலிகமான ஒரு நிறுத்தம் மட்டுமே ஆகும். பிறப்பு,இறப்பு செயல்முறையில் அது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஒரு நிலை ஆகும். அதன் பிறகு நாம் மீண்டும் பெள்தீக உடம்பை ஏற்றுக் கொள்கிறோம். நாம் முக்தி நிலை எய்தியிருக்கும்  போது மட்டுமே மறுபிறவி என்ற முடிவில்லாத சுழற்சி முடிவடைகிறது. அதுவே நம் துன்பங்கள் மற்றும் வேதனைகளின் முடிவாகும்.

1385. கே: பிரார்த்தனை செய்துவிட்டு காத்திருங்கள்- விளக்குக.

       ப: பாபுஜி மஹராஜ் கூறியது போல “ உண்மையான பிரார்த்தனை என்பது கேட்பது அல்ல.ஆனால் சாத்தியமான அளவு நுட்பமாக பிரச்னையை  முன்வைத்து விட்டு காத்திருத்தலே ஆகும்.அவர் விரும்பினால் அதை தீர்த்து வைப்பார்.அவர் முடித்து வைக்கா விட்டால் நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம்.இப்போது நிறைய பேர் ஒரு முறை பிரார்த்த்தனை செய்துவிட்டு “ நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.” என்று சொல்கிறார்கள்.ஆமாம். நீங்கள் ஒருமுறை பிரார்த்தனை செய்துவிட்டு, எதுவுமே நடக்க வில்லை என்றால் நீங்கள் மீண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

1386. கே:அவருடைய விருப்பம் எவ்வாறு நிறைவேறுகிறது?

      ப: எப்போதும் போல நான் உங்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் அவருடைய விருப்பம்தான் நிறைவேறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பிரார்த்தனை பிரச்னையை அவர் முன் வைக்கிறது.அதற்கான எதிர்வினை எல்லாருடைய நன்மைக்காகவும் அவர் எவ்வாறு விரும்புகிறாரோ அவ்வாறு இருக்கிறது. அத்தோடு கூட அவரவருடைய சம்ஸ்காரமும் கூட கையாளப் பட வேண்டியதாக இருக்கிறது.
இன்றைய கேள்வி பதில்கள்
15.04.2018 ஞாயிற்றுக்கிழமை

1397.கே: பக்தியுடைய இதயத்தின் அழைப்புக்கிசைந்து செயல்படுவது குருவின் பணியில் உள்ளடங்கியது என்பது எவ்வாறு?
      ப: ஒரு உண்மையான குருவின் பணிகளில் ஒன்று பக்தியுடைய ஒரு இதயத்தின் அழைப்புக்காகக் காத்திருப்பது மற்றும் அதற்கிசைந்து செயல்படுவது என்று தோன்றுகிறது.இந்த விஷயத்தில் இன்னும் ஆழ்ந்து சென்றால் இதுவும் கூட ஒரு மேலோட்டமான பார்வை தான் எனக் காணலாம். உண்மையில் என்ன நடக்கிறது என்றால்,அவரே கூறுவது போல ஆன்மீகத்தன்மையுடைய தொடர்ச்சியான வேலையினால் அவர் ‘களத்தைத் தயார் செய்கிறார்’.ஏற்புத் தன்மையுடைய ஆன்மாக்கள் அவரை நோக்கிக் கவர்ந்து இழுக்கப் படுகின்றன.

1398.கே: சகஜமர்க்கம் நோய்களைக் குணப் படுத்துமா?
       ப: அது செய்யக்கூடாத,செய்யும் என்று கருதக்கூடாத விஷயங்களை சகஜமார்க்கம் செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது நோய்களைக் குணப்படுத்துவதற்கானது அல்ல. ஆயினும் நமது சரீர அமைப்பு சுத்திகரிக்கப் படும்போது அதன் பலனாக உடல் நலம் கட்டாயம் உண்டாக வேண்டும். ஆனால் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது போல அது குணமாக்குதல் அல்ல.
இன்றைய கேள்வி பதில்கள்

🙏

1577.கே : தர்மம் என்பது என்ன?
       ப:  தர்மம் என்பது என்ன? ஒரு விதத்தில் அது பிரபஞ்சத்தோடு நீங்கள் ஒத்திசைவுடன், இணக்கத்துடன் இருக்கின்ற ஜீவிதமாகும்.  இதன் பொருள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் என்ன எடுத்துக் கொள்கிறீர்களோ அதைத் திருப்பிக் கொடுப்பதாகும். மற்றவர்களிடமிருந்து நீங்கள் என்ன எடுத்துக் கொள்கிறீர்களோ அதைத் திருப்பிக் கொடுப்பதாகும்..நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்களோ அதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதாகும்.

1578.கே: பரப் பிரம்மம் என்பதைப் பற்றி பாபுஜி எவ்வாறு விவரிக்கிறார்?
       ப: கடவுளைப் பற்றி பல்வேறு விதமான சிந்தனைகள் உள்ளன. தங்கள் சக்திக்கும் புரிந்து கொள்ளும் திறனுக்கும் ஏற்றவாறு மக்கள் அவரை பல விதமாகப் பார்க்கிறார்கள்.  கடவுளைப் பற்றி  மிகவும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து அவர் நித்தியமான சக்தியாக இருப்பவர் என்பதேயாகும். ஆனால் அவரைப் பற்றிய தத்துவ ஞானப் பார்வை. இதையும் கடந்து அப்பால் சென்று நிர்க்குணப் பிரம்மா அல்லது இன்னதென்று நிச்சயிக்க இயலாத முழு முதற்பொருள் என்ற கருத்தைச் சேர்த்துக் கொள்கிறது. அது பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகள் அனைத்திற்கும் மேலானதாக இருக்கிறது. இதுவே அனைத்துக்கும் ஆதிகாரணமாக, ஜீவிதத்தின் அடிப்படையாக, பிரபஞ்சப் படைப்பு முழுவதற்கும் அதீத செயல்துடிப்புடைய மையமாக அல்லது முழுமுதலாகிய அடித்தளமாக இருக்கிறது. இதுவே பரப்ரம்மம் என்றும் கூறப்படுகிறது.

Monday, 9 April 2018

டெல்லியை வியக்க வைத்த தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா!

டெல்லியை வியக்க வைத்த தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா!
- April 09, 2018
டெல்லியில் தேசிய அளவில் நடந்த கருத்தரங்கில் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா முன்வைத்த அசத்தலான யோசனைகள், அரசுக்கான பரிந்துரைகளாக மாறியிருக்கிறது
டெல்லியில் தேசிய அளவில் கல்வியாளர்கள், கல்வி உயரதிகாரிகள் கலந்துகொண்ட கருத்தரங்கில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அசத்தலான யோசனைகளை முன்வைத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியா.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், தேவர்கண்டநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியா, 'அரசுப் பள்ளிகள் எந்த மூலையில் இருந்தாலும் நமக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்து ஸ்பான்ஸர்கள் மூலமே பள்ளியையும் மாணவர்களையும் மேம்படுத்த முடியும்' என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
டெல்லியில் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய இரு நாள்களில் 'அரசு பள்ளிகளை அடையாளப்படுத்துதல்' (Branding of Government schools) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கின் நோக்கங்கள்:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துதல்; தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்; நிதி ஒதுக்கீடு மேம்பாடு; ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்துதல்; பள்ளிகளையும் சமூகத்தையும் ஒருங்கிணைத்தல்; பள்ளிகளையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்தல் மற்றும் பள்ளிகளுடன் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல்.
நாடு முழுவதிலும் உள்ள மத்திய - மாநிலக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் கல்வி பணியாற்றும் தொண்டு நிறுவனங்களிலிருந்து 74 கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த 29 கட்டுரைகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டன.
இவற்றில் அதிகாரிகளையும் கல்வியாளர்களையும் வெகுவாக கவனம் ஈர்த்த கட்டுரைகளில் ஒன்றுதான், தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டு சமர்ப்பித்த இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியாவின் கட்டுரை.
ஆசிரியர்கள், நிதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மட்டும் சார்ந்திருக்காமல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முன்முயற்சிகள் குறித்து விரிவாக அந்தக் கட்டுரையில் அலசியிருந்தார் ஆசிரியர் யோகப்பிரியா. இவர் முன்வைத்த யோசனைகள் அனைத்துமே தன் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆதாரபூர்வமாகக் காட்டப்பட்டது என்பதால் கூடுதல் கவனம் கிடைத்தது.
டெல்லி கருத்தரங்கு
தனது கட்டுரை மற்றும் முன்முயற்சிகள் குறித்து ஆசிரியர் யோகப்பிரியா கூறும்போது,
"அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, நிதிநிலை, ஆசிரியர்கள் குறைவு போன்றவற்றை முன்னேற்ற அரசை மட்டும் சார்ந்து இருக்காமல் நாம் (ஆசிரியர்கள்) என்னென்ன முன்னெடுப்புகளை செய்யலாம் என்பதை ஏற்கனவே நாங்கள் எங்களுடைய பள்ளியில் பிறரது உதவியுடன் என்னென்ன மாற்றங்களை செய்தோம் என்பதை விளக்கினேன்."
சமூக வலைதளங்களின் மூலம் பிற ஆசிரியர்கள் உள்கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் என்பதையும், சி.எஸ்.ஆர். (CSR) மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போன்ற திட்டங்களை அரசின் அனுமதியுடன் நாம் எவ்வாறு பள்ளிகளில் ஏற்படுத்தலாம் என்பதை விவரித்தேன். இந்த அனைத்து முயற்சிகளையும் பற்றி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தேன்" என்றார்.
ஆசிரியர் யோகப்பிரியா சுட்டிக்காட்டிய முன்முயற்சிகளான சி.எஸ்.ஆர். மற்றும் இதர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பள்ளியை மேம்படுத்துவது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கம் அமைப்பது, மாணவர்களின் திறமைகளை செய்திதாள், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் பகிர்தல் முதலான கருத்துகளை கருத்தரங்கின் நிறைவில் அரசுக்கு வழங்கப்படும் பரிந்துரைகளில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவிலான இந்த முக்கியக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒரே இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியா மட்டுமே. இவரது பரிந்துரைகளுக்கு கருத்தரங்கிலேயே பாராட்டுகள் குவிந்தன.
தனது அனுபவத்தைப் பகிர்ந்தவர்,
"எஸ்.சி.இ.ஆர்.டி., என்.சி.இ.ஆர்.டி, ஜே.என்.யூ போன்ற மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ஓர் இடைநிலை ஆசிரியராக பங்கேற்றதே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. எனது பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விவரித்தபோது பலரும் தனிப்பட்ட முறையிலும் பாராட்டினர். கர்நாடகாவில் இருந்து வந்திருந்த இணை இயக்குநர் ஒருவர் என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, தொடர்ந்து ஆலோசனைகள் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது மறக்க முடியாதது. என்.சி.இ.ஆர்.டி.க்காக பணிபுரிந்த கோயல் எனும் பேராசிரியர் சாக்லெட் தந்து பாராட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது.
கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருமே கருத்துகளை மட்டுமே முன்வைத்தனர். நானோ என் பள்ளியில் செய்து காட்டியதை எடுத்துச் சொன்னேன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை அவர்கள் கண்முன் காட்டினேன். தமிழகத்தில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளையும் முன்னுதாரணமாகச் சொன்னேன்.
இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு நம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் நம்மிடம் இருக்கிறது. தமிழக அரசாணையே இதற்காகப் போடப்பட்டுள்ளது. ஆனால், இது பெரும்பாலான ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியாது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன்.
"எனது யோசனைகள் பலவும் அரசுக்குப் பரிந்துரைகளாகச் செல்வதில் மகிழ்ச்சி. இது என் பள்ளிக்கும், என் சக ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறேன்," என்று நெகிழ்கிறார் ஆசிரியர் யோகப்பிரியா.
பள்ளி மாணவர்களுக்கு உறுதுணைபுரிந்த கல்லூரி மாணவர்கள்
அப்படி என்னதான் பள்ளிக்குச் செய்தார்?
* உள்ளூர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை அணுகினார். பள்ளிக்கு ரூ.5,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் கிடைத்தன.
* உள்ளூரிலே பெரிய பாத்திரக் கடையை அணுகினார். பள்ளிக்கு ரூ.25,000 மதிப்பிலான டேபிள்களும் பெஞ்சுகளும் கிடைத்தன.
* தான் பயின்ற மத்தியப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை மாணவர்களை அணுகினார். இவரது மாணவர்களுக்கு ஷூக்களும், சாக்ஸுகளும் கிடைத்தன. இவற்றின் மதிப்பு ரூ.20,000.
* இவர் மட்டும் அல்ல; இவர் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் உள்பட அனைத்து ஆசிரியர்களுமே உள்ளூரில் ஸ்பான்சர்களை நாடினர். இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.40,000 மதிப்பிலான விளையாட்டு சீருடை, உபகரணங்கள் கிடைத்தன.
* பள்ளி மூலம் ஸ்பான்ஸர்களை அணுகியதன் விளைவாக மூன்று வகுப்பறைகளுக்கு டைல்ஸ் போடப்பட்டுள்ளது.
* உள்ளூர் பிரமுகர் ஒருவரது ரூ.1 லட்சம் நன்கொடை மூலம் பள்ளியில் மேடை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
* ஓ.என்.ஜி.சி.யை அணுகி ரூ.70,000 செலவில் போர்வெல் போட்டு தண்ணீர் வசதி நிறைவாகக் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
பள்ளியில்...
இந்தப் பட்டியல் இன்னும் நீளும், தன் பள்ளியும் தனது வகுப்பறையும் தன்னிறைவு அடையும் என்று கூறும் ஆசிரியர் யோகப்பிரியா,
"எனது அடுத்த இலக்கு, என் பள்ளியில் மாணவர் சேர்க்கையைக் கூட்ட, பள்ளியில் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்; ஸ்மார்ட் க்ளாஸ்ரூம் அமைக்க வேண்டும்; ஆங்கிலத்தில் என் மாணவர்களை சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் செய்ய பயிற்சிகள் வழங்க வேண்டும்; தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் என் மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்," என்றார் உத்வேகத்துடன்.
மாணவர்களுடன் பள்ளியில் ஆசிரியர் யோகப்பிரியா
சக ஆசிரியர் சமூகத்திடம் சில செய்திகளை முன்வைக்கும்போது,
"சிறப்பாக செயல்படும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்களது புதிய புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். பல்வேறு விதமான போட்டிகளைப் பற்றி அறிந்து, அவற்றில் நம் மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்யவேண்டும். ஏற்கெனவே கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள், அத்தகவல்களை பிற ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டு வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு சமூக வலைதளங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும்," என்றார் ஆசிரியர் யோகப்பிரியா.